search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teenage suicide"

    • விருதுநகர் அருகே காதல் தோல்வியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
    • பெண் தரமறுத்ததால் இந்த விபரீத முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் ஏ.டி.புது தெருவை சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ. இவரது சகோதரர் ஜான்பிரதீப் (வயது 20). பட்டப்படிப்பை பாதியி லேயே நிறுத்தி விட்டு பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். பெற்றோர் இல்லாததால் சகோதரர்கள் தாத்தா பராமரிப்பில் இருந்தனர்.

    இந்த நிலையில் ஜான் பிரதீப் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு காதலியின் பெற்றோரை சந்தித்த ஜான்பிரதீப் திருமணத்துக்கு பெண் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி பெண் தர மறுத்து விட்டனர்.

    இதனால் ஜான்பிரதீப் கடும் மனஉளைச்சலில் இருந்தார். சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்த அவர் சம்பவத்தன்று மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் வாழ்க்கையில் வெறுப் படைந்த ஜான்பிரதீப் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து சகோதரர் ஜான்பிரிட்டோ கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 11-ந் தேதி ரமேஷ் பிராந்தியில் விஷம் கலந்து குடித்து விட்டு நாப்பாளையம் பெருமாள் கோவில் அருகில் மயக்க நிலையில் கிடந்தார்.
    • இதனை அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் இடங்கணசாலை நாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சித்துராஜ். இவரது மகன் ரமேஷ் (29), இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்தநிலையில் கடந்த 11-ந் தேதி ரமேஷ் பிராந்தியில் விஷம் கலந்து குடித்து விட்டு நாப்பாளையம் பெருமாள் கோவில் அருகில் மயக்க நிலையில் கிடந்தார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று ரமேஷ் பரிதாபமாக இறந்தாார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். சம்பவம் குறித்து அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் காகாபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சேலம் எருமாபாளையத்தை சேர்ந்தவர் தமிழழகன் (32), இவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளனர்.
    • மகள் காலாண்டு தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்தது தொடர்பாக தமிழழகன் கேட்டதால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருேக உள்ள காக்காவேரி பகுதியை சேர்ந்தவர் ஜெயலெட்சுமி (32), இவருக்கும் தருமபுரியை சேர்ந்த நாகராஜன் என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 14 மற்றும் 11 வயதுகளில் 2 மகள்கள் உள்ளனர். இருவரும் அம்மாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளிகளில் 9 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன்-மனைவி பிரிந்தனர்.

    2-வது திருமணம்

    சேலம் எருமாபாளையத்தை சேர்ந்தவர் தமிழழகன் (32), இவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளனர். தமிழழகனும் மனைவியை பிரிந்து வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்த போது ஜெயலெட்சுமிக்கும், தமிழழ கனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு சேலம் அம்மாப்பேட்டை பூவாத்தாள் தெருவில் மகள்களுடன் வசித்து வந்தனர்.

    நேற்று மாலை குடிபோதையில் வீட்டிற்கு வந்த தமிழழகன், ஜெயலெட்சுமியுடன் தகரா றில் ஈடுபட்டார். அப்போது மகள் காலாண்டு தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்தது தொடர்பாக தமிழழகன் கேட்டதால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஜெயலெட்சுமி குக்கர் மூடியால் தமிழழகனை தாக்கினார். இதையடுத்து ஜெயலெட்சுமியை தமிழழகனும் தாக்கினார்.

    தற்கொலை

    இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயலெட்சுமி சமையல் அறையில் ஏற்கனவே உடைத்து தயாராக வைத்திருந்த பீ ர் பாட்டிலை எடுத்து நான் இருந்தால் தான் பிரச்சினை, நான் செத்து விடுகிறேன் என்ற கூறிய படி கழுத்தில் பீர் பாட்டிலால் தனக்கு தானே குத்தி கொண்டார்.

    இதனை பார்த்த தமிழழகனும், அவரது 2 மகள்களும் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். பின்னர் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதிக அளவில் ரத்தம் வெளியேறி அவர் சிறிது நேரத்தில் துடி துடித்து சம்பவ இடத்திேலயே இறந்து விட்டார்.

    தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தமிழழகன் மற்றும் 2 மகள்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது-

    தமிழழகன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து ஜெயலெட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் ஜெயலெட்சுமியின் மூத்த மகள் மதிப்பெண் குறைந்தது குறித்து தமிழழகன் நேற்று கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில் தமிழழகனும், ஜெயலெட்மியும் மாறி, மாறி தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரம் உடைந்த ஜெயலெட்சுமி பீர் பாட்டிலை எடுத்து தனக்கு தானே கழுத்தில் குத்தி தற்கொலை செய்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து ேபாலீசார் தமிழழகனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வடிவேல். இவரது மனைவி மீனா. இவர்களது மகன் தாமோதரன் (18), பிளஸ்-2 படித்து வந்த இவர், படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.
    • இதனால் மனம் உடைந்த அவர் சம்பவத்தன்று எலி பேஸ்டை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டி பஜனை மடத்தெரு பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி மீனா. இவர்களது மகன் தாமோதரன் (18), பிளஸ்-2 படித்து வந்த இவர், படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார். இதையடுத்து படிப்பை தொடருமாறும், அல்லது ேவலைக்கு செல்லுமாறு பெற்றோர் கூறி உள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர் சம்பவத்தன்று எலி பேஸ்டை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.

    இதனை பார்த்த தாய் மீனா அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால் சென்னைக்கு அழைத்து சென்றனர். அப்போது செல்லும் வழியில் உளுந்தூர் பேட்டை அருகே சென்ற போது திடீரென நெஞ்சு வலிப்பதாக தாமோதரன் கூறினார்.

    இதையடுத்து உறவி னர்கள்அவரை உளுந்தூர் பேட்டை அரசு ஆஸ்பத்தி ரிக்கு நேற்று கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்க னவே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த உறவி னர்கள் கதறி துடித்தனர். இது குறித்து மல்லியக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிவகாசி அருகே காதல் தோல்வியில் வடமாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஹனீப்அலி. இவரது மகன் ஹபிதுல் ஹக்(19). இவர் தனது ஊரில் உறவினர் பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பெண் வீட்டார் ஏற்கவில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் வந்த ஹபிதுல் ஹக் சிவகாசி சிட்கோவில் உள்ள தனியார் நிறுவ னத்தில் சேர்ந்து வேலை பார்த்து வந்தார்.

    சில வாரங்களுக்கு முன்பு மகனை பார்க்க அவரது பெற்றோர் வந்த னர். அப்போது காதலித்த பெண்ணை மறந்து விடுமாறும், வேறோரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர். ஆனால் ஹபிதுல் ஹக் இதனை ஏற்கவில்லை.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காதல் தோல்வியால் ஏற்பட்ட மன வருத்தத்தில் தான் தங்கியிருந்த அறையில் ஹபிதுல் ஹக் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை ஹனீப்அலி கொடுத்த புகாரின்பேரில் திருத்தங்கல் 

    • சதீஷ்குமார் (வயது 27). இவருக்கு திருமணம் ஆகி 1½ ஆண்டுகள் ஆகிறது.
    • இந்த நிலையில் சதீஷ்குமார் நேற்று குப்பனூர் பகுதியில் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார்.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே உள்ள குப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27). இவருக்கு திருமணம் ஆகி 1½ ஆண்டுகள் ஆகிறது.

    இந்த நிலையில் சதீஷ்குமார் நேற்று குப்பனூர் பகுதியில் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் வீராணம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். சதீஷ்குமார் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுந்தரேசன் திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
    • விவசாய நிலத்திற்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா வட மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை . விவசாயி. அவருடைய மகன் சுந்தரேசன் (வயது 25).திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த அவர் தனது பெற்றோரிடம் எனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டதாக தெரிகிறது.

