search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Highways Department"

    • சாலையை அகலப்படுத்தாமல் அன்பளிப்பு பெற்றுக் கொண்டு ஒருதலைப் பட்சமாக செயல்படுகின்றனர்.
    • நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் கோண்டூரிலிருந்து மடப்பட்டு வரை ரூ.230 கோடி செலவில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றது. நெல்லிக்குப்பம் பகுதியில் நடக்கும் சாலைப் பணிகளில் சரியான முறையில் அளவீடு செய்யவில்லை. இதனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. சாலையை அகலப்படுத்தாமல் அன்பளிப்பு பெற்றுக் கொண்டு ஒருதலைப் பட்சமாக செயல்பட்டு வரும் அதிகாரிகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று காலை சாலை மறியல் நடைபெற்றது.

    மாநில வக்கீல் பிரிவு துணை செயலாளர் குருமூர்த்தி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் அண்ணா சிலை முன்பு திரண்டனர். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். ்தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சாலை விரிவாக்க பணிகளையும், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியும் சரியான முறையில் செய்யவில்லை என்றால் எங்கள் போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • நெடுஞ்சாலைத் துறை மூலம் ஓமலூரிலிருந்து சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் வரை 4 வழிச்சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.
    • மாநில நெடுஞ்சாலைத் துறை தலைமை திட்ட இயக்குனர் பிரபாகர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    சங்ககிரி:

    ஆசிய வளர்ச்சி வங்கியின் 50 சதவீத நிதி உதவியுடன் சென்னை- கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டம், நெடுஞ்சாலைத் துறை மூலம் ஓமலூரிலிருந்து சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் வரை 4 வழிச்சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.

    இந்தப் பணியை மாநில நெடுஞ்சாலைத் துறை தலைமை திட்ட இயக்குனர் பிரபாகர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒப்பந்ததாரர்களிடம் சாலை பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின்போது தலைமை பொறியாளர் செல்வன், கோட்டப் பொறியாளர் சசிகுமார், தனி மாவட்ட வருவாய் அலுவலர் லதா, உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் சாலைப் பணியின் ஒப்பந்ததாரர்கள், மேற்பார்வை ஆலோசகர்களும் உடன் இருந்தனர்.

    • 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சென்னையில் முதல்வர் தொடங்கி வைத்தார்.
    • நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், சாலை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதன்படி திருப்பூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்லடம் அருகே மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கண்காணிப்பு பொறியாளர் சரவணன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோட்ட பொறியாளர் ரமேஷ் கண்ணா, உதவி கோட்ட பொறியாளர் தனலட்சுமி, உதவிப் பொறியாளர் பாபு, மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், சாலை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் சந்தி ரன் மற்றும் அரசு அலுவ லர்கள் உடனிருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் நெடுஞ் சாலைத்துறை யின் மூலம் புதிய சாலைகள் மற்றும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    போகலூர் ஊராட்சி ஒன்றியம், எட்டிவயல் முதல் இதம்பாடல் வரை நெடுஞ் சாலைத்துறையின் மூலம் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17.50 கோடி மதிப்பீட்டில் இடை வெளி தடத்திலிருந்து இருவழிச்சாலை அகலப் படுத்தும் பணி நடை பெறுவதை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வை யிட்டார். அப்போது பணிகளை காலதாமதமின்றி முடித்திட அலுவலர் களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத் தில் 2022-23-ம் ஆண்டிற்கு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 28பணிகள் தேர்வு செய்யப்பட்டு 60.300 கிலோ மீட்டர் தூரம் பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. இதன் மூலம் இருவழிச் சாலைகளாக அகலப் படுத்தும் பணி மற்றும் புதிய பாலங்கள் அமைக்கும் பணி, விபத்துக்கள் நடை பெறும் பகுதியை கண்ட றிந்து சாலைகளை ேமம்படுத்தும் பணி போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 19 பணிகள் 49.470 கி.மீ. தூரம் சாலைகள் அமைக்கும் பணி முடிக்கப் பட்டுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட சாலை பணிகளை சீரமைப்பதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கு மிகப்பயனுள்ளதாக இருப்பதுடன் அதிகமாக விபத்துக்கள் நடை பெறக் கூடிய பகுதிகளை கண்ட றிந்து தொழில்நுட்ப முறையுடன் வடிவமைக்கப் பட்டவுடன் விபத்துகள் தவிர்க்கப்படுகிறது. இதுவும் வாகன ஓட்டி களுக்கு பாது காப்பாக இருக்கும்.

    இதே போல் நடப்பாண்டிற்கு பொது மக்களின் தேவையை அறிந்து கூடுதலாக சாலை அமைத்தல், சாலைகளை விரிவுபடுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப் படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் சந்தி ரன் மற்றும் அரசு அலுவ லர்கள் உடனிருந்தனர்.

