என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சுதந்திர தின விழா... கருப்பு சட்டை அணிந்து வந்த தலைமை ஆசிரியர் - பாஜகவினர் போராட்டம்
    X

    சுதந்திர தின விழா... கருப்பு சட்டை அணிந்து வந்த தலைமை ஆசிரியர் - பாஜகவினர் போராட்டம்

    • சுதந்திர தின விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் தர்மராஜன் கருப்பு நிற சட்டையை அணிந்து வந்தார்.
    • தலைமை ஆசிரியருக்கு எதிராக பாஜகவினர் முழக்கமிட்டனர்.

    இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் ராமநாதபுரம் பரமக்குடி அருகே எமனேஸ்வரம் பகுதியில் செயல்பட்டு வரக்கூடிய அரசுப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

    சுதந்திர தின விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் தர்மராஜன் கருப்பு நிற சட்டையை அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் பள்ளியை முற்றுகையிட்டனர். தலைமை ஆசிரியருக்கு எதிராக பாஜகவினர் முழக்கமிட்டனர்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்தனர்.

    இந்நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் தர்மராஜன் தினமும் பள்ளிக்கு கருப்பு நிற சட்டை அணிந்து தான் வருகை தருகிறார் என்று குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×