search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Linking of Aadhaar number"

    • நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் உள்ள வீடுகள், கைத்தறி, விசைத்தறி மற்றும் விவசாயத்திற்கான மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் நெல்லை மின் பகிர்மான வட்ட மத்திய அலுவலகத்தில் இன்று தொடங்கப்பட்டது.
    • நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி தலைமை தாங்கினார்.

    நெல்லை:

    நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் உள்ள வீடுகள், கைத்தறி, விசைத்தறி மற்றும் விவசாயத்திற்கான மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் நெல்லை மின் பகிர்மான வட்ட மத்திய அலுவலகத்தில் இன்று தொடங்கப்பட்டது.

    நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் (பொது) வெங்கடேஷ் மணி, நெல்லை நகர்புற செயற்பொறியாளர் முத்துக்குட்டி மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர் வீர லெட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல தலைமை பொறியாளர் செல்வக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாம் அலுவலக த்தை திறந்து வைத்தார்.

    இதில் உதவி செயற்பொறியாளர்கள் எட்வர்ட் பொன்னுசாமி, தங்கமுருகன், சின்னசாமி, ராஜகோபால், சங்கர, சண்முகராஜன், சலோமி வாசுகி, சசிரேகா, உதவி மின் பொறியாளர்கள் வெங்கடேஷ், சங்கரநா ராய ணன், சரவணன் மற்றும் மின்வாரிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த சிறப்பு முகாம் இன்று முதல் வருகிற டிசம்பர் 31-ந் தேதி வரை நடைபெறும். மேலும் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள 103 பிரிவு அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி சிறப்பு முகாம்கள் நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமினை பயன்படுத்தி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம்.

    இத்தகவலை நெல்லை மின் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் குருசாமி தெரிவித்துள்ளார்.

    ×