search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவ பெண் கொலை"

    கைது செய்யப்பட்ட வாலிபர்களில் பிரகாஷ் மற்றும் ரஞ்சன்ராணா ஆகிய 2 பேரையும் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட இடத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் வடகாடு பகுதியில் கடல்பாசி சேகரித்து விட்டு வீட்டிற்கு திரும்பிய 45 வயது மதிக்கத்தக்க மீனவ பெண் கடந்த 24-ந் தேதி அங்குள்ள முட்புதரில் அரைநிர்வாண கோலத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இது குறித்து தகவலறிந்த ராமேசுவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண்ணை அதே பகுதியில் உள்ள வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 6 வாலிபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது தெரியவந்தது.

    இதையடுத்து ஒடிசா மாநில வாலிபர்களான பிரகாஷ் (வயது 22), விகாஸ்(24), ராகேஷ் (25), பிரசாத் (19), ரஞ்சன்ராணா(34), பிண்டு(19) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் கைது செய்வதற்கு முன்பாக அந்த 6 வாலிபர்களையும் பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.

    மேலும் அவர்கள் வேலை பார்த்த இறால் கம்பெனியில் இருந்த பொருட்களுக்கு தீ வைத்தனர். அதுமட்டுமின்றி கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வடகாடு மீனவ கிராம மக்கள் நேற்று முன்தினம் பலமணி நேரம் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

    பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த 6 வாலிபர்களும் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதால் அவர்களிடம் போலீசாரால் முழுமையாக விசாரணை நடத்த முடியவில்லை.

    இந்நிலையில் மருத்துவ சிகிச்சை முடிவடைந்ததை அடுத்து வாலிபர்கள் 6 பேரையும் நேற்று மாலை ராமேசுவரத்திற்கு அழைத்து சென்றனர். உச்சப்புளி போலீஸ் நிலையத்தில் வைத்து 6 பேரிடமும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் மற்றும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது குறித்து பல்வேறு தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த தங்க நகைகள் திருட்டு போயிருந்தது. அதுகுறித்தும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்நிலையில் கைது செய்யப்பட்ட வாலிபர்களில் பிரகாஷ் மற்றும் ரஞ்சன்ராணா ஆகிய 2 பேரையும் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட இடத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது தனியாக வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது எப்படி? என்று போலீசாரிடம் நடித்து காண்பித்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் நகைகளை அடகு வைக்க ராமேசுவரம் நகைக்கடை பஜாரில் உள்ள ஒரு நகைக்கடைக்கு சென்றிருக்கின்றனர். இதனால் நகைக்கடை பஜாருக்கு பிரகாஷை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    2 வாலிபர்களை மட்டும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியது குறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, ‘பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 6 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் முழுமையாக ஈடுபட்டவர்கள் எத்தனை பேர்? என்பது இன்று மாலைக்குள் தெரிந்து விடும்’ என்றனர்.



    பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற ஒடிசா மாநில வாலிபர்கள் 6 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் வடகாடு பகுதியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் நேற்று முன்தினம் கடல்பாசி சேகரிப்பதற்காக சென்றார். மாலை வரை வீடு திரும்பாததால் அந்த பெண்ணை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேடினர்.

    மேலும் அந்த பெண் மாயமானது குறித்து ராமேசுவரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில் அந்த பெண் அதே பகுதியில் கடற்கரையை ஒட்டிய இடத்தில் முள் புதரில் ஆடைகள் கலைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டு முகம் உள்ளிட்ட பகுதிகள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டது தெரியவந்தது.

    அவரை கொன்றவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பெண் பிணமாக கிடந்த இடத்திற்கு அருகே செயல்பட்டு வரும் இறால் பண்ணையில் பணிபுரியும் ஒடிசா மாநில வாலிபர்கள் பிரகாஷ் (வயது 22), விகாஷ் (24), ராகேஷ் (25), பிரசாத் (19), ரஞ்சன்ராணா (34), பிண்டு (19) ஆகியோர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் போலீசாருடன் நின்ற பொதுமக்கள் வாலிபர்கள் 6 பேரையும் சரமாரியாக தாக்கினர். மேலும் இறால் பண்ணையின் முன் பகுதியில் இருந்த வாகனம் மற்றும் பொருட்களுக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அந்த வாலிபர்கள் 6 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கடல்பாசி சேகரித்துவிட்டு தனியாக வந்த பெண்ணை 6 பேரும் வழிமறித்து புதருக்குள் தூக்கிச்சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து 6 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர். பொதுமக்கள் தாக்கியதில் அவர்கள் 6 பேரும் காயமடைந்திருந்தனர். இதனால் 6 வாலிபர்களும் சிகிச்சைக்காக மதுரை மற்றும் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் கூட்டு பலாத்காரம் செய்து பெண்ணை கொன்ற கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும், வடமாநில வாலிபர்கள் பணிபுரிந்த இறால் பண்ணையை மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்ணின் உறவினர்கள், குடும்பத்தினர் வடகாடு மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் ராமேசுவரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு 6 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறையினர் மற்றும் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பொதுமக்கள் தங்களின் போராட்டத்தை வெகுநேரத்திற்கு பின் கைவிட்டனர்.

    அதன்பிறகு கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற ஒடிசா மாநில வாலிபர்கள் 6 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சிகிச்சையில் இருப்பதால் 6 வாலிபர்களிடமும் போலீசார் முழுமையாக விசாரணை நடத்த முடியவில்லை. சிகிச்சை முடிந்ததும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, அதன்பிறகு அவர்கள் 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



    பெண் படுகொலையை கண்டித்து வடகாடு மீனவ கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ராமேசுவரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்துள்ள வடகாடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி சந்திரா (வயது 45). இவர் வடகாடு கடல் பகுதியில் கடற்பாசி சேகரிக்கும் தொழில் செய்து வருகிறார்.

