search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
    X

    திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

    • தனது பெரியம்மா வனிதா வீட்டில் வளர்ந்தார்.
    • இன்னும் தனக்கு திருமணம் ஆகவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்து வந்த ரமேஷ், நேற்று இரவு வீட்டில் திடீரென தூக்குப் போட்டுக் கொண்டார்.

    சேலம்:

    சேலம் மெய்யனூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 27). இவரது பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டதால், தனது பெரியம்மா வனிதா வீட்டில் வளர்ந்தார். இவர் தனக்கு கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளார்.

    ரமேசுக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், இன்னும் தனக்கு திருமணம் ஆகவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்து வந்த ரமேஷ், நேற்று இரவு வீட்டில் திடீரென தூக்குப் போட்டுக் கொண்டார். இதைக் கண்ட உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த ரமேஷ், இன்று காலை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×