search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி தெற்கு மாவட்டத்தில் சிறப்பு முகாம்களில் அதிகளவு இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் -தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் வேண்டுகோள்
    X

    தென்காசி தெற்கு மாவட்டத்தில் சிறப்பு முகாம்களில் அதிகளவு இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் -தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் வேண்டுகோள்

    • சிறப்பு முகாம்கள் இம்மாதம் 4,5, 18,19 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெற உள்ளது.
    • முகாம்களில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை கண்டறிந்து பட்டியலில் இணைப்பதில் ஆர்வம் காட்டிட வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெய பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் கடந்த மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டது. இதைத்தொடர்ந்து வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், பெயர் பிழை திருத்தம்,முகவரி மாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்வதற் காக இம்மாதம் 4,5,18,19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெற உள்ளது. எனவே தென்காசி தெற்கு மாவட்ட பகுதிக்குட் பட்ட தென்காசி, ஆலங்குளம், கடையநல் லூர் சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் இம் முகாம்களில் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், கிளை செயலாளர்கள், பாக முகவர்கள், பாக பொறுப் பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு, பெயர் நீக்கம், பிழை திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றில் ஈடுபடுவதுடன். 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை கண்டறிந்து பட்டியலில் இணைப்பதில் ஆர்வம் காட்டிட வேண்டும். குறிப்பாக இளைஞர்களை அதிகளவில் வாக்காளர் பட்டியலில் சேர்த்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×