மகளிர் உரிமைத்தொகை திட்ட சந்தேகம் தீர்க்க உதவி மையம்

அனைத்து பெண்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்கலெக்டர் வளர்மதி தகவல்
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ,கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்கள் ஆகியவற்றில் கீழ்கண்ட உதவி மையங்கள் தனியாக செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் புதிதாக பயன்பெற வேண்டுமெனில் எவ்வாறு விண்ணப்பிப்பது உட்பட இது தொடர்பாக ஏற்படும் அனைத்து சந்தேகங்களையும் இந்த உதவி மையத்தில் பணிபுரியும் அலுவலர்கள் தீர்த்து வைப்பார்கள்.

பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி அவர்களுக்கு திட்டம் தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள், திட்டத்தில் பயனாளியாக இருந்தும் தொகை பெறுவதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டிருந்தாலோ அல்லது பெறப்பட்ட தொகை வங்கியினரால் பிடித்தம் செய்யப்ப ட்டிருந்தாலோ இந்த உதவி மையத்தில் புகார் தெரிவிக்கலாம்.

உதவி மையங்கள்:-

ராணிப்பே ட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் அலுவலக கண்காணி ப்பாளர் சுப்பிரமணி-செல்-9489985791.

ராணிப்பே ட்டை வருவாய் கோட்டா ட்சியர் அலுவலகம் , வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர், பழனிராஜன்-செல்-9489985792. அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர்,ஆனந்தன் -செல் -9489985793. வாலாஜா தாலுகா அலுவலகம்,முதுநிலை வருவாய் ஆய்வாளர், இளங்கோவன்-செல்- 9489985794. ஆற்காடு தாலுகா அலுவலகம் இளநிலை வருவாய் ஆய்வாளர், தமிழழகன்-செல் -9489985795. சோளிங்கர் தாலுகா அலுவலகம் முதுநிலை வருவாய் ஆய்வாளர், ஜெயபால்- செல்-9489985796.

கலவை தாலுகா அலுவலகம், முதுநிலை வரு வாய் ஆய்வாளர்,ஆனந்தன்-செல்- 9489985797. அரக்கோணம் தாலுகா அலுவலகம் ,முதுநிலை வருவாய் ஆய்வாளர்,உமாபதி- செல்-9489985798. நெமிலி தாலுகா அலுவலகம், முதுநிலை வருவாய் ஆய்வாளர், வெங்கடேசன்- செல் -9489985799.

இந்த வசதியை தகுதியுள்ள அனைத்து பெண்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் வளர்மதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com