என் மலர்
இந்தியா

உலகில் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்திய வளர்ச்சி அடைந்துள்ளது - ஜனாதிபதி
- விண்வெளி சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த இந்தியாவுக்கு வெகுதூரம் இல்லை.
- செமி கண்டக்டர் சிப் உற்பத்தியில் உலகிற்கே முன்மாதிரியாக இந்தியா உள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாள் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றினார்.
மத்திய அரசின் கடந்த கால சாதனைகளை விளக்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* கடந்தாண்டில் 150 மில்லியன் டன் அரிசி உற்பத்தி செய்து உலகிலேயே முதல் இடத்தை இந்தியா பிடித்து சாதனை படைத்துள்ளது.
* உலகிலேயே மிகப்பெரிய மெட்ரோ நெட்வொர்க் கொண்ட நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது.
* தமிழ்நாட்டில் பாம்பன் பாலம் செயல்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
* விண்வெளி சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த இந்தியாவுக்கு வெகுதூரம் இல்லை.
* கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் 2 கோடிக்கும் அதிகமான இருசக்கர வாகன பதிவு செய்யப்பட்டுள்ளது.
* உலகிலேயே அதிவேகத்தில் வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது.
* உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் மந்தநிலை இருந்தாலும் இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக உள்ளது.
* உலகில் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்திய வளர்ச்சி அடைந்துள்ளது.
* கடந்தாண்டில் மட்டும் 350 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது.
* சூரிய மின் திட்டத்திற்கான அரசின் நடவடிக்கைகள் காரணமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளோம்.
* AI துறையில் முதலீடு அதிகரித்துள்ளது. செமி கண்டக்டர் சிப் உற்பத்தியில் உலகிற்கே முன்மாதிரியாக இந்தியா உள்ளது.
* நாட்டின் பின்தங்கிய மாநிலங்களில் உள்ள மக்களையும் முன்னேற்றும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
* ரெயில் சேவையால் இணைக்கப்பட்ட நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன.
* அசாமில் உற்பத்தி செய்யப்படும் செமி கண்டெக்டர் சிப்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.
* மீன் வளத்தை பெருக்குவதில் உலகிலேயே இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.
* உஜ்வாலா திட்டத்தின் மூலம் இதுவரை 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
* எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.
* நாட்டில் கிட்டத்தட்ட 95 கோடி குடிமக்களுக்கு சமூக பாதுகாப்பு சலுகைகள் இப்போது கிடைக்கிறது.
* நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட அரசு உறுதி பூண்டுள்ளது.
* வளர்ச்சி ஒன்றே தாரக மந்திரம் என மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






