search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "color"

    • ரோஜாக்களை விரும்பாத நபர்கள் எவருமில்லை.
    • பெண்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் அழகு உருவம் கொண்டது.

    ரோஜாக்களை விரும்பாத நபர்கள் எவருமில்லை. பெண்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் அழகு உருவம் கொண்டது. உலகெங்கும் பல்வேறு நிறங்களில் ரோஜாக்கள் பூத்துக்குலுங்குகின்றன. கூந்தலை அலங்கரிப்பதோடு அன்பு, பாராட்டு மற்றும் நன்றியை வெளிப்படுத்துவதற்கு ரோஜாக்கள் பரிமாறப்படுகின்றன. அவற்றுள் தனித்துவ குணம் கொண்ட சில ரோஜாக்கள் உங்கள் பார்வைக்கு..

    பீச் வண்ண ரோஸ்:

    மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு போன்ற நிறங்களின் கலவையை பிரதிபலிக்கும் பீச் வண்ண ரோஜாக்கள் நன்றியுணர்வை குறிக்கின்றன. அடக்கம், அனுதாபம் போன்றவற்றை வெளிப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.

    மஞ்சள்:

    மஞ்சள் நிற ரோஜாக்கள் நட்பு மற்றும் மகிழ்ச்சியை குறிக்கின்றன. நண்பர்களுக்கிடையேயான அன்பையும், பாராட்டுகளையும் வெளிப்படுத்த இவை சிறந்த தேர்வாக அமைகின்றன.

    ஆரஞ்சு:

    ஆரஞ்சு நிற ரோஜாக்கள் உற்சாகம், ஆசை மற்றும் கவர்ச்சியை குறிக்கின்றன. ஈர்ப்பை வெளிப்படுத்துவதற்கு அவை பகிரப்படுகின்றன.

    வெள்ளை:

    வெள்ளை நிற ரோஜாக்கள் தூய்மை, அப்பாவித்தனம் மற்றும் வாழ்வின் புதிய தொடக்கங்களை குறிக்கின்றன. தம்பதியினரிடையே நிலவும் தூய அன்பை குறிக்க திருமண நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

    இளஞ்சிவப்பு:

    இளஞ்சிவப்பு நிற ரோஜாக்கள் வெவ்வேறு நிறங்களில், வெவ்வேறு உணர்ச்சிகளை குறிப்பிடுகின்றன. வெளிர் இளஞ்சிவப்பு ரோஜாக்கள் போற்றுதலையும், அனுதாபத்தையும் தெரிவிக்கின்றன. அதே சமயம் அடர் இளஞ்சிவப்பு ரோஜாக்கள் நன்றியையும், பாராட்டையும் குறிப்பிடுகின்றன.

    நீலம்:

    நீல நிற ரோஜாக்கள் மர்மம், சாத்தியமில்லாதது போன்ற உணர்வை குறிக்கின்றன.

    சிவப்பு:

    இது காதலின் அடையாள சின்னமாக விளங்குகிறது. இரு மனங்களுக்கு இடையே புதைந்திருக்கும் ஆழமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், காதல், அன்பு, ஆசையின் வெளிப்பாட்டை பகிரவும் உதவும் தூதுவனாக பயன்படுகிறது, சிவப்பு ரோஜா.

    • கல்லறை தோட்டத்தில் உள்ள அனைத்து கல்லறைகளுக்கும் பூஜைகள் நடைபெற்றது
    • இறந்த தாய், தந்தை, உறவினர், நண்பர்களின் கல்லறைக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி மாதா கோவில் தெரு கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாளையொட்டி கிறித்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

    புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்குத்தந்தை செலாஸ்டின் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    பின்னர் ஆலய வளாகத்தில் இருந்த கல்லறைகள் மற்றும் அருகிலிருந்த கல்லறை தோட்டத்தில் உள்ள அனைத்து கல்லறைகளுக்கும் பூஜைகள் நடைபெற்றது. 

