என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில்குதித்து வாலிபர் தற்கொலை
- ஈரோட்டில் இருந்து பள்ளிபாளையம், நாமக்கல், திருச்செங்கோடு, சேலம், சென்னை போன்ற முக்கிய இடங்களுக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
- நண்பர்களுக்கு செல்போனில் ஒரு மெசேஜ் அனுப்பி திடீரென ரியாஸ் காவேரி ஆற்று பாலத்தில் இருந்து காவேரி ஆற்றில் குதித்தார்.
பள்ளிப்பாளையம்:
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி சோதனை சாவடி அருகே காவேரி பழைய பாலம், புது பாலம் என 2 பாலங்கள் உள்ளது.
போக்குவரத்துக்கு முக்கிய இடம்
இந்த வழியாகத்தான் ஈரோட்டில் இருந்து பள்ளிபாளையம், நாமக்கல், திருச்செங்கோடு, சேலம், சென்னை போன்ற முக்கிய இடங்களுக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இதேபோல் அங்கிருந்தும் ஈரோட்டுக்கு வருபவர்கள் இந்த பாலம் வழியாகத்தான் வருகின்றனர். இதனால் இந்த பாலம் போக்குவ ரத்துக்கு முக்கிய இடமாக உள்ளது.
தற்போது காவிரி ஆற்றில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு ள்ளதால் காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.
இந்நிலையில் இன்று காலை நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஜீவா செட் பகுதியை சேர்ந்த நசரத், சாஜிதா தம்பதிகளின் மகன் ரியாஸ் வயது (19.) தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினார். நேராக காவிரி ஆற்று பழைய பாலத்தின் நடுவில் திடீரென வண்டியை நிறுத்தினார்.
பின்னர் தனது நண்பர்களுக்கு செல்போனில் ஒரு மெசேஜ் அனுப்பி திடீரென ரியாஸ் காவேரி ஆற்று பாலத்தில் இருந்து காவேரி ஆற்றில் குதித்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் இதுகுறித்து கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பால சுப்பி ரமணியம் என்பவருக்கு தெரிவித்தனர்.
தேடும் பணி தீவிரம்
உடனடியாக அவர் இது குறித்து கருங்கல்பாளையம் போலீஸ் நிலையம் மற்றும் ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். கருங்கல் பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
ரியாஸ் குதித்த பகுதி மிகவும் ஆழமான பகுதியாகும். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் பரிசலில் சென்று மீனவர்கள் உதவியுடன் ரியாசை தேடி வருகின்ற னர். ஆம்புலன்சும் தயார் நிலையில் வைக்கப்ப ட்டுள்ளது.
இதனை வேடிக்கை பார்க்க அப்பகுதி மக்கள் கூட்டம் கூடி விட்டதால் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். ரியாஸ் பள்ளிபாளை யத்தில் உள்ள தனியார் நிறுவ னத்தில் வேலை பார்த்து வந்தார்.
அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கேரளா பதிவு எண்ணை கொண்டதாக உள்ளது. தொடர்ந்து அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்