search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Young man committed suicide"

    • மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    ஜெயமங்கலம் அருகே உள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது40). இவருக்கு அனிதா (40) என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 வருடத்துக்கு முன்பு பிரிந்து விட்டனர். மனைவி பிரிந்ததில் செந்தில் வருத்தத்தில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஒரு தென்னந்தோப்பில் மரத்தின் உச்சியில் கைலியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது மனைவிக்கும் ஜெயமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மனைவி அனிதா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது
    • வாழ்க்கையில் விரக்தியடைந்த தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம்-கோவில்பட்டியை சேர்ந்தவர் முரளிகுமார் (25). ரெடிமேட் ஜவுளி வியாபாரி. இவருக்கு திருமணமாகி ஆண்குழந்தை ஒன்று உள்ளது.

    இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு ள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முரளிகுமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் முரளி குமார் உடலை கைப்பற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
    • மனமுடைந்த அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் அருகே மல்வார்பட்டியை சேர்ந்த வர் ராஜா(29). சென்டிரிங் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

    இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த ராஜா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேட சந்தூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்ட தால் மனஉளைச்சலில் இருந்த வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • எரியோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் அருகே மாரம்பாடியை சேர்ந்தவர் சேசுராஜ். இவரது மகன் அருள்செபஸ்தியார்(23). இவர்கள் குடும்பத்துடன் தோட்டத்து வீட்டில் தங்கி விவசாய வேலை செய்து வருகின்றனர்.

    குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்ட தால் மனஉளைச்சலில் இருந்த அருள்செபஸ்தியார் கிணற்றில் குதித்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் நிலைய அலுவலர் ஜேம்ஸ்அருள்பி ரகாஷ் தலைமையில் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    5 மணிநேர போராட்டத்திற்கு பிறகு அருள்செபஸ்தியார் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து எரியோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

    • வாலிபர் தற்கொலை செய்த அறையிலேயே மற்றொரு வாலிபரும் தூக்குமாட்டிய நிலையில் இறந்து கிடந்தார்.
    • கடந்த 40 நாளில் ஒரே அறையில் ஒரே ஊரை சேர்ந்த 2 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி ரங்கநாதபுரம் தேவாரம் மெயின்ரோட்டில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான தண்ணீர் கேன் சப்ளை செய்யும் பிளாண்ட் உள்ளது. இந்த மையத்தை சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி காலாப்பூரை சேர்ந்த கார்த்திக்(24) என்பவர் லீசுக்கு எடுத்து நடத்தி வந்தார்.

    தொழிலில் நஷ்டம் ஏற்படவே கடந்த மாதம் 19-ந்தேதி வாட்டர் பிளாண்ட் அறையிலேயே கார்த்திக்கின் தம்பி கிஷோர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அந்த பிளாண்ட்டில் கிஷோரின் உறவினரான சிவகங்கை மாவட்டம் காலாப்பூரை சேர்ந்த பாண்டியன் மகன் விஜய்(19) வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை கிஷோர் தற்கொலை செய்த அறையிலேயே அவரும் தூக்குமாட்டிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போடி டவுன்ேபாலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடந்த 40 நாளில் ஒரே அறையில் ஒரே ஊரை சேர்ந்த 2 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கடந்த ஒரு வருடமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு வாலிபர் மனஉளைச்சலில் இருந்தார்.
    • சம்பவத்தன்று பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள சாலிமரத்துப்பட்டி கிழக்குத்தெருவை சேர்ந்த சுப்புராஜ் மகன் முத்துராஜ்(34).

    இவருக்கு கடந்த ஒரு வருடமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த முத்துராஜ் பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தாய் இறந்த துக்கத்தில் மனஉளைச்சலில் மது பழக்கத்திற்கு அடிமையானார்.
    • தனது வீட்டிலேயே தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் சவேரியார்பாளையத்தை சேர்ந்தவர் ஜான்பீட்டர் மகன் பிரிட்டோ(29). சமையல் மாஸ்டரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டோவின் தாயார் உயிரிழந்துவிட்டார்.

    அப்போது முதல் மனஉளைச்சலில் மது பழக்கத்திற்கு அடிமையானார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தனது தாய் கனவில் வருவதாக கூறி உறவினர்களிடம் புலம்பி வந்துள்ளார். இதனால் அவருக்கு மனநலஆேலசானை வழங்கப்பட்டது.

    இன்று காலை தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து அறிந்ததும் நகர் தெற்கு போலீசார் விரைந்து சென்று பிரிட்டோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

    • மதுபழக்கத்திற்கு அடிமையானதால் வாலிபரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
    • இதனால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகில் உள்ள கோரையூத்து கிராமத்தை சேர்ந்தவர் குட்டிசாமி(32).

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மதுபழக்கத்திற்கு அடிமையானதால் குட்டிசாமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி பூங்கொடி கொடுத்த புகாரின்பேரில் மயிலாடும்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திண்டுக்கல் அருகே பள்ளி மாணவியை காதலித்த வாலிபர் திடீரென தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கம்பிளியம்பட்டியைச் சேர்ந்தவர் ஆண்டிச்சாமி (வயது 20). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார்.

    அடிக்கடி அவருடன் செல்போனில் பேசியும், வெளி இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்றும் வந்துள்ளார். இந்நிலையில் எரியோடு அருகே உள்ள தூங்கனாம்பட்டியில் தனது உறவினர் வீட்டு மாடியில் இன்று தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா தலைமையிலான போலீசார் அங்கு வந்து அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

    தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்த ஆண்டிச்சாமி உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து அவர் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இதய நோயால் அவதிப்பட்டு மனஉளைச்சலில் இருந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே கொடுவிலார்பட்டியை சேர்ந்தவர் மணிவாசகம் (வயது41).

    இவருக்கு இதய நோய் இருந்து வந்தது. இதற்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

    இதனால் மன உளைச்சலில் இருந்த மணிவாசகம் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×