search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "complex"

    • முதுகுளத்தூரில் புதிய வாரச்சந்தை வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
    • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதற்கான டெண்டர் விடப்பட்டு வாரச்சந்தை கட்டி முடிக்கப்பட்டது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பஸ் நிலையம் அருகே ரூ.2.42 கோடி மதிப்பீட்டில் புதிய வாரச்சந்தை வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதற்கான டெண்டர் விடப்பட்டு வார சந்தை கட்டி முடிக்கப்பட்டது.

    ஆனால் 6 மாதங்கள் ஆன பின்பும் வாரச்சந்தை திறக்கப்படாமல் உள்ளது. முதுகுளத்தூரை சுற்றி 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் காய்கறிகளை வாங்குவதற்கு வார சந்தைக்கு வருவது வழக்கம். இதனால் முதுகுளத்தூர், அபிராமம், கமுதி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பயனடைந்து வருகின்றனர்.

    தற்போது முதுகுளத்தூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் வியாழக் கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் வாடகை கொடுக்கப்படு வதாகவும், இதனால் அரசின் நிதி வீணடிக்கப் படுவதாகவும் மழைக் காலங்களில் இந்த வாரச்சந்தைைய பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும், மேலும் அடிப்படை வசதிகள் இல்லாததால் சிரமப்பட்டு வருவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இதனால் புதிய வாரச் சந்தை வளாகத்தை உடன டியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வரு கின்றனர்.இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும், பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் இதுகுறித்து எடுத்துக்கூறியும் நடவடிக்கை எடுக்கப்படா மல் உள்ளதாகவும், மழைக் காலம் தொடங்க உள்ளதால் வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடன டியாக புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வாரச்சந்தை வளாகத்தை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரங்கம் 6 ஆயிரத்து 321 சதுரமீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டு வருகிறது.
    • புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாக அமையும்.

    புதுச்சேரி:

    புதுவை சிறந்த பொழுது போக்கு சுற்றுலா நகரமாக உருவெடுத்து வருகிறது.

    புதுவையில் திறந்தவெளி பொதுழுபோக்கு அரங்கம் இல்லை. காந்தி திடலில் சிறிய அரங்கம் மட்டுமே உள்ளது. அனைத்து வசதிக ளுடன் கூடிய பிரம்மாண்ட திறந்தவெளி பொழுது போக்கு அரங்கம் அமைக்க அரசு திட்டமிட்டது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுவை பழைய துறைமுக வளாகத்தில் ரூ.4 கோடியே 42 லட்சத்தில் பிரமாண்ட திறந்தவெளி பொழுது போக்கு அரங்கம் அமைக்க பூர்வாங்க பணிகள் முடிக்கப்பட்டன.

    கடந்த ஜனவரியில் பொதுப்பணித்துறை சார்பில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த அரங்கம் 6 ஆயிரத்து 321 சதுரமீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டு வருகிறது.

    தற்போது இரு பக்கமும் கேலரி அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்த அரங்கில் பிரமாண்ட மேடை, ஆண், பெண் கலைஞர்களுக்கு 2 அறைகள், 3 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி, ஆயிரத்து 675 சதுரமீட்டரில் 400 வி.ஐ.பி.க்கள் அமரும் கேலரி அமைக்கப்பட உள்ளது.

    420 சதுரமீட்டரில் கடல் அழகை ரசிக்கும் வசதி உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளது. இந்த அரங்கம் அமைக்கப்பட்டால் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாக அமையும்.

    • ரூ.1.14 கோடியில் வணிக வளாகம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
    • 24 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்பட உள்ளது என்றார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் ரூ.1.14 கோடி மதிப்பில் தினசரி சந்தைக்கான புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நகராட்சி தலைவர் தங்கம் ரவிகண்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் செல்வமணி முன்னிலை வகித்தார்.

