search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் உரிமைத்தொகை:  கொடைக்கானலில் சிறப்பு முகாம்கள் நடத்த கோரிக்கை
    X

    முறையாக செயல்படாத இ-சேவை மையம்.

    மகளிர் உரிமைத்தொகை: கொடைக்கானலில் சிறப்பு முகாம்கள் நடத்த கோரிக்கை

    • கொடைக்கானல் மலை கிராமத்தை சேர்ந்த பெண்களுக்கு உரிமை தொகை சரியாக கிடைக்கப்பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது
    • மறுபதிவு செய்ய பெண்களுக்கு கூடுதலாக முகாம்கள் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 தமிழக அரசு மூலம் தகுதி வாய்ந்த பெண்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது . கொடைக்கானல் மலை கிராமத்தை சேர்ந்த பெண்களுக்கு உரிமை தொகை சரியாக கிடைக்கப்பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது . இதில் விண்ணப்பம் செய்த பெண்களில் நிராகரிப்பு செய்த விண்ணப்பங்கள் அரசு அறிவித்தது போல் மீண்டும் விண்ணப்பம் செய்ய வேண்டுமென தெரிவித்து இருந்தது .

    இதன் அடிப்படையில் பலரும் தங்களது மறுபதிவு விண்ணப்பங்களை அனுப்பி வரும் நிலையில் கொடைக்கானலில் மலை கிராமப் பகுதி பெண்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர் . குறிப்பாக இ-சேவை மையங்கள் மேல் மலை மற்றும் கீழ் மலைப்பகுதிகளில் முறையாக செயல்படாததால் கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ- சேவை மையத்தை மக்கள் நாடும் நிலை தொடர்ந்து வருகிறது.

    இதனால் பெண்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் பதிவு செய்யும் இடத்தில் ஒரு நபர் மட்டுமே பதிவு செய்யும் பணியை மேற்கொண்டு வருவதாலும் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது . இதனால் வயதானவர்கள் முதல் பெரும்பாலானோர் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலையானது ஏற்பட்டுள்ளது .

    மேலும் கொடைக்கானல் மலைப்பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருவதால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு விண்ணப்பம் மறுப்பதிவு செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது . எனவே மறுபதிவு செய்ய பெண்களுக்கு கூடுதலாக முகாம்கள் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×