    • நாமக்கல் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமான கொல்லிமலை உள்ளது.
    • மலைப்பாதை தடுப்பு சுவர்களில், வல்வில் ஓரி மன்னனின் புகழைப் பரப்பும் வகையில், ஆங்காங்கே வண்ண ஓவியங்கள் வரைந்துள்ளனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமான கொல்லிமலை உள்ளது. கொல்லிமலைக்கு, அடிவாரத்தில் இருந்து, 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். கொல்லிமலைக்கு வரலாற்று பெருமையும், அகத்தியர், திருமூலர், போகர், கோரக்கர், கொங்கணவர், பாம்பாட்டி உள்ளிட்ட, 18 சித்தர்கள் இங்கு தவம் செய்த பெருமையும் உள்ளது. இதற்கு சான்றாக, குகைகள் அமைந்துள்ளன. கடையேழு வள்ளல்களின் ஒருவரான வல்வில் ஓரி ஆண்ட நாடாகவும் கொல்லிமலை திகழ்கிறது.

    இங்கு ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்ம அருவி, சிற்றருவி என பல அருவிகள் உள்ளன. இதனால், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், இங்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த கொல்லிமலையில், ஆண்டுதோறும் ஆடி, 18-ல், ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படும். இங்குள்ள ஆற்றில், பொதுமக்கள் புனித நீராடி, அறப்பளீஸ்வரரை வழிபடுவர்.

    மேலும், தமிழக அரசு சார்பில், கொண்டாடப்படும் வல்வில் ஓரி விழா, நேற்று தொடங்கியது. சிறந்த சுற்றுலாதலமாக விளங்கும் கொல்லிமலைக்கு, தமிழகம் முழுவதும் இருந்து, ஏராளமான சுற்றுலாப்பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

    கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கவரும் வகையில், நெடுஞ்சாலை, வனம், சுற்றுலா மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில், மலைப்பாதை தடுப்பு சுவர்களில், வல்வில் ஓரி மன்னனின் புகழைப் பரப்பும் வகையில், ஆங்காங்கே வண்ண ஓவியங்கள் வரைந்துள்ளனர். அவற்றை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். பலர் ஆர்வமாக, தங்களது மொபைல் போனில் 'செல்பி' எடுத்து மகிழ்கின்றனர்.

    கொல்லிமலை வரும் சுற்றுலா பயணிகளை கவர மலைப்பாதை தடுப்பு சுவர்களில் வண்ண ஓவியம்.

    • பள்ளி வளாகத்தை தூய்மை செய்து 350 மீட்டர் நீளமுள்ள பள்ளியின் சுற்றுச்சுவருக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சேர்ந்து வர்ணம் பூசினர்.
    • பள்ளியில் முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த வகுப்பறையில் தற்போது படிக்கும் மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம்வேதார ண்யம் அடுத்த பஞ்சநதி க்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணி நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் பள்ளி வளாகத்தை தூய்மை செய்து 350 மீட்டர் நீளமுள்ள பள்ளியின் சுற்றுச்சுவருக்கு மாணவ -மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஆசிரியர்கள் ஒன்றாக இணைந்து நிதி சேர்த்து ரூ.25000 செலவு செய்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சேர்ந்து வர்ணம் பூசினர்.இதை அறிந்த இப்பள்ளி முன்னாள் மாணவர்கள் பள்ளியை நேசித்து தூய்மை பணி மேற்கொண்ட மாணவ ர்களுக்கும் பொற்றோ ர்களுக்கும் விருந்து வைக்க முடிவு செய்தனர்.

    இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் முரளி தரனை அணுகி அனுமதி பெற்று 500 நபர்களுக்கு பள்ளி வளாகத்தில்ஆறு சுவை உணவு விருந்து அளித்தனர்.பள்ளியில் முன்னாள் மாணவர்கள்தங்கள் படித்த வகுப்பறையில் தற்போது படிக்கும் மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர்.நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர் மகேந்திரன், ஒய்வு பெற்ற இந்திய ராணுவ விரார் தமிழரசன், உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர்கள் ,மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    • 40 அரங்குகளில், ஆயத்த ஆடை ரகங்களுக்கு நிறவேற்றும் புதுவகை சாயங்கள் மற்றும் ரசாயனங்களை காட்சிப்படுத்தின.
    • கேட்டனை சேஷன் முறை மேம்படுவதன்மூலம் உப்பு இல்லா சாயமேற்றுதல் அதிகரிக்கும்.

