மனைவி செய்த பூஜை கணவனின் உயிரை பறித்தது- ஊதுபத்தி தீப்பொறி பறந்து விழுந்ததில் மெக்கானிக் பலி

மனைவி அதிர்ச்சியடைந்து வீட்டில் இருந்த போர்வையை எடுத்து வந்து தீயை அணைத்தார்.லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனைவி செய்த பூஜை கணவனின் உயிரை பறித்தது- ஊதுபத்தி தீப்பொறி பறந்து விழுந்ததில் மெக்கானிக் பலி
Published on

புதுச்சேரி லாஸ்பேட்டை சாமிப்பிள்ளைதோட்டம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வேஸ்வர சோமநாதன் (வயது 60). இருசக்கர வாகன மெக்கானிக். அவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

சம்பவத்தன்று விஸ்வேஸ்வர சோமநாதன் வீட்டில் பெட்ரோல் பயன்படுத்தி இருசக்கர வாகனத்தை பழுது பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது தனலட்சுமி வீட்டில் சாமி கும்பிடுவதற்காக ஊதுபத்தியை கொளுத்தியபோது, அதில் இருந்து வெளியேறிய தீப்பொறி பறந்து பைக்கில் விழுந்தது. இதனால் பைக் திடீரென குபீரென்று தீப்பிடித்தது.

இதில் விஸ்வேஸ்வர சோமநாதன் உடலிலும் தீ பரவியது. இதனால் வலி தாங்காமல் விஸ்வேஸ்வர சோமநாதன் அலறினார்.

இதனை பார்த்ததும் அவரது மனைவி அதிர்ச்சியடைந்து வீட்டில் இருந்த போர்வையை எடுத்து வந்து தீயை அணைத்தார்.

இதன் பின்னர் கணவரை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விஸ்வேஸ்வர சோமநாதன் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்பத்தியது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com