    மாநகராட்சிகள், நக ராட்சிகள், பேரூராட்சிகளில் அடிப்படை கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 24 கடை களுடன் கூடிய தினசரி சந்தைக்கான வணிக வளாகம் கட்டுவதற்கு ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக சர்க்கரை குளம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

    இதுகுறித்து நகராட்சி தலைவர் தங்கம் ரவி கண்ணன் கூறுகையில், நகராட்சியில் வரியற்ற வருவாயை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகர் பகுதியில் நெரிசலை குறைக்கும் வகையில் தினசரி சந்தை அமைப்பதற்காக 24 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்பட உள்ளது என்றார்.

    அடிக்கல் நாட்டு விழாவில் நகராட்சி பொறி யாளர் தங்கப்பாண்டியன், ஒப்பந்ததாரர் குழந்தைவேலு, கவுன்சிலர் மீரா தனலட்சுமி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில் வெங்கட் செங்குட்டுவன், இவானா, எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’காம்ப்ளக்ஸ்’.
    • இப்படத்தின் இடம்பெற்றுள்ள கத்திக்கூவுது காதல் என்ற பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில் வெங்கட் செங்குட்டுவன், இவானா, எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காம்ப்ளக்ஸ்'. கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஜி.எஸ் சினிமா நிறுவனம் தயாரித்துள்ளது.

     

    காம்ப்ளக்ஸ்

    இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள கத்தி கூவுது காதல் என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பாடலை ஜிவி.பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவி இணைந்து பாடியுள்ளனர். ஞானகரவேல் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

    • நீதிமன்ற வளாகத்தில் நூலக திறப்பு விழா நடைபெற்றது.
    • பல்லடம் சார்பு நீதிபதி சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    பல்லடம் :

    பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நூலக திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல்லடம் சார்பு நீதிபதி சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சித்ரா முன்னிலை வகித்தார். வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சக்திவேல் வரவேற்றார். விழாவில் நூலகம், மற்றும் மறைந்த மூத்த வழக்கறிஞர்கள் ராஜமாணிக்கம், ஈஸ்வரன், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் உருவப் படத்தை திருப்பூர் மாவட்ட நீதிபதி சொர்ணம் நடராஜன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள்,மூத்த வழக்கறிஞர்களின் குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ.3.22 கோடியில் குடியிருப்பு வளாகம் கட்டும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
    • பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ.3.22 கோடி மதிப்பீட்டில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு குடியிருப்பு வளாகம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    இதில் சாத்தூர் ஒன்றிய சேர்மன் நிர்மலா கடற்கரை ராஜ், சாத்தூர் ஒன்றிய செயலாளர் முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றினர். இருக்கன்குடி பஞ்சாயத்து தலைவர் செந்தாமரை, கோவில் நிர்வாக அலுவலர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு பூசாரிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த நிகழ்ச்சிக்கு பிறகு கோவில் வளாகத்தில் உபயதாரர் நிதி ரூ.43.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட உள்துறை அலுவலகம், பாதுகாப்பு அறை மற்றும் வாகன மண்டபம் ஆகியவற்றை சேர்மன் மற்றும் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தனர்.

    • முதல் கட்டமாக 35 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • அதிகாலை4 மணி முதல்7 மணி வரை உற்பத்தியாளர்கள் தங்கள் வேளாண் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் செயல்படுகின்றன.

    திருப்பூர் :

    திருப்பூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் சார்பில், வேளாண் உற்பத்தி பொருட்கள் விற்பனை வளாகம் துவங்கப்பட்டுள்ளது.வியாபாரிகள், பொதுமக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இச்சங்கம் சார்பில் திருப்பூர் புஷ்பா சந்திப்பில் உள்ள சங்க வளாகத்தில் விவசாய குழுக்கள், வேளாண் பொருள் உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் வகையில் கூட்டுறவு சந்தை என்ற பெயரில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதில் முதல் கட்டமாக 35 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அதிகாலை4 மணி முதல்7 மணி வரை உற்பத்தியாளர்கள் தங்கள் வேளாண் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் வகையில் கடைகள் செயல்படுகின்றன.அதன் பின்னர் விற்பனைக்கு வைத்துள்ள பொருட்களை சங்க பிரதிநிதிகள் காலை 9 மணி வரை விற்பனை செய்வர். அதன் தொகை, உற்பத்தியாளர் வங்கி கணக்கில் சேர்க்கப்படும்.