    திருப்பூர்,

    ஆயத்த ஆடை ரகங்களுக்கு ரசாயனங்களை பயன்படுத்தி சாயமேற்றப்படுகிறது.இதனால் அதிக தொகை செலவழித்து சாயக்கழிவுநீர் சுத்திகரிக்கவேண்டிய கட்டாயம், சுத்திகரிப்பில் வெளியேறும் கழிவு உப்புகளை அகற்றுவதுதில் சிக்கல் என ஏராளமான பிரச்னைகளை சாய ஆலை துறையினர் எதிர்கொள்ள நேரிடுகிறது.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத ஆடை உற்பத்தியில் இயற்கை சாயங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

    உள்நாட்டில் பல நிறுவனங்கள் ரசாயனங்களுக்கு மாற்றாக, இயற்கை சாயங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. மர பட்டை, இலை, பூ, காய், கனிகளை பயன்படுத்தி துணிக்கு சாயமேற்றுவதற்கான இயற்கை சாயங்கள் தயாரிக்கப்படுகின்றன. தொடர் ஆராய்ச்சிகள் மூலம் இயற்கை சாயங்களில் உள்ள குறைகள் களையப்பட்டுவருகிறது.

    நிப்ட்-டீ கல்லுாரி மற்றும் அடல் இன்குபேஷன் மையம் சார்பில், டை கெம் வேர்ல்டு சாயம் மற்றும் கெமிக்கல் கண்காட்சி, அவிநாசி பழங்கரையில் உள்ள ஐ.கே.எப்., வளாகத்தில் சமீபத்தில் நடந்தது.ஆமதாபாத், சூரத், மும்பை உள்பட நாட்டில் பல்வேறு பகுதி நிறுவனங்கள், 40 அரங்குகளில், ஆயத்த ஆடை ரகங்களுக்கு நிறவேற்றும் புதுவகை சாயங்கள் மற்றும் ரசாயனங்களை காட்சிப்படுத்தின.

    ஆமதாபாத்தை சேர்ந்த ஒரு நிறுவனம், ஆடைகளில் பிரின்டிங் செய்வதற்கான புதுமையான இயற்கை சாயங்களை உருவாக்கியுள்ளது.

    'கேட்டனைசேஷன்' என்கிற பிராசசிங் செய்யப்பட்ட நூலில் துணி தயாரிக்கும்போது, உப்பு இன்றி சாயமேற்றமுடியும். மேலும் கிரே நிற துணியை, ஒருமுறை மட்டும் சாயமேற்றினால் போதும். அடர் மற்றும் வெளிர் நிற கோடுகளுடன் கூடிய துணியாக மாறிவிடும். மும்பையைச்சேர்ந்த ஒரு நிறுவனம், கேட்டனைசேஷனுக்கு தேவையான ரசாயனங்களை கண்காட்சியில் வைத்திருந்தது.பிராசசிங்கின்போது துணிக்கு தீப்பிடிக்காத தன்மை, வைரஸ் தொற்று தடுப்பு, தண்ணீர் ஒட்டாத தன்மை அளிக்கும் பலவகையான ரசாயனங்களும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

    இது குறித்து திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்க பொருளாளர் மாதேஸ்வரன் கூறியதாவது:-

    டைஸ் அண்ட் கெம் கண்காட்சி, திருப்பூர் சாய ஆலை துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது. குறிப்பாக இயற்கை சாயங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.ஒரே நிறத்தில் பலவித வேறுபாடுகள், சாயமேற்றுதலுக்குப்பின் வேகமாக நிறம் இளகுதல் ,பிளீடிங் இவையெல்லாம் இயற்கை சாயமேற்றுதலில் மிகப்பெரிய சவால்களாக இருந்தன. இப்பிரச்னைகள் தற்போது களையப்பட்டுள்ளன. மாறுபாடில்லாத ஒரேவகை நிறம், சாயமேற்றியபின் அதிக நீடிப்புத்தன்மை மிக்க புதுவகை இயற்கை சாயங்கள் அறிமுகமாகியுள்ளன.

    எல்லா வகையிலும், ரசாயன நிறமிகளுக்கு இணையாக இயற்கை சாயங்களை பயன்படுத்தி துணிக்கு சாயமேற்றமுடியும் என்கிற நிலையை அடையும் தூரம் தொலைவில் இல்லை.வெளிநாட்டு வர்த்தகர்கள் இயற்கை சாயமேற்றுதலுக்கான ஆர்டர்கள் வழங்கினாலும் இனிசிறப்பாக கையாளமுடியும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது. கேட்டனை சேஷன் முறை மேம்படுவதன்மூலம் உப்பு இல்லா சாயமேற்றுதல் அதிகரிக்கும்.இவ்வாறுஅவர் கூறினார்.

    ×