search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வரும் சாலைப்பணிகள்- கலெக்டர் ஆய்வு
    X

    நெடுஞ்சாலைத்துறையின் மூலம் நடைபெற்று வரும் சாலைப்பணிகள் தொடர்பாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், அதிகாரிகளுடன் நேரடியாக ஆய்வு செய்தார். 

    நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வரும் சாலைப்பணிகள்- கலெக்டர் ஆய்வு

    • நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் சந்தி ரன் மற்றும் அரசு அலுவ லர்கள் உடனிருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் நெடுஞ் சாலைத்துறை யின் மூலம் புதிய சாலைகள் மற்றும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    போகலூர் ஊராட்சி ஒன்றியம், எட்டிவயல் முதல் இதம்பாடல் வரை நெடுஞ் சாலைத்துறையின் மூலம் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17.50 கோடி மதிப்பீட்டில் இடை வெளி தடத்திலிருந்து இருவழிச்சாலை அகலப் படுத்தும் பணி நடை பெறுவதை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வை யிட்டார். அப்போது பணிகளை காலதாமதமின்றி முடித்திட அலுவலர் களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத் தில் 2022-23-ம் ஆண்டிற்கு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 28பணிகள் தேர்வு செய்யப்பட்டு 60.300 கிலோ மீட்டர் தூரம் பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. இதன் மூலம் இருவழிச் சாலைகளாக அகலப் படுத்தும் பணி மற்றும் புதிய பாலங்கள் அமைக்கும் பணி, விபத்துக்கள் நடை பெறும் பகுதியை கண்ட றிந்து சாலைகளை ேமம்படுத்தும் பணி போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 19 பணிகள் 49.470 கி.மீ. தூரம் சாலைகள் அமைக்கும் பணி முடிக்கப் பட்டுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட சாலை பணிகளை சீரமைப்பதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கு மிகப்பயனுள்ளதாக இருப்பதுடன் அதிகமாக விபத்துக்கள் நடை பெறக் கூடிய பகுதிகளை கண்ட றிந்து தொழில்நுட்ப முறையுடன் வடிவமைக்கப் பட்டவுடன் விபத்துகள் தவிர்க்கப்படுகிறது. இதுவும் வாகன ஓட்டி களுக்கு பாது காப்பாக இருக்கும்.

    இதே போல் நடப்பாண்டிற்கு பொது மக்களின் தேவையை அறிந்து கூடுதலாக சாலை அமைத்தல், சாலைகளை விரிவுபடுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப் படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் சந்தி ரன் மற்றும் அரசு அலுவ லர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×