search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் உரிமைத்தொகை திட்ட சந்தேகம் தீர்க்க உதவிமையங்கள்
    X

    மகளிர் உரிமைத்தொகை திட்ட சந்தேகம் தீர்க்க உதவிமையங்கள்

    • இ- சேவை மையம் மூலமாக மேல் முறையீடு செய்யலாம்
    • கலெக்டர் தகவல்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து கலெக்டர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு செப்டம்பர் 15-ந் தேதி அன்றே உரிமைத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்குடன் ஆதார் எண்களை இணைக்காத வங்கி கணக்குகளுக்கு உரிமைத் தொகை வரவு வைக்க இயலாத நிலை உள்ளது.

    இதனை சரி செய்து விரைவில் வங்கி கணக்கில் உரிமைத்தொகை வரவு வைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அஞ்சலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மணியார்டர் மூலம் பணம் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் பணத்தை தேவைப்படும் போது எடுத்துக் கொள்ளலாம். வங்கியில் வரவு வைத்த அன்றே எடுக்க வேண்டும் என்று சொல்லப்படும் தகவல் தவறானது.

    ஒரே நேரத்தில் அனைவரும் வங்கிக்கு சென்று பணம் எடுப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. வங்கி கடன் மற்றும் சேவை கட்டணத்திற்காக உரிமைத் தொகையை பிடித்தம் செய்யும் வங்கிகள் குறித்து 1100 என்ற கட்டணமில்லா எண்களில் தொடர்பு கொண்டு தகவல் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த திட்டத்தில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவில்லை என்றால் 30 நாட்களுக்குள் இ- சேவை மையம் மூலமாக மேல் முறையீடு செய்யலாம்.

    விண்ணப்ப நிலை குறித்து தகவல் அறிய https://kmut.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். மேலும் கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களுக்கு சென்று விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம்.

    இந்த திட்டத்தில் ஒரு தகுதியான பெண்கள் கூட விடுபடக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×