search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "municipal officer"

    நாகர்கோவில் குத்தகை காலம் முடிந்து காலி செய்யாத கடைகளுக்கு சீல் வைக்கச் சென்ற நகராட்சி ஆய்வாளருக்கு அங்கிருந்தவர்கள் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றவும் போக்குவரத்து இடையூறாக இருக்கும் கொடி கம்பங்களையும் நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும் நகராட்சி ஆணையாளர் சரவணகுமார் உத்தரவின் பேரில் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் குத்தகைக்கு எடுத்தவர்கள் குத்தகை முடிந்தும் இடத்தை காலி செய்யாமல் இருப்பவர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் சந்தோஷ்குமார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் நாகர் கோவில் ஒழுகினசேரி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் குத்தகை காலம் முடிந்தும் நகராட்சி இடத்தை காலி செய்யாத கடைகளை சீல் வைக்கவும் அதிகாரிகள் சென்றனர். அப்போது அங்கிருந்தவர்கள் கடைகளுக்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்தும் நகராட்சி ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தும் அவர்களுக்கு மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து வடசேரி போலீஸ் நிலையத்தில் சந்தோஷ்குமார் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்ல குமரேசன் ஆகியோர் விசாரணை நடத்தி அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததாக கடைக்காரர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
    ×