என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இந்தியாவில் விளையாட்டின் தலைநகரமாக தமிழ்நாடு மாறி உள்ளது- அமைச்சர் அன்பில் மகேஷ்
    X

    இந்தியாவில் விளையாட்டின் தலைநகரமாக தமிழ்நாடு மாறி உள்ளது- அமைச்சர் அன்பில் மகேஷ்

    • கிணறுகள் மூடப்படாமல் இருந்தால் உடனடியாக மூட வேண்டும்.
    • தி.மு.க.வின் பலம் கூட்டணி தான் என்று முதலமைச்சர் அடிக்கடி கூறுவார்.

    தஞ்சாவூர்:

    2025 ஆம் ஆண்டிற்கான ஜூனியர் ஹாக்கி ஆண்களுக்கான உலக கோப்பை போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் நடைபெற உள்ளது.

    இதற்கான உலகக் கோப்பை அறிமுக நிகழ்ச்சி இன்று தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் முதன் முறையாக ஹாக்கி உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இதற்காக பெருமுயற்சி மேற்கொண்ட முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி.

    உலகக்கோப்பை நடத்துவதன் மூலம் உலக நாடுகளின் பார்வை தமிழகம் மீது திரும்பி உள்ளது. இந்தியாவில் விளையாட்டின் தலைநகரமாக தமிழகம் மாறி உள்ளது.

    பொதுவாகவே மழைக்காலம் என்று சொன்னால் எந்தெந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், பள்ளிகளில் தண்ணீர் தேங்க கூடாது, அப்படி தேங்கினால் உடனடியாக தண்ணீரை வெளியேற்ற வேண்டும், கிணறுகள் மூடப்படாமல் இருந்தால் உடனடியாக மூட வேண்டும். மின்கசிவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம்.

    தி.மு.க.வின் பலம் கூட்டணி தான் என்று முதலமைச்சர் அடிக்கடி கூறுவார். ஒவ்வொருவர் ஒவ்வொரு கருத்துகள் , கொள்கைகள் கொண்டவர்களாக இருந்தாலும் பொது எதிரியாக இருக்கக்கூடிய கொள்கை எதிரியாக இருக்கக் கூடியது யார் என்பது நாட்டு மக்கள் அறிவார்கள். அவர்களை எதிர்க்க வேண்டிய மிகப்பெரிய கட்டாயம் நமக்கு உள்ளது. ராகுல்காந்தி விஜயிடம் பேசியது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×