search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women's Rights Fund"

    • இ- சேவை மையம் மூலமாக மேல் முறையீடு செய்யலாம்
    • கலெக்டர் தகவல்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து கலெக்டர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு செப்டம்பர் 15-ந் தேதி அன்றே உரிமைத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்குடன் ஆதார் எண்களை இணைக்காத வங்கி கணக்குகளுக்கு உரிமைத் தொகை வரவு வைக்க இயலாத நிலை உள்ளது.

    இதனை சரி செய்து விரைவில் வங்கி கணக்கில் உரிமைத்தொகை வரவு வைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அஞ்சலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மணியார்டர் மூலம் பணம் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் பணத்தை தேவைப்படும் போது எடுத்துக் கொள்ளலாம். வங்கியில் வரவு வைத்த அன்றே எடுக்க வேண்டும் என்று சொல்லப்படும் தகவல் தவறானது.

    ஒரே நேரத்தில் அனைவரும் வங்கிக்கு சென்று பணம் எடுப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. வங்கி கடன் மற்றும் சேவை கட்டணத்திற்காக உரிமைத் தொகையை பிடித்தம் செய்யும் வங்கிகள் குறித்து 1100 என்ற கட்டணமில்லா எண்களில் தொடர்பு கொண்டு தகவல் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த திட்டத்தில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவில்லை என்றால் 30 நாட்களுக்குள் இ- சேவை மையம் மூலமாக மேல் முறையீடு செய்யலாம்.

    விண்ணப்ப நிலை குறித்து தகவல் அறிய https://kmut.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். மேலும் கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களுக்கு சென்று விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம்.

    இந்த திட்டத்தில் ஒரு தகுதியான பெண்கள் கூட விடுபடக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அனைத்து பெண்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
    • கலெக்டர் வளர்மதி தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ,கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்கள் ஆகியவற்றில் கீழ்கண்ட உதவி மையங்கள் தனியாக செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் புதிதாக பயன்பெற வேண்டுமெனில் எவ்வாறு விண்ணப்பிப்பது உட்பட இது தொடர்பாக ஏற்படும் அனைத்து சந்தேகங்களையும் இந்த உதவி மையத்தில் பணிபுரியும் அலுவலர்கள் தீர்த்து வைப்பார்கள்.

    பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி அவர்களுக்கு திட்டம் தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள், திட்டத்தில் பயனாளியாக இருந்தும் தொகை பெறுவதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டிருந்தாலோ அல்லது பெறப்பட்ட தொகை வங்கியினரால் பிடித்தம் செய்யப்ப ட்டிருந்தாலோ இந்த உதவி மையத்தில் புகார் தெரிவிக்கலாம்.

    உதவி மையங்கள்:-

    ராணிப்பே ட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் அலுவலக கண்காணி ப்பாளர் சுப்பிரமணி-செல்-9489985791.

    ராணிப்பே ட்டை வருவாய் கோட்டா ட்சியர் அலுவலகம் , வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர், பழனிராஜன்-செல்-9489985792. அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர்,ஆனந்தன் -செல் -9489985793. வாலாஜா தாலுகா அலுவலகம்,முதுநிலை வருவாய் ஆய்வாளர், இளங்கோவன்-செல்- 9489985794. ஆற்காடு தாலுகா அலுவலகம் இளநிலை வருவாய் ஆய்வாளர், தமிழழகன்-செல் -9489985795. சோளிங்கர் தாலுகா அலுவலகம் முதுநிலை வருவாய் ஆய்வாளர், ஜெயபால்- செல்-9489985796.

    கலவை தாலுகா அலுவலகம், முதுநிலை வரு வாய் ஆய்வாளர்,ஆனந்தன்-செல்- 9489985797. அரக்கோணம் தாலுகா அலுவலகம் ,முதுநிலை வருவாய் ஆய்வாளர்,உமாபதி- செல்-9489985798. நெமிலி தாலுகா அலுவலகம், முதுநிலை வருவாய் ஆய்வாளர், வெங்கடேசன்- செல் -9489985799.

