search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Profit"

    • 30 சதவீதத்துக்கும் அதிகமாக கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.
    • கடந்த சில நிதி ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட வருமானத்தையும் செலவினங்களையும் ஈடுசெய்ய உதவும்.

    மும்பை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனாலும் இந்திய எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமலேயே உள்ளன. இந்நிலையில் எண்ணை நிறுவனங்களுக்கு இந்த நிதி ஆண்டில் வரிக்கு முந்தைய லாபம் மட்டுமே 3 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக கிரிசில் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சர்வதேச சந்தையில் கடந்த நிதி ஆண்டோடு (2022-23) ஒப்பிடுகையில், இந்த நிதி ஆண்டில் 30 சதவீதத்துக்கும் அதிகமாக கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.

    ஆனால் இந்திய எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதத்துக்கு பிறகு எந்த மாற்றமும் செய்யாமல் அதே விலையில் தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றன.

    இதனால் இந்நிதி ஆண்டில் எண்ணெய் நிறுவனங்களின் வரிக்கு முந்தைய லாபம் ரூ.1 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2022-23ம் நிதி ஆண்டில் இது ரூ.33 ஆயிரம் கோடியாக இருந்தது. எனவே இந்த நிதி ஆண்டில் வரிக்கு முந்தைய லாபம் மட்டுமே 3 மடங்காக அதிகரித்துள்ளது.

    கடந்த 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை எண்ணெய் நிறுவனங்களின் வரிக்கு முந்தைய லாபம் சராசரியாக ரூ.60 ஆயிரம் கோடியாக இருந்தது.

    இந்த அதிக லாபம் எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த சில நிதி ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட வருமானத்தையும் செலவினங்களையும் ஈடுசெய்ய உதவும்.

    எண்ணெய் நிறுவனங்கள் 2 வழிகளில் லாபம் ஈட்டுகின்றன. அவை எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சில்லரை விற்பனை ஆகும். கச்சா எண்ணையின் விலை, அதை சுத்திகரிக்க ஆகும் செலவு ஆகியவற்றுடன் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களின் மொத்த விலையை கழித்தால் வரும் லாபம் எண்ணை நிறுவனங்களுடையது. மேலும் கச்சா எண்ணையை சுத்திகரித்த பின்பு கிடைக்கும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விற்பனை செய்வதன் மூலமும் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் பெறுகின்றன.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பார்களா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    • சீதோசன நிலை காரணமாக நண்டுகள் வரத்து அதிகரிப்பு.
    • நல்ல லாபம் கிடைப்பதால் மீன்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அதிராம்பட்டினம்:

    அதிராம்பட்டினம் கடற்பகுதியை ஒட்டிய கொள்ளுக்காடு பகுதியில் இருந்து ஏராளமான மீனவர்கள் விசைப்படகு மூலமாக கடலுக்குள் சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதிராம்பட்டினம் முதல் மல்லிப்பட்டினம் வரையிலான கடல் பகுதி சேற்று பகுதி என்பதால் இப்பகுதிகளில் கிடைக்கும் கொடுவா மீன், இறால், நண்டு சுவை மிகுந்ததாக இருக்கும்.

    இதனால் இப்பகுதியில் கிடைக்கும் மீன் இறால் நண்டுகளுக்கு மவுசு அதிகம்.

    இந்த நிலையில் கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள நல்ல சீதோசன நிலை காரணமாக நண்டுகள் வரத்து அதிகரிக்கப்பட்டு, அதிக அளவில் கிடைக்கின்றன.

    இந்த நண்டுகளை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் நேரடியாக கொள்முதல் செய்து வருவதால் நல்ல லாபம் கிடைப்பதாக மீன்வர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    இப்பகுதி யில் தினந்தோறும் பல லட்சகணக்கான ரூபாய்க்கு வர்த்தககம் நடைபெறும் நிலையில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமில்லாததால் கொள்முதல் செய்ய வரும் நிறுவனங்கள், பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.

    எனவே கொள்ளுக்காடு ஊராட்சி நிர்வாகம் முறையான சாலை தெருவிளக்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

    • திருவாரூரில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.
    • நன்கு காயவைத்து கொண்டு வந்தால் 30 சதவீதம் வரை கூடுதலாக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    திருவாரூர்

    திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-

    திருவாரூா் மாவட்டத்தை பொருத்தவரையில் திருவாரூர், மன்னார்குடி, வலங்கைமான், மூங்கில்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனா்.

    திருவாரூரில் 3 முறை பருத்தி ஏலம் நடந்துள்ளது. முதல் ஏலத்தின் போது சுமார் ரூ.54 லட்சம் மதிப்பிலும், 2-வது ஏலத்தில் ரூ.1 கோடியே 52 லட்சத்து 87 ஆயிரத்து 514 மதிப்பிலும், நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் ஒரே நாளில் ரூ.2 கோடியே 3 லட்சத்திற்கு ஏலம் போனது.

