என் மலர்
நீங்கள் தேடியது "பிரேம் குமார்"
- நான் படிக்கிற வயதில் ஒரு மும்மொழி ஒன்றை சொல்லுவார்கள்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படிங்க.. படிங்க.. மத்ததை எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி தொடங்கியது.
நிகழச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் இயக்குனர் பிரேம் குமார் கூறியதாவது:-
நான் படிக்கிற வயதில் ஒரு மும்மொழி ஒன்றை சொல்லுவார்கள். கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே.
பிச்சை எடுத்தாலும் படிக்க வேண்டும் என்று சொல்வார்கள். தமிழ்நாடு பகுத்தறிவுக்கு மட்டுமல்ல, கல்வி அறிவுக்கும் பெயர் போனது. கல்வியை தன்மானத்திற்கு இணையாக கருத வேண்டும்.
இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படிங்க.. படிங்க.. மத்ததை எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். என்று நம் முதல்வர் சொல்வதை கேட்டு கல்வியின் முக்கியத்துவம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசு பள்ளிகளில் கிடைக்கக்கூடிய சலுகைகளை பார்த்து ஆச்சரியமாக உள்ளது. நன்றி சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
- பிரேம்குமார் 96 பாகம் இரண்டு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
'96' படத்தை இயக்கிய பிரேம்குமார் நீண்ட இளைவெளிக்கு பிறகு 'மெய்யழகன்' படத்தை இயக்கியனார். இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டது.
அடுத்ததாக பிரேம்குமார் 96 பாகம் இரண்டு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், இயக்குனர் பிரமே் குமார் நடிகர் விக்ரமிடம் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரேம் குமார், தான் அடுத்து எடுக்க இருக்கும் படத்தின் கதை குறித்து விக்ரமிடம் கூறியிருக்கிறார்.
இதனால், பிரேம் குமார்- விக்ரம் கூட்டணியில் புதிய படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.
- '96' படத்தை இயக்கிய பிரேம்குமார் நீண்ட இளைவெளிக்கு பிறகு 'மெய்யழகன்' படத்தை இயக்கியனார்.
- இயக்குநர் பிரேம் குமார்-க்கு ஒரு அழகிய காரை சர்பிரைஸ் பரிசாக வழங்கியுள்ளார்.
'96' படத்தை இயக்கிய பிரேம்குமார் நீண்ட இளைவெளிக்கு பிறகு 'மெய்யழகன்' படத்தை இயக்கியனார். இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டது.
அடுத்ததாக பிரேம்குமார் 96 பாகம் இரண்டு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் நடிகர் சூர்யா இயக்குநர் பிரேம் குமார்-க்கு ஒரு அழகிய காரை சர்பிரைஸ் பரிசாக வழங்கியுள்ளார். இதுக்குறித்து பிரேம் அவரது இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
அதில் " இந்த கார் எனது நீண்ட நாள் கனவு வண்டியாகும். எனக்கு குறிப்பாக தார் ராக்ஸ் 2AX 5L 4*4 மாடல் ஒயிட் கலர் தான் வாங்க வேண்டும் என நினைத்து இருந்தேன். ஆனால் எனக்கு அந்த மாடல் கிடைக்கவே இல்லை 1 வருடம் கழிந்தது. நான் இக்காரை பற்றி ராஜா சாரிடம் கூறியுள்ளேன். அதன் பிறகு அந்த காருக்காக சேர்த்து வைத்த பணத்தை செலவு செய்யும் சூழல் ஏற்ப்பட்டது. அதனால் என் கனவு வண்டி இன்னும் தள்ளி போனது. நான் இதைப்பற்றி ராஜா சாரிடம் கூறினேன் ஆனால் அப்போது அவர் அமைதியாக இருந்தார். ஆனால் எனக்கு அப்போது தெரியவில்லை இதற்கு பின்னாடி ஒரு பிளான் இருக்கிறது என.
நேற்று முந்தினம் சூர்யா அண்ணா இந்த காரின் புகைப்படத்தை அனுப்பினார்.இதை பார்த்தவுடன் நான் அதிர்ச்சியில் ராஜா சாருக்கு கால் செய்து என்னிடம் இதை வாங்க பணம் இல்லை என கூறினேன். அவர் சிரித்துக் கொண்டே இது சூர்யா சார் உனக்கு பரிசளித்துள்ளார். என கூறினார்." என அதில் மிகவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.
நடிகர் கார்த்தி காரின் சாவியை பிரேம்க்கு தர அந்த காரில், பேரன்புடன் மெய் என கையெழுத்து பரிசை வழங்கினார்.
- இதில் 26 நாடுகளை சேர்ந்த 202 வீரர்கள் விளையாடினர்.
