search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராமேசுவரம் நகைக்கடை பஜாருக்கு பிரகாசை போலீசார் விசாரணைக்காக அழைத்து வந்த காட்சி.
    X
    ராமேசுவரம் நகைக்கடை பஜாருக்கு பிரகாசை போலீசார் விசாரணைக்காக அழைத்து வந்த காட்சி.

    கூட்டு பலாத்காரம் செய்து பெண் கொலை- போலீசாரிடம் நடித்து காண்பித்த வடமாநில வாலிபர்கள்

    கைது செய்யப்பட்ட வாலிபர்களில் பிரகாஷ் மற்றும் ரஞ்சன்ராணா ஆகிய 2 பேரையும் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட இடத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் வடகாடு பகுதியில் கடல்பாசி சேகரித்து விட்டு வீட்டிற்கு திரும்பிய 45 வயது மதிக்கத்தக்க மீனவ பெண் கடந்த 24-ந் தேதி அங்குள்ள முட்புதரில் அரைநிர்வாண கோலத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இது குறித்து தகவலறிந்த ராமேசுவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண்ணை அதே பகுதியில் உள்ள வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 6 வாலிபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது தெரியவந்தது.

    இதையடுத்து ஒடிசா மாநில வாலிபர்களான பிரகாஷ் (வயது 22), விகாஸ்(24), ராகேஷ் (25), பிரசாத் (19), ரஞ்சன்ராணா(34), பிண்டு(19) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் கைது செய்வதற்கு முன்பாக அந்த 6 வாலிபர்களையும் பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.

    மேலும் அவர்கள் வேலை பார்த்த இறால் கம்பெனியில் இருந்த பொருட்களுக்கு தீ வைத்தனர். அதுமட்டுமின்றி கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வடகாடு மீனவ கிராம மக்கள் நேற்று முன்தினம் பலமணி நேரம் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

    பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த 6 வாலிபர்களும் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதால் அவர்களிடம் போலீசாரால் முழுமையாக விசாரணை நடத்த முடியவில்லை.

    இந்நிலையில் மருத்துவ சிகிச்சை முடிவடைந்ததை அடுத்து வாலிபர்கள் 6 பேரையும் நேற்று மாலை ராமேசுவரத்திற்கு அழைத்து சென்றனர். உச்சப்புளி போலீஸ் நிலையத்தில் வைத்து 6 பேரிடமும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் மற்றும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது குறித்து பல்வேறு தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த தங்க நகைகள் திருட்டு போயிருந்தது. அதுகுறித்தும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்நிலையில் கைது செய்யப்பட்ட வாலிபர்களில் பிரகாஷ் மற்றும் ரஞ்சன்ராணா ஆகிய 2 பேரையும் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட இடத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது தனியாக வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது எப்படி? என்று போலீசாரிடம் நடித்து காண்பித்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் நகைகளை அடகு வைக்க ராமேசுவரம் நகைக்கடை பஜாரில் உள்ள ஒரு நகைக்கடைக்கு சென்றிருக்கின்றனர். இதனால் நகைக்கடை பஜாருக்கு பிரகாஷை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    2 வாலிபர்களை மட்டும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியது குறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, ‘பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 6 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் முழுமையாக ஈடுபட்டவர்கள் எத்தனை பேர்? என்பது இன்று மாலைக்குள் தெரிந்து விடும்’ என்றனர்.



    Next Story
    ×