    அதிகபட்ச விலை நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் அதிபட்சமாக குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 899-க்கும், சராசரியாக ரூ.6 ஆயிரத்து 355-க்கும் ஏலம் போனது. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.4.05 கோடிக்கு பருத்தி ஏலம் விடப்பட்டுள்ளது. பருத்தியை விவசாயிகள் ஈரப்பதமாக கொண்டு வருவதால் குறைந்த விலைக்கே வியாபாரிகள் ஏலம் எடுக்கின்றனர்.

    அதே நிலையில் பருத்தியை நன்கு காயவைத்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்தால் 30 சதவீதம் வரை கூடுதலாக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே விவசாயிகள் பருத்தியை காய வைத்து கொண்டு வந்தால் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி நடைபெற்று வருகிறது
    • இந்த ஆண்டு கடலை சாகுபடியில் எதிர்பார்த்த லாபம் இருக்காது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா புஷ்பவனம், பெரியகுத்தகை ,செம்போடை, தேத்தாகுடி, ஆயக்காரன்புலம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வடகிழக்கு பருவமழை முடியும் தருவாயில் ஆண்டுதோறும் பயிரிடப்படும் நிலக் கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

    இப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி நடைபெற்று வருகிறது .ஒரு சில இடங்களில் மழை காலத்திற்கு முன்பே விதைகடலை போடப்பட்டு அவைகள் முளைத்து பூ பூத்த நிலையில் விழுந்து இறங்குவதற்கு வசதியாக மண் அணைக்கும் பணியும் நடைபெற்றது.

    இந்நிலையில் வடகிழக்கு பருவமழை சீராக தொடர்ந்து பெய்யும் என்று நம்பி நிலக்கடலை சாகுபடி செய்த விவசாயிகள் திடீரென்று வழக்கத்தைவிட குறைவான அளவு மழை பெய்ததால் தற்போது கடலை சாகுபடிக்கு தண்ணீர் இறைக்க வேண்டி சூழல் ஏற்பட்டுள்ளது.

    கடலை சாகுபடி செய்து 20 முதல் 40 நாட்கள் ஆன நிலையில் குளம் குட்டையில் இருந்து தண்ணீர் வைக்க வேண்டிய சூழ்நிலையில் விவசாயிகள் கடலை சாகுபடிக்கு தண்ணீர் இறைத்து வருகின்றனர்.

    இதனால் கடலை சாகுபடிக்கு கூடுதல் செய்வு ஏற்படுகிறது எனவிவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

    கடலை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உர தட்டுபாடு, பூச்சி தாக்குல், தண்ணீர் பற்றா குறையால் என்ஜீன் வைத்து தண்ணீர் இறைப்பதால் ஏற்படும் கூடுதல் செலவு, ஆள் சம்பளம் கூடுதல் என பல்வேறு செலவுகள் அதிகரிப்பால் இந்த ஆண்டுகடலை சாகுபடி எதிர்பார்த்த லாபம் இருக்காது என விவசாயிகள் தெரிவித்தனர்.

    • சிவலிங்கத்தை முழுவதுமாக அன்னத்தால் மூடி அலங்கரித்து வழிபாடு.
    • அன்னாபிஷேகத்தை கண்டவர்களுக்கு தான் சொர்க்கம் கிடைக்கும்.

    நாகப்பட்டினம்:

    400 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் இருந்து வந்து ஜீவ சமாதி நிலையில் இருந்து நாகூரில் அருள்பாலித்து வரும் தமிழ் புலவராம் ஸ்ரீ காங்கேயர் சித்தர் ஜீவ பீடத்தில் ஐப்பசி முழுநிலவு தின வேள்வி மற்றும் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்க அன்னாபிஷேகம் மாற்றும் வேள்வியாகம் நடைபெற்றது கல்லினுள் இருக்கும் தேரை முதல் கருப்பையில் இருக்கும் உயிர் வரை என அனைத்து உயிரினங்களுக்கும் உணவளிப்பவன் சிவபெருமான்.

    அதைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. அந்த நிகழ்வின் போது சிவலிங்கத்தை முழுவதுமாக அன்னத்தினால் மூடி அலங்கரித்து வழிபாடு செய்யப்படும்.

    அறிவியலும் ஆன்மிகமும் சந்திரன் இந்த ஐப்பசி பெளர்ணமி தினத்தில் பிரகாசிப்பார் என ஆன்மிகம் உணர்த்தியது.

    அதே போல அறிவியலும் பூமிக்கு அருகே சந்திரன் வருவதால் மிக பிரகாசமாக தனது முழு ஒளியை பூமிக்கு வீசுவதாக வானவியல் அறிவியல் தெரிவிக்கிறது ஐப்பசி பெளர்ணமி அன்று சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஜீவ பீடங்களின் வேள்விகளில் கலந்துகொள்வது, அதில் பங்கெடுப்பது என்பது மிக மிக சிறப்பான பலன் தரக்கூடிய செயல் ஆகும் சோறு கண்ட இடம் சொர்க்கம் அன்னபிஷேகத்தை கண்டவர்களுக்கு தான் சொர்க்கம் கிடைக்கும் என்பதை உணர்த்தும் வகையில் தான், 'சோறு கண்ட இடம் சொர்க்கம்' என்ற பழமொழி கூறப்படுகிறது.

    அன்னாபிஷேகத்தை கண்டால் தொழில், வியாபார பிரச்னைகள் தீர்ந்து நல்ல லாபம் கிடைக்கும். வாழ்வில் இல்லை என்று சொல்லாத அளவிற்கு உணவு எப்போதும் கிடைக்கும்.நிதி நிலை எப்போதும் சீராக இருக்கும்.அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம்

    உண்டு என்பது ஐதீகம்.சர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில் வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் அந்த அற்புத திருக்கோலத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தார்கள் ஏற்பாட்டினை ஸ்ரீ காங்கேய சித்தர் ஜீவ பீடத்தை நிர்வகித்து வரும் ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

    அறக்கட்டளையை சேர்ந்த ராஜசரவணன், கோகுல கிருஷ்ணன், அனிதா பழனிவேல், சுதாகர், குமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

    • நெல்லை மாநகராட்சி பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் வருடாந்திர பேரவை கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
    • கூட்டத்தில் 2019 -2020 ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை வாசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சங்கத்தின் வரவு-செலவு கணக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் வருடாந்திர பேரவை கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு தலைவர் டாக்டர் ஜானகிராமன் தலைமை தாங்கினார்.

    செயலாளர் அருணாச்ச லம் முன்னிலை வகித்தார். உப தலைவர் சின்னத்துரை, இயக்குனர்கள் அருந்தவசு, கணேசன், சரவண கார்த்திகேயன், ராதா கிருஷ்ணன், ரோஸ்மேரி ஜானகிராமன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 2019 -2020 ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை வாசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சங்கத்தின் வரவு-செலவு கணக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இந்த ஆண்டுக்கான மொத்த லாபத்தொகை ரூ.14 லட்சத்து 68 ஆயிரத்து 419 என கணக்கிடப்பட்டது.

    இதன் பின்னர் இந்த ஆண்டுக்கான கடன் வழங்கும் தொகை ரூ.12 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தவும், இதேபோல் பங்கு தொகையையும் ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.7ஆயிரத்து 500 ஆக உயர்த்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து கூட்டத்திற்கு வந்திருந்த உறுப்பினர்களுக்கு இனிப்பு மற்றும் பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது.

    ‘மின்வாரியத்துறை விரைவில் லாபத்தை அடையும் நிலைக்கு வந்து விடும்’ என அமைச்சர் தங்கமணி கூறினார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவை மண்டல மின்வாரியத்துறை வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மின்வாரியத்துறை அமைச்சர் பி.தங்கமணி, கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    முன்னதாக அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் பொதுமக்களுக்கு சிறந்த சேவையை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் மண்டலம் வாரியாக ஆய்வு கூட்டத்தை நடத்தி வருகிறோம். கடந்த ஒரு ஆண்டில் 3 லட்சத்து 85 ஆயிரம் மின் இணைப்புகள் ஒரே நாளில் கொடுக்கப்பட்டுள்ளது சாதனையாகும்.

    விவசாயிகளிடம் தட்கல் திட்டம் தற்போது அதிக வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு மின்சாரவாரியம் வெளிப்படை தன்மையாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. மின்வாரியத்தில் 3 வருடம் ஒரே இடத்தில் வேலை செய்து வருபவர்களுக்கு மாறுதல் வழங்க வேண்டும் என்பதற்காக கேட்டிருந்தோம். அதன்படி ஆன்லைனில் 14 ஆயிரம் மனுக்கள் வந்திருக்கிறது. அந்த மனுக்களில் ஊழியர்கள் எந்த இடத்தில் மாறுதல் கேட்டிருக்கிறார்களோ அவர்களுக்கு பணி மாறுதல் விரைவில் வழங்கப்படும்.

    மின்சார வாரியம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.14 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இருந்தது. தற்போது இது ரூ.3 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது. நிலக்கரியாக இருந்தாலும் மற்ற எந்த டெண்டராக இருந்தாலும் இ-டெண்டர் முறையில் நடைபெற்று வருவதால், விரைவில் மின்வாரியத்துறை லாபத்தை அடையும் நிலைக்கு வரும்.

    மின்சார வாரிய ஊழியர்கள் எதிர்பார்த்த அளவிற்கு சம்பளம் வழங்கப்படுகிறது. மழைக்காலம் மற்றும் இயற்கை இடர்பாடுகளின் போது பொதுமக்கள் மின்தடையால் அவதியடைய கூடாது என்பதற்காக, உடனுக்குடன் பணிகள் நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×