- ஒற்றையர் ஆண்கள் பிரிவில் விளையாடிய பிரேம்குமார் வெண்கல பதக்கம் வென்றார்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அணுமின்நிலையத்தில் ஊழியராக வேலைபார்த்து வருபவர் பிரேம்குமார். பேட்மிண்டன் வீரரான இவர், கடந்த 2-ந் தேதி முதல் 9-ந்தேதி வரை கிழக்கு ஆப்பிரிக்க நாட்டின் உகாண்டாவில் நடைபெற்ற சர்வதேச தரவரிசை பாரா ஒலிம்பிக் பூப்பந்து போட்டியில் பங்கேற்றார்.
இதில் 26 நாடுகளை சேர்ந்த 202 வீரர்கள் விளையாடினர். இதில் ஒற்றையர் ஆண்கள் பிரிவில் விளையாடிய பிரேம்குமார் வெண்கல பதக்கம் வென்றார். இதேபோல் இரட்டையர் ஆண்கள் பிரிவில் தினேஷ்ராஜய்யாவுடன் இணைந்து, மற்றொரு வெண்கல பதக்கத்தையும் வென்றார். அவரை அணுமின்நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் பாராட்டினர்.
- நடிகர் கார்த்தி தற்போது 'ஜப்பான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- கார்த்தியின் 27வது படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
தென்னிந்தியா திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி, தற்போது இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்'திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், கார்த்தியின் 27வது படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி '96' படத்தின் இயக்குனர் பிரேம் குமார் இயக்கம் படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைத்தளத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
- இப்படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
- கார்த்தி 27 படத்தின் பூஜை வீடியோவை பட நிறுவனம் வெளியிட்டுள்ளது.
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கிய இயக்குனர் பிரேம் குமார் அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து படம் இயக்குகிறார்.
'கார்த்தியின் 27'வது படமான இந்த படத்தை 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
இப்படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கார்த்தி 27 படத்தின் பூஜை வீடியோவை பட நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.
மேலும், பூஜை வீடியோவை வெளியிட்டு படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
- ரஜினியின் தளபதி படத்தில் கலெக்டராக நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சயமானவர்.
- கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் மெய்யழகன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
90 காலக்கட்டத்தில் அனைத்து பெண்களுக்கும் கனவு காதலனாக இருந்தவர் அரவிந்த்சாமி, இவர் ரஜினியின் தளபதி படத்தில் கலெக்டராக நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சயமானவர். அதை தொடர்ந்து இவர் ரோஜா படத்திலும் நடித்து பெயர் பெற்றார்.
பின்னர் பம்பாய், மின்சார கனவு, இந்திரா என அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருபவர்.
மேலும் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தொழிலதிபராகவும் வலம் வரும் அரவிந்த் சாமிக்கு விபத்து ஏற்பட்டது. அதன் பின்னர் சில காலங்கள் ஓய்வில் இருந்த அரவிந்த்சாமி தனி ஒருவன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தனி ஒருவன் திரைப்படத்தில் இவர் நடித்திருந்த சித்தார்த் அபிமன்யூ என்ற கதாபாத்திரம் இன்று வரையிலும் பேசப்படுகிறது.
தொடர்ந்து தலைவி படத்தில் எம்ஜிஆராகவும், சிங்கப்பூர் சலூன் படத்தில் கேமியோ ரோலிலும் நடித்திருந்தார். அடுத்ததாக கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் மெய்யழகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்க சூர்யாவின் 2D நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் முதல் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அரவிந்த்சாமியின் 54வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன்.
- இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.
சமீபத்தில் நடைப்பெற்ற நேர்காணலில் இயக்குனர் பிரேம் குமார் அவரது வாழ்க்கையில் நடைப்பெற்ற சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்துக்கொண்டார். அதில் அவர் " மெய்யழகன் படத்தின் கதையை எழுதி முடித்த நேரத்தில் 96 படத்தில் நான் சம்பாதித்த பணம் அனைத்தும் தீர்ந்துப் போனது. அப்பொழுது லயோலா கல்லூரியில் ஒரு செமினார் வகுப்பு நடத்த என்னை அழைத்தார்கள். நானும் சென்றேன் வகுப்புகளை நடத்தினேன். அதை முடித்து விட்டு காரில் வெளிவரும் பொழுது காரில் டீசல் தீரும் நிலையில் இருப்பதை நான் கவனித்தேன். இந்த லயோலா கல்லூரியை விட்டு வெளியே சென்றபின் கார் நின்றால் பரவாயில்லை என்ற நினைப்பில் இருந்தேன். அப்பொழுது லயோலா கல்லூரி மாணவன் ஒருவன் வந்து நான் எடுத்த செமினாருக்காக கல்லூரி சார்பாக மெமண்டோ பரிசைக் கொடுத்தான். நான் அதை சிறிய பரிசாக எண்ணி அதை கார் சீட்டில் வைத்தேன்.
