search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Natural dyes"

    • காபி தலைமுடிக்கு செழுமையான, அடர் பழுப்பு நிறத்தை அளிக்கும்.
    • அவுரி பவுடர் தலைமுடிக்கு அடர் நீலம்-கருப்பு நிறத்தை அளிக்கும்.

    மருதாணி பொடியை வெந்நீரில் கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும். இதை தலைமுடியில் தடவி ஓரிரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்பு குளித்துவிடலாம். மருதாணி தலைமுடிக்கு சிவப்பு-ஆரஞ்சு நிறத்தை கொடுக்கும்.

    காபி:

    காபியை நன்றாக காய்ச்சி ஆறவிடவும். அதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு தலைமுடியை அலசிவிடலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் காபி தலைமுடிக்கு செழுமையான, அடர் பழுப்பு நிறத்தை அளிக்கும்.

    அவுரி:

    அவுரி பவுடரை வெந்நீரில் கலந்து பேஸ்ட் போல் குழைத்துக்கொள்ளவும். இதை தலைமுடியில் தடவி ஓரிரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்பு தண்ணீரில் கழுவி விடலாம். அவுரி பவுடர் தலைமுடிக்கு அடர் நீலம்-கருப்பு நிறத்தை அளிக்கும்.

    ரூபார்ப்:

    ஒரு வகை கீரையான இதன் தண்டு பகுதியை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறவிடவும். இதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்துவிடலாம். இது தலைமுடிக்கு சிவப்பு-பழுப்பு நிறத்தை கொடுக்கும்.

    பீட்ரூட் ஜூஸ்:

    பீட்ரூட்டை வேகவைத்து ஜூஸ் தயாரித்து ஆறவிடவும். இதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்பு தண்ணீரில் கழுவவும். பீட்ரூட் சாறு தலைமுடிக்கு சிவப்பு-ஊதா நிறத்தை கொடுக்கும்.

    எலுமிச்சை சாறு:

    எலுமிச்சை சாற்றை பிழிந்து தலைமுடியில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவவும். எலுமிச்சை சாறு தலைமுடிக்கு வெளிர் பொன்னிற நிறத்தை அளிக்கும்.

    சீமை சாமந்தி:

    இந்த சாமந்தி பூவை நீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆற விடவும். பின்பு தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் ஊற விடவும். தலைமுடி உலர தொடங்கியதும் தண்ணீரில் அலசவும். இது தலைமுடிக்கு வெளிர் பொன்னிறத்தை கொடுக்கும்.

    வாதுமை கொட்டை:

    கருப்பு வாதுமை கொட்டை ஓடுகளை பொடித்து தண்ணீரில் கொதிக்க வைக்கவும். அதை ஆற வைத்து தலைமுடியில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவவும். கருப்பு வாதுமை கொட்டை தலைமுடிக்கு அடர் பழுப்பு நிறத்தை கொடுக்கும்.

    கேரட் சாறு:

    கேரட்டை வேகவைத்து, சாறு எடுத்துக்கொள்ளவும். இதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்துவிட்டு தண்ணீரில் கழுவவும். கேரட் சாறு தலைமுடிக்கு சிவப்பு-ஆரஞ்சு நிறத்தை அளிக்கும். இங்கே இடம் பெற்றுள்ள ஏதாவது ஒரு பொருளை தொடர்ந்து பயன்படுத்தி வர, நரை முடி மறைந்து இயற்கை வண்ண சாயத்துடன் கூந்தல் மிளிரும்.

    தலைமுடி முன்கூட்டியே நரைப்பதற்கு மரபணு ரீதியான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் மன அழுத்தம், புகைப்பழக்கம், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உணவில் இடம்பெறாதது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், தைராய்டு கோளாறுகள் போன்றவைகளும் முடி நரைப்பதற்கு மற்ற காரணங்களாக அமைந்திருக்கின்றன.