    இந்த வசதியை தகுதியுள்ள அனைத்து பெண்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் வளர்மதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட தொடக்க நிகழ்ச்சி ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

    முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் எம்.பி முன்னிலை வகித்து பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு 2ஆயிரத்து 610 பயனாளிகளுக்கு மகளிர் உரிமை தொகை க்கான ஏ.டி.எம் அட்டைகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 614 ரேசன் கடைகளில் 3 லட்சத்து 48ஆயிரம் குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர்.

    அவர்களிடமிருந்து 2 லட்சத்து 29 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சுமார் 1½ லட்சம் பயனாளிகள் தேர்வு செய்யப்ப ட்டுள்ளனர்.

    தி.மு.க. ஆட்சி வரும்போ தெல்லாம் மகளிர்க்கும், கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி, மக்களாட்சி என்றார்.

    நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயந்தி, ஜி.கே.பள்ளி நிர்வாக இயக்குனர் வினோத்காந்தி, நகரமன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, முகமது அமீன், தமிழ்செல்வி அசோகன், லட்சுமி பாரி, ஒன்றியக்குழு தலைவர்கள் சேஷா வெங்கட், வடிவேலு, அசோக், புவனேஸ்வரி, நிர்மலா சவுந்தர், கலைக்குமார், அனிதா குப்புசாமி, பேரூராட்சி தலைவர்கள் நாகராஜன், சங்கீதா மகேஷ் உள்பட நகரமன்ற, ஒன்றியக்குழு, பேரூராட்சி, ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திட்ட இயக்குநர் லோகநாயகி நன்றி கூறினார்.

    • 3 லட்சத்து 36 ஆயிரத்து 682 பேர் விண்ணப்பித்து இருந்தனர்
    • அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்

    வேலூர்:

    தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் காஞ்சிபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    வேலூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை பெற சிறப்பு முகாம்கள் மூலம் 3 லட்சத்து 36 ஆயிரத்து 682 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இது வேலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கார்டு தாரர்களில் 73 சதவீதம் ஆகும்.

    மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தில் தவறான தகவல் கொடுத்தவர்களிடம் அதிகாரிகள் வீடு வீடாக சென்று தகவல்களை சரி பார்த்தனர்.

    மகளிர் உரிமைத் தொகை பணத்தை பெற வங்கிகள் மூலம் முதற்கட்டமாக 8 ஆயிரம் ஏ.டி.எம். கார்டுகளில் 6 ஆயிரம் ஏ.டி.எம். கார்டுகள் வந்துள்ளன.

    தற்போது வந்துள்ள ஏ.டி.எம். கார்டுகளை அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் எவ்வளவு பேருக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் என்பது வரும் 15-ம் தேதிக்கு பிறகு தெரியவரும். முதற்க ட்டமாக பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1 அனுப்பி சரி பார்க்கப்படும்.

    மகளிர் உரிமைத் தொகை நிராகரிக்க பட்ட வர்களின் சந்தேகங்களை தீர்க்க கலெக்டர் அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

    சிறப்பு முகாம்களில் மகளிர் உரிமைத் தொகை பெற நிராகரிக்கப்ப ட்டதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி திடீர் ஆய்வு
    • காலதாமதங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்தும் கேட்டறிந்தார்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்தில் நெமிலி,வேட்டாங்குளம், நெடும்புலி,பனப்பாக்கம், காவேரிப்பாக்கம் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்காண விண்ணப்பம் பதிவேற்றும் முகாமை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது இதுவரை இணையத்தில் பதிவேற்றம் செய்த விவரங்கள் குறித்தும், பதிவேற்றம் செய்யும் போது ஏற்படும் தொழில் நுட்ப கோளாறுகள், காலதாமதங்கள் ஏற்படு வதற்கான காரணங்கள் குறித்தும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

    மேலும் மகளிர் உரிமை தொகை படிவங்களை உரிய நேரத்தில் விடுபடாமல் அனைத்து விபரங்களையும் பதி வேற்றம் செய்யப்படுவதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இதில் மாவட்ட கலெக்டர் வளர்மதி, சப் -கலெக்டர் பாத்திமா, நெமிலி தாசில்தார் பாலசந்தர், நெமிலி சேர்மன் வடிவேல், மாவட்ட கவுன்சிலர் சுந்தராம்பாள், பேரூராட்சி தலைவர்கள் ரேணுகாதேவி (நெமிலி), கவிதா (பனப்பாக்கம்), லதா (காவேரிப்பாக்கம்), உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×