search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணமான 9 மாதத்தில் சோகம்குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை
    X

    திருமணமான 9 மாதத்தில் சோகம்குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை

    • பெரமனூர் நாராயண பிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்தவர் சின்னவர். இவரது மனைவி ஜெனிபர் (வயது 19).
    • கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் பெரமனூர் நாராயண பிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்தவர் சின்னவர். இவரது மனைவி ஜெனிபர் (வயது 19). இவர்களுக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. சிறிது நேரம் வெளியில் சென்று விட்டு மீண்டும் சின்னவர் வீட்டுக்கு வந்தபோது, ஜெனிபர் வீட்டில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்தார். இதனை பார்த்து சின்ன வர், உறவி னர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஜெனிபரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஜெனிபர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தி னர். மேலும் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×