    கூந்தலுக்கு நிறத்தை தரும் மெலனின் என்ற நிறமி குறைவதால் முடி நரைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    வயதாகும்போது மயிர்க்கால்களில் மெலனினை உற்பத்தி செய்யும் செல்கள் சேதமடையலாம் அல்லது இறக்கலாம். அதனால் முடி நரைக்கத் தொடங்கும். ஆனால் முன்கூட்டியே முடி நரைப்பதை சில வாழ்க்கை முறை மாற்றங்களால் தடுக்க முடியும். வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டு இயற்கை வண்ண சாயங்கள் தயாரித்து பூசியும் நரை முடியை அலங்கரிக்கலாம்.

    • ஆடை தயாரிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது.
    • அழகிய பேக்கிங் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

    திருப்பூர் : 

    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் ஆடை வடிவமைப்பில், புதிய யுக்திகளை கையாண்டு சாதனைகளை குவித்துள்ளனர். ஆடை வடிவமைப்பு மட்டுமல்லாது அரிய பல கைவினை பொருட்கள் தயாரிக்கும் கலைகள் மற்றும் கலா ரசனைகளில் கைதேர்ந்தவர்களாக மாறி வருகின்றனர்.

    அந்தவகையில், பி.எஸ்.சி., மூன்றாம் ஆண்டு பயிலும் அப்பேரல் பேஷன் டிசைனிங் மாணவர்கள், புனர்பாவா நிறுவனத்துடன் இணைந்து அழகிய ஆடைகளை பேக்கிங் செய்து கொடுக்கும் கண்கவர் அட்டை பெட்டிகளை வடிவமைத்துள்ளனர். ஆடை பேக்கிங் செய்ய பயன்படுத்தும் 400 முதல் 450 ஜி.எஸ்.எம்., அட்டைகளை பயன்படுத்தி, இயற்கை சாயத்தை கொண்டு கண்கவர் அட்டைப்பெட்டிகள் தயாரித்து அசத்தியுள்ளனர். அதுமட்டுமல்ல அதே அட்டைகளில், இயற்கை சாயத்தை கொண்டு எளியவகை பேன்ஸி அணிகலன்களையும் வடிவமைத்துள்ளனர்.

    இதுகுறித்து மாணவ, மாணவிகள் கூறியதாவது:- ஆடை தயாரிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. அழகிய பேக்கிங் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆடைகளின் மதிப்பை கூட்ட, அழகிய அட்டை பெட்டிகளில் பேக் செய்து கொடுப்பது அவசியம்.குழந்தைகளுக்கான ஆடைகள், பின்னலாடைகள், விலை மதிப்புமிக்க சேலைகள் போன்றவற்றை நாங்களே வடிவமைத்துள்ளோம்.

    மஞ்சள் தூள், ஆர்கானிக் பிண்டி(கலர் குங்குமம்), பீட்ரூட், காய்கறிகள், வெங்காயத்தோல், மருதாணி இலை, செம்பருத்தி பூக்களை கொண்டு இயற்கையான சாயம் தயாரித்து அவற்றின் மூலமாக பேக்கிங் அட்டை பெட்டிகளும், பேன்ஸி அணிகலன்களும் மெருகூட்டப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தரத்துடன் தயாரித்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 40 அரங்குகளில், ஆயத்த ஆடை ரகங்களுக்கு நிறவேற்றும் புதுவகை சாயங்கள் மற்றும் ரசாயனங்களை காட்சிப்படுத்தின.
    • கேட்டனை சேஷன் முறை மேம்படுவதன்மூலம் உப்பு இல்லா சாயமேற்றுதல் அதிகரிக்கும்.

    திருப்பூர்,

    ஆயத்த ஆடை ரகங்களுக்கு ரசாயனங்களை பயன்படுத்தி சாயமேற்றப்படுகிறது.இதனால் அதிக தொகை செலவழித்து சாயக்கழிவுநீர் சுத்திகரிக்கவேண்டிய கட்டாயம், சுத்திகரிப்பில் வெளியேறும் கழிவு உப்புகளை அகற்றுவதுதில் சிக்கல் என ஏராளமான பிரச்னைகளை சாய ஆலை துறையினர் எதிர்கொள்ள நேரிடுகிறது.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத ஆடை உற்பத்தியில் இயற்கை சாயங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

    உள்நாட்டில் பல நிறுவனங்கள் ரசாயனங்களுக்கு மாற்றாக, இயற்கை சாயங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. மர பட்டை, இலை, பூ, காய், கனிகளை பயன்படுத்தி துணிக்கு சாயமேற்றுவதற்கான இயற்கை சாயங்கள் தயாரிக்கப்படுகின்றன. தொடர் ஆராய்ச்சிகள் மூலம் இயற்கை சாயங்களில் உள்ள குறைகள் களையப்பட்டுவருகிறது.