    இதற்கு அவரது தந்தை ஏழுமலை கடன் வாங்கி திருமணம் செய்து வைக்கிறேன் என அறிவுறுத்தி உள்ளார். இதனால் விரக்தி அடைந்த சுந்தரேசன் வீட்டில் விவசாய நிலத்திற்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். பின்னர்வீ ட்டில் மயங்கி விழுந்தார். வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள்அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சுந்தரேசன் பரிதாபமாக இறந்தார்.தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் ,சப் -இன்ஸ்பெக்டர் ராமதாஸ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • அசோக்குமார் (வயது 33). எம்.பி.ஏ பட்டதாரியான இவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காததால் அசோக்குமார் மன உளைச்சலில் இருந்தார்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணன் நகர், 2-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் அசோக்குமார் (வயது 33). எம்.பி.ஏ பட்டதாரியான இவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இதனிடையே படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காததால் அசோக்குமார் மன உளைச்சலில் இருந்தார். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி எலி மருந்தை சாப்பிட்ட அவர், வீட்டில் யாரிடமும் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்து விட்டார்.

    கடந்த 19-ந் தேதி அசோக்குமாருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்படவே அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அப்போது, எலி மருந்து சாப்பிட்டதை கூறியுள்ளார். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அசோக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புகழேந்தி கருப்பூர் அருகே ஞானக்கவுண்டம் பட்டி பகுதியில் உள்ள ஒரு சிக்கன் கடையில் வேலை செய்து வருகிறார்.
    • மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர், நேற்றுமுன்தினம் மதியம் குடிபோதையில் இவரது கடைக்கு அருகே உள்ள கிணற்றில் திடீரென குதித்தார்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி சுப்பிரமணியன் தெருவை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 28). இவருக்கு திருமணமாகி ரேவதி என்ற மனைவி உள்ளார்.

    புகழேந்தி கருப்பூர் அருகே ஞானக்கவுண்டம் பட்டி பகுதியில் உள்ள ஒரு சிக்கன் கடையில் வேலை செய்து வருகிறார். மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர், நேற்றுமுன்தினம் மதியம் குடிபோதையில் இவரது கடைக்கு அருகே உள்ள கிணற்றில் திடீரென குதித்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி யடைந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், உடனடியாக கருப்பூர் போலீசாருக்கும், ஓமலூர் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, கிணற்றில் பிணமாக மிதந்த புகழேந்தியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், புகழேந்திக்கும், அவரது மனைவி ரேவதிக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் ரேவதி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதனால் மனமுடைந்த புகழேந்தி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார்த்தி (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
    • அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் கார்த்தியின் தாய் அவரை கண்டித்தார்.

    சேலம்:

    சேலம் கொண்ட லாம்பட்டி அடுத்த காட்டூர் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று அவரது மனைவி பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் கார்த்தியின் தாய் அவரை கண்டித்தார். இதனால் மனமுடைந்த கார்த்தி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

    அதனை பார்த்த உறவினர்கள் கதறினர். இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரமனூர் நாராயண பிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்தவர் சின்னவர். இவரது மனைவி ஜெனிபர் (வயது 19).
    • கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் பெரமனூர் நாராயண பிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்தவர் சின்னவர். இவரது மனைவி ஜெனிபர் (வயது 19). இவர்களுக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. சிறிது நேரம் வெளியில் சென்று விட்டு மீண்டும் சின்னவர் வீட்டுக்கு வந்தபோது, ஜெனிபர் வீட்டில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்தார். இதனை பார்த்து சின்ன வர், உறவி னர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஜெனிபரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஜெனிபர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தி னர். மேலும் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் வீராணம் அருகே உள்ள காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்.
    • சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி மோகனா (வயது 38). இவர் குடும்பத் தகராறு காரணமாக நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி கிடத்தார்.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே உள்ள காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி மோகனா (வயது 38). இவர் குடும்பத் தகராறு காரணமாக நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி கிடத்தார்.

    உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கே தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மோகனா பரிதாபமாக இறந்தார். இது குறித்து வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×