என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை திட்டம்
    X

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்த காட்சி.

    ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை திட்டம்

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட தொடக்க நிகழ்ச்சி ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

    முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் எம்.பி முன்னிலை வகித்து பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு 2ஆயிரத்து 610 பயனாளிகளுக்கு மகளிர் உரிமை தொகை க்கான ஏ.டி.எம் அட்டைகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 614 ரேசன் கடைகளில் 3 லட்சத்து 48ஆயிரம் குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர்.

    அவர்களிடமிருந்து 2 லட்சத்து 29 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சுமார் 1½ லட்சம் பயனாளிகள் தேர்வு செய்யப்ப ட்டுள்ளனர்.

    தி.மு.க. ஆட்சி வரும்போ தெல்லாம் மகளிர்க்கும், கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி, மக்களாட்சி என்றார்.

    நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயந்தி, ஜி.கே.பள்ளி நிர்வாக இயக்குனர் வினோத்காந்தி, நகரமன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, முகமது அமீன், தமிழ்செல்வி அசோகன், லட்சுமி பாரி, ஒன்றியக்குழு தலைவர்கள் சேஷா வெங்கட், வடிவேலு, அசோக், புவனேஸ்வரி, நிர்மலா சவுந்தர், கலைக்குமார், அனிதா குப்புசாமி, பேரூராட்சி தலைவர்கள் நாகராஜன், சங்கீதா மகேஷ் உள்பட நகரமன்ற, ஒன்றியக்குழு, பேரூராட்சி, ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திட்ட இயக்குநர் லோகநாயகி நன்றி கூறினார்.

    Next Story
    ×