    நேற்று காலையில் சந்திரா வழக்கம் போல் கடல் பாசி எடுக்க சென்றுள்ளார். அவர் தினமும் மாலை 4 மணிக்கு வேலை முடிந்து வீடு திரும்பி விடுவார். ஆனால் நேற்று மாலை வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அச்சம் அடைந்த கணவர் மற்றும் உறவினர்கள் வடகாடு கடல் பகுதியில் தேடினர்.

    இரவு வரை தேடியும் சந்திரா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அது குறித்து கணவர் பாலு ராமேசுவரம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வடகாடு பகுதிக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் மாயமான சந்திராவை வடகாடு கடற்கரையை ஒட்டியுள்ள காட்டு பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்திரா அங்கிருந்த முள்புதருக்குள் உடல் எரிந்த நிலையில் அரைநிர்வாணமாக பிணமாக கிடந்துள்ளார். அவரது முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்திருந்தது. கழுத்தில் துணியால் இறுக்கியதற்கான தடயங்கள் இருந்தன. இதனால் அவரை யாரோ மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து கொன்று விட்டு உடலை தீ வைத்து எரித்திருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து அந்த பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் இறால் பண்ணையில் வேலை செய்யும் வடமாநில வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

    இதனால் போலீசாருடன் சென்ற ஊர் மக்கள் ஆத்திரம் அடைந்து இறால் பண்ணையை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். மேலும் இறால் பண்ணையில் பணிபுரிந்த 6 வடமாநில வாலிபர்களையும் பொதுமக்கள் சரமாரியாக தாக்கி, அவர்களை ஒரு அறையில் வைத்து பூட்டினர்.

    அந்த 6 வாலிபர்களையும் போலீசார் மீட்டு விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். சந்திராவின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர்.

    அப்போது அங்கு திரண்டிருந்த ஊர் மக்கள் சந்திராவின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உடலை எடுக்க விட மாட்டோம் என்று கூறி போலீசாரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    இதையடுத்து பொதுமக்கள் சந்திராவின் உடலை எடுக்க அனுமதித்தனர். சந்திராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் வடமாநில வாலிபர்கள் 6 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த வாலிபர்களில் 3 பேர் சந்திராவை கூட்டு பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு உடலை தீவைத்து எரித்தது தெரியவந்தது. கடல் பாசி சேகரிப்பதற்காக சந்திரா சென்றபோது, அவரை இறால் பண்ணையில் வேலை பார்த்த வடமாநில வாலிபர்கள் 3 பேர் கஞ்சா போதையில் வழிமறித்து தகராறு செய்திருக்கின்றனர்.

    பின்பு அவரை வடகாடு காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று 3 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அதன்பிறகு சந்திராவை அங்கு வைத்து அவரது சேலையாலேயே கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கின்றனர்.

    சந்திராவை அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக முட்புதரில் அவரது உடலை போட்டு முகம் மற்றும் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்திருக்கின்றனர். இதையடுத்து வடமாநில வாலிபர்கள் 3 பேரும் தாங்கள் பணிபுரிந்து இறால் கம்பெனிக்கு சென்று விட்டனர்.

    இந்நிலையில் மாயமான சந்திராவை தேடியபோது அவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டு கிடந்தது கண்டறியப்பட்டது. பொதுமக்கள் தாக்கியதில் வடமாநில வாலிபர்கள் 6 பேரும் காயமடைந்தனர். இதனால் அவர்களை ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

    அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு மேல் சிகிச்சைக்காக வாலிபர்கள் 6 பேரும் மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டனர். வடமாநில வாலிபர்கள் 6 பேரும் சிகிச்சையில் இருப்பதால் அவர்களிடம் போலீசார் முழுமையாக விசாரணை நடத்த முடியவில்லை.

    இதனால் சந்திராவை கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற 3 வாலிபர்கள் யார்? என்பது உறுதி செய்யப்படாமல் உள்ளது. வாலிபர்கள் 6 பேரும் இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதனால் சிகிச்சை முடிந்ததும் 6 பேரிடமும் விசாரணையை தீவிரப்படுத்த போலீசார் முடிவெடுத்துள்ளனர். அவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில் போலீஸ் கண்காணிப்பில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் சந்திரா படுகொலையை கண்டித்து வடகாடு மீனவ கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ராமேசுவரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள், மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.

    சந்திராவை கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி நஷ்டஈட வழங்க வேண்டும், வடமாநில வாலிபர்கள் வேலை பார்த்த இறால் பண்ணையை மூட வேண்டும், அதன் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    பொதுமக்களின் இந்த போராட்டத்தால் ராமேசுவரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து ராமேசுவரம் துணை தாசில்தார் அப்துல் ஜப்பார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சம்பவ இடத்திற்கு கலெக்டர் வரவேண்டும் மற்றும் தங்களின் கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்றுவதாக அரசு உத்தரவாதம் தர வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ராமேசுவரத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.



    ராமேஸ்வரம் அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து மீனவ பெண் எரித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 6 வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
    ராமநாதபுரம்:

    ராமேஸ்வரம் அருகே வடகாடு கடல் பகுதியில் கடற்பாசி சேகரிக்க சென்ற இடத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து 45 வயது மீனவ பெண் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

    கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 6 வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    ×