அப்பொழுது தான் அந்த கவரில் நான் வந்ததற்கான கன்வீனியன்ஸ் ஃபீஸ் அதில் இருந்தது. அந்த பணத்தை வைத்துதான் நான் என் காருக்கு டீசல் போட்டு வீட்டிற்கு சென்றேன். அதற்கு அடுத்தநாள் கார்த்தி சார் எனக்கு கால் செய்து உங்களிடம் எதோ கதை இருக்காமே , என்னை சந்திப்பதற்கு யோசித்துக் கொண்டு இருப்பதுப்போல் கேள்விப்பட்டேன். " என்று மெய்யழகன் படம் கமிட் ஆவதற்கு முன் இருந்த சூழலை மிகவும் எமோஷ்னலாக கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- மெய்யழகன் படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் மெய்யழகன் படத்தில் ஜல்லிக்கட்டை மையமாக கொண்ட 'வெறி' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மெய்யழகன் படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- சென்னையில் மெய்யழகன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்துள்ளது.
96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
சென்னையின் மிகப்பெரிய மாலில் ஏராளமான ரசிகர்கள் சூழ மெய்யழகன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்நிகழ்வில் கார்த்தி, ஸ்ரீதிவ்யா, அரவிந்த்சாமி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.
அந்நிகழ்வில் பேசிய அரவிந்த் சாமி, "என்னை போல் மாப்பிள்ளை வேண்டும் என கேட்பவர்களுக்கு என்னுடைய நிஜ வாழ்க்கையை பற்றி தெரியாதே என நினைப்பேன். பட கதாபாத்திரங்களை வைத்து நான் அப்படிதான் இருப்பேன் என நம்பிவிடுகின்றனர். ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை. சினிமாவில் ஒரு மேஜிக் இருக்கிறது. என்னை பற்றி எல்லாம் தெரிந்தால் நீங்கள் அப்படி சொல்ல மாட்டீர்கள்" என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மெய்யழகன் படத்தின் இரண்டாம் பாதி சற்று நீளமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தது.
- மெய்யழகனின் நீளம் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவன் பேசும் அன்பும், திரை அனுபவமும் சற்றும் குறையவில்லை
96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியானது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே சமயம் படத்தின் இரண்டாம் பாதி சற்று நீளமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில்தான் இப்படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் பிரேம் குமார் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அன்பால் உருவான மெய்யழகனுக்கு பேரன்பை அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி. திரைமொழியின் வழக்கமான பாணியில் இருந்து விலகிய ஒரு திரை அனுபவத்திற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையை விதைத்ததற்கு நன்றி. ஏராளமான அனுபவ பகிர்வுகள் இந்த படைப்பின் மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கின்றன. மெய்யழகனை உணர்ந்து புரிந்துகொண்ட பெரும்பாலானோரின் அன்பும், ரசனையும் பிரமிக்க வைக்கின்றன.
படத்தின் நீளம் குறித்து மட்டும் சில அக்கறை குரல்கள் வெளிப்பட்டு வந்த நிலையில், ஒரு படைப்பாளியின் முதல் கடமை மக்களின் குரல்களுக்கு செவிமடுப்பது. எல்லோரது திருப்தியும் எனக்கு முக்கியம். அதுவே மெய்யழகனின் மீது நீங்கள் கொண்ட அன்பிற்கு நான் செய்யும் கைம்மாறு.
எனவே இன்று முதல் சில காட்சிகள் நீக்கப்பட்டு, 18 நிமிடங்கள் 42 நொடிகள் குறைக்கப்பட்டு, 2 மணி நேரம் 38 நிமிடங்களாக திரையிடல் தொடரும். மெய்யழகனின் நீளம் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவன் பேசும் அன்பும், திரை அனுபவமும் சற்றும் குறையவில்லை" என தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளும் முடிவடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
- இப்படத்திற் விஜய் வசந்தா இசையமைக்க உள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி- திரிஷா நடிப்பில் வெளியான படம் '96'. பள்ளிப் பருவ காதலர்கள் 20 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் போது என்ன நடக்கும் என்பதை மிகவும் யதார்த்தமாக காட்டிய படம் '96'. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
'96' படத்துக்குப் பின் இயக்குனர் பிரேம் குமார் 'மெய்யழகன்' படத்தை இயக்கினார். இப்படமும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.
இந்த நிலையில், '96' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அப்படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளும் முடிவடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி- திரிஷா நடிக்க உள்ள 96 இரண்டாம் பாகத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும், விஜய் வசந்தா இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






