search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சட்டமன்ற தேர்தல் வெற்றியால் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட கடும் போட்டி- 309 பேர் விண்ணப்பம்
    X

    சட்டமன்ற தேர்தல் வெற்றியால் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட கடும் போட்டி- 309 பேர் விண்ணப்பம்

    • தெலுங்கானாவில் 17 எம்.பி. தொகுதிகள் உள்ளன.
    • காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்.பி. சீட் கேட்டு வருகின்றனர்.

    தெலுங்கானாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பிடித்து பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது.

    இதனால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி அல்லது பிரியங்கா காந்தி ஆகியோர் மேடக் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியினர் விரும்புகின்றனர்.

    மேலும் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் இளைஞர் அணியினர், மகளிர் அணியினர் தேர்தலில் சீட் பெற போட்டி போட்டு வருகின்றனர். தெலுங்கானாவில் 17 எம்.பி. தொகுதிகள் உள்ளன.

    காங்கிரஸ் சார்பில் போட்டியிட 309 பேர் விருப்பம் தெரிவித்து மனு அளித்து உள்ளனர்.

    ஒரு சில கட்சி நிர்வாகிகள் தங்களுடைய பலத்தை காண்பிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி ஊர்வலமாக சென்று விருப்ப மனு அளித்து வருகின்