    • ஜேடர்பாளையம் சரளைமேடு பகுதியில் தார்சாலையின் நெடுகிலும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 100-க்கு மேற்பட்டோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.
    • இறுதி தீர்ப்பில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் சரளைமேடு பகுதியில் தார்சாலையின் நெடுகிலும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 100-க்கு மேற்பட்டோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் இடத்தில் வீடுகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தினர்.

    இது சம்பந்தமான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி தீர்ப்பில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேல் நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தவில்லை.

    அதன் காரணமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதன்படி நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்கள் வீடுகளை காலி செய்யுமாறு கடந்த வாரம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினார்கள். இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடாது என கோரி அங்கு குடியிருப்பவர்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் அ.மு.மு.க.வை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஜேடர்பாளையம் நான்கு ரோடு அருகே கடநத 9-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறைப்ப டுத்தும்வகையில் இன்று நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலையின் இருபுறமும் உள்ள வீடுகளை அகற்றுவதற்கு ஜே.சி.பி. எந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அப்பகுதியில் குடியிருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், நூறுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இன்று காலை 10 மணிக்கு வீடுகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடங்கப்படஉள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றுவதை முன்னிட்டு அங்கு பிரச்சனைகள் ஏற்படாத வகையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ( மதுவிலக்கு) மணிமாறன் தலைமையில் பரமத்தி வேலூர் போலீஸ் டி.எஸ்.பி. ராஜாரணவீரன் , போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், வீரம்மாள், ராமச்சந்திரன், இந்திராணி,10க்கும் மேற்பட்ட போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 100 க்குகும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சந்திரசேகர் ,உதவி கோட்ட பொறியாளர் மாணிக்கம் ,உதவி பொறியாளர் பாலகிருஷ்ணன் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், ஊழியர்கள், பரமத்தி வேலூர் தாசில்தார் சிவகுமார், வருவாய் ஆய்வாளர்கள் ,கிராம நிர்வாக அலுவலர்கள், மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் ஊழியர்கள் இடிக்கும் பணி நடைபெறும் இடத்தில் உள்ளனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

    சாத்தான்குளத்தில் பழுதான ரோட்டினை சீரமைக்கக்கோரி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளத்திலிருந்து விஜயராமபுரம், அடப்புவிளை, சாமிதோப்பு, திருப்பூர் மற்றும் தட்டார்மடம் வழியாக திசையன்விளைக்கு செல்லும் மெயின்ரோடு பழுதுபட்டதால் வாகனங்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டது.

    பழுதான இந்த ரோட்டினை சீரமைக்கக்கோரி அப்பகுதி கிராமமக்களும், அரசியல் கட்சியினரும் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில் தற்பொழுது நெடுஞ்சாலைத்துறையினர் இப்பகுதியில் புதிதாக தார் ரோடு அமைத்துள்ளனர்.

    விஜயராமபுரத்திலிருந்து போடப்பட்ட புதிய தார் ரோட்டின் இருபக்க வாட்டிலும் மணல் போட்டு நிரப்புவதால் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் சென்றால் இந்த பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. இதனால் இந்த கிராமங்கள் வழியாக கடந்த 3 மாத காலமாக பஸ்கள், வாகனங்கள் செல்லாமல் நிறுத்தப்பட்டது.

    இதனால் இப்பகுதி கிராமமக்கள் வெளியூர் செல்ல போக்குவரத்து வசதியின்றி சிரமப்பட்டதால் உடனே போடப்பட்ட புதிய தார்ரோட்டின் இரு பக்க வாட்டில் உள்ள பள்ளத்தை மணலால் நிரப்ப கோரியும், விஜயராமபுரம் கிராமத்திற்கு குடிதண்ணீர் கிடைத்திட ரோட்டோரம் போர் போட கோரியும் கிராமமக்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதையடுத்து விஜயராமபுரம், திருப்பூர் இதன் சுற்றுபுரத்திலுள்ள சுமார் 300-க்கு மேற்பட்ட கிராமமக்கள் சாத்தான் குளத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவர் செல்வராஜ், விஜயராமபுரம் சண்முகவேல் தலைமையில் முற்றுகையிட்ட ஆண்களும், பெண்களும் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர். இதில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப், முன்னாள் யூனியன் கவுன்சிலர் செல்வராஜ் உட்பட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    தகவலறிந்த சாத்தான்குளம் தாசில்தார் ஞானராஜ் மற்றும் வருவாய்துறையினர் விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கணேசன் மற்றும் நிர்வாக பொறியாளர் உட்பட நெடுஞ்சாலைத்துறையினரும் கலந்து கொண்டனர்.

    முடிவில் புதிதாக போடப்பட்ட ரோட்டின் இருபக்க வாட்டில் உள்ள பள்ளத்தை மூடியும், விஜயராமபுரம் கிராமத்திற்கு தண்ணீர் கிடைக்க போர் போடுவது குறித்தும் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் கிராம மக்கள், அரசியல் கட்சியினர் கலைந்து சென்றனர். #tamilnews
    ×