    நிப்ட்-டீ கல்லுாரி மற்றும் அடல் இன்குபேஷன் மையம் சார்பில், டை கெம் வேர்ல்டு சாயம் மற்றும் கெமிக்கல் கண்காட்சி, அவிநாசி பழங்கரையில் உள்ள ஐ.கே.எப்., வளாகத்தில் சமீபத்தில் நடந்தது.ஆமதாபாத், சூரத், மும்பை உள்பட நாட்டில் பல்வேறு பகுதி நிறுவனங்கள், 40 அரங்குகளில், ஆயத்த ஆடை ரகங்களுக்கு நிறவேற்றும் புதுவகை சாயங்கள் மற்றும் ரசாயனங்களை காட்சிப்படுத்தின.

    ஆமதாபாத்தை சேர்ந்த ஒரு நிறுவனம், ஆடைகளில் பிரின்டிங் செய்வதற்கான புதுமையான இயற்கை சாயங்களை உருவாக்கியுள்ளது.

    'கேட்டனைசேஷன்' என்கிற பிராசசிங் செய்யப்பட்ட நூலில் துணி தயாரிக்கும்போது, உப்பு இன்றி சாயமேற்றமுடியும். மேலும் கிரே நிற துணியை, ஒருமுறை மட்டும் சாயமேற்றினால் போதும். அடர் மற்றும் வெளிர் நிற கோடுகளுடன் கூடிய துணியாக மாறிவிடும். மும்பையைச்சேர்ந்த ஒரு நிறுவனம், கேட்டனைசேஷனுக்கு தேவையான ரசாயனங்களை கண்காட்சியில் வைத்திருந்தது.பிராசசிங்கின்போது துணிக்கு தீப்பிடிக்காத தன்மை, வைரஸ் தொற்று தடுப்பு, தண்ணீர் ஒட்டாத தன்மை அளிக்கும் பலவகையான ரசாயனங்களும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

    இது குறித்து திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்க பொருளாளர் மாதேஸ்வரன் கூறியதாவது:-

    டைஸ் அண்ட் கெம் கண்காட்சி, திருப்பூர் சாய ஆலை துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது. குறிப்பாக இயற்கை சாயங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.ஒரே நிறத்தில் பலவித வேறுபாடுகள், சாயமேற்றுதலுக்குப்பின் வேகமாக நிறம் இளகுதல் ,பிளீடிங் இவையெல்லாம் இயற்கை சாயமேற்றுதலில் மிகப்பெரிய சவால்களாக இருந்தன. இப்பிரச்னைகள் தற்போது களையப்பட்டுள்ளன. மாறுபாடில்லாத ஒரேவகை நிறம், சாயமேற்றியபின் அதிக நீடிப்புத்தன்மை மிக்க புதுவகை இயற்கை சாயங்கள் அறிமுகமாகியுள்ளன.

    எல்லா வகையிலும், ரசாயன நிறமிகளுக்கு இணையாக இயற்கை சாயங்களை பயன்படுத்தி துணிக்கு சாயமேற்றமுடியும் என்கிற நிலையை அடையும் தூரம் தொலைவில் இல்லை.வெளிநாட்டு வர்த்தகர்கள் இயற்கை சாயமேற்றுதலுக்கான ஆர்டர்கள் வழங்கினாலும் இனிசிறப்பாக கையாளமுடியும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது. கேட்டனை சேஷன் முறை மேம்படுவதன்மூலம் உப்பு இல்லா சாயமேற்றுதல் அதிகரிக்கும்.இவ்வாறுஅவர் கூறினார்.

    ×