    இதில் காய்கறி வகைகள், செக்கு எண்ணெய் வகைகள், நாட்டு சர்க்கரை, வெல்லம், சிறு தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.இந்த கூட்டுறவு சந்தை முறையை விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கூட்டுறவு துறை அழைப்பு விடுத்துள்ளது.

    ஈரோடு மாநகராட்சி கனி மார்க்கெட்டில் ரூ.100 கோடி மதிப்பில் வணிக வளாகம் அமைத்து கொடுக்க வேண்டும் என்று சட்டசபையில் எம்.எல்.ஏ.தென்னரசு கோரிக்கை வைத்துள்ளார்.
    ஈரோடு:

    தமிழக சட்டசபையில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.தென்னரசு தொழில்துறை, ஊரக தொழில்துறை மானியக் கோரிக்கைகள் மீதான உரையில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.-

    இந்தியாவில் தமிழகம் தொழில் துறையில் 3-வது இடத்தில் உள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9,10-ந் தேதி சென்னை வர்த்தக மையத்தில் நடத்தி அதில் வெற்றி கண்டவர் ஜெயலலிதா.

    ஜெயலலிதா வழியில் நல்லாட்சி நடத்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் ஜனவரி மாதம் 23, 34-ந் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த உள்ளார். இந்தியாவிலேயே தொழில் துறையில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வமும் முயற்சிகளை எடுத்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

    ஈரோடு மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்தி கொடுத்த முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஈரோடு மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் செய்து கொடுத்துள்ளார்.

    550 கோடி ரூபாய் மதிப்பில் ஊராட்சி கோட்ட குடிநீர் திட்டம், ரூ.64 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம், ரூ.130 கோடியில் 1,520 அடுக்குமாடி குடியிருப்புகள்.

    ரூ.43 கோடியில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடம், ரூ.300 கோடியில் பெருந்துறை சாலையில் உயர்மட்ட மேம்பாலம். ரூ.18 கோடியில் புறவழிச்சாலை அமைக்கின்ற திட்டம் ஆகியவற்றை கொடுத்தற்காக முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கான சில கோரிக்கைகளையும் சட்டசபையில் பதிவு செய்து கொள்கிறேன். ஈரோட்டுக்கு ஒரு அரசு மகளிர் கல்லூரி வழங்க வேண்டும் என்று கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறேன்.

    அதே போன்று ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை விரைவாக நடத்த வேண்டும். ஈரோடு மாநகராட்சி கனி மார்க்கெட்டில் ரூ.100 கோடி மதிப்பில் வணிக வளாகம் அமைத்து கொடுக்க வேண்டும்.

    ஈரோடு-சத்தி சாலையை நான்கு வழிச்சாலையாகயும், பவானி சாலையை நான்கு வழிச்சாலையாகவும் மாற்றி கொடுக்க வேண்டும். அதே போல் ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டை ரூ.100 கோடி மதிப்பில் அடுக்குமாடி மார்க்கெட்டாகவும், ஈரோடு முனிசிபல் சத்திரத்திலுள்ள மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு அங்கேயே அடுக்குமாடி குடியிருப்புகளும், ஈரோடு சி.என்.சி.கல்லூரியை அரசு கல்லூரியாகவும், ஈரோடு நடராஜா தியேட்டர் பகுதியிலுள்ள மரப்பாலம், குய்வன் திட்டு பகுதியில் உள்ள 396 அடுக்குமாடி குடியிருப்புகள் பழுதடைந்துள்ள நிலையில் உள்ளதால் இங்கு புதிய குடியிருப்பு கட்டிக் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×