என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்"

    • பிரதமரின் வீடு கட்டும் திட்டம் கடந்த முறை 54,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
    • அதில் 32,400 கோடி மட்டுமே செலவழித்து இருக்கிறது அரசு.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

    அதை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதித்தற்காக பாராளுமன்றம் நேற்று கூடியது.

    அதில் பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியிருப்பதாவது:-

    மூன்று கோடி வீடுகளை புதிதாக கட்டப் போவதாகவும் பெருமை பொங்கக் கூறியிருக்கிறார் குடியரசுத் தலைவர். கடந்த கூட்டத்தொடரின் போது குடியரசுத் தலைவர் அறிவித்த பல அறிவிப்புகளை இந்த கூட்டத்திலும் அறிவித்து இருக்கிறார். அதிலே ஒன்றுதான் இந்த வீடு கட்டும் திட்டம்.

    பிரதமரின் வீடு கட்டும் திட்டம் கடந்த முறை 54,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதில் 32,400 கோடி மட்டுமே செலவழித்து இருக்கிறது அரசு. சரிபாதியாக செலவை குறைத்து 22,100 கோடி ரூபாய் செலவிடவில்லை. இதனால் பிரதமரின் இந்த வீடு கட்டும் திட்டம் முழுமையாக நிறைவடையவில்லை.

    ஆங்காங்கே தொடங்கிய பணிகள் அப்படியே கிடக்கின்றன. ஒதுக்கிய நிதியும் விரயம் ஆகிறது. மக்களுக்கு வீடும் கிடைக்கவில்லை. இலக்கும் எட்டப்படவில்லை என்பது எவ்வளவு வேதனைக்குரியது என்பதை தயவு கூர்ந்து எண்ணிப் பார்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 

    பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன், பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. #BudgetSession #Budget2019 #PresidentRamNathKovind
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, பட்ஜெட் கூட்டத் தொடரை அமைதியான முறையில் நடத்த அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சுமித்ரா மகாஜன் கேட்டுக் கொண்டார்.

    இதேபோல் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, இன்று காலை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.



    இக்கூட்டம் நிறைவடைந்த பின்னர், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. காலை 11 மணிக்கு மக்களவை, மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

    பிப்ரவரி 13-ஆம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல், பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இடைக்கால பட்ஜெட்டாக இருந்தாலும், மக்களைக் கவரும் வகையில், பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைய பாஜக தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக் காலத்தில் கடைசியாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இதுவாகும். #BudgetSession #Budget2019 #PresidentRamNathKovind
    ×