என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்6 Dec 2022 9:38 AM GMT (Updated: 7 Dec 2022 3:09 AM GMT)
- தனது பெரியம்மா வனிதா வீட்டில் வளர்ந்தார்.
- இன்னும் தனக்கு திருமணம் ஆகவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்து வந்த ரமேஷ், நேற்று இரவு வீட்டில் திடீரென தூக்குப் போட்டுக் கொண்டார்.
சேலம்:
சேலம் மெய்யனூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 27). இவரது பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டதால், தனது பெரியம்மா வனிதா வீட்டில் வளர்ந்தார். இவர் தனக்கு கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளார்.
ரமேசுக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், இன்னும் தனக்கு திருமணம் ஆகவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்து வந்த ரமேஷ், நேற்று இரவு வீட்டில் திடீரென தூக்குப் போட்டுக் கொண்டார். இதைக் கண்ட உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ரமேஷ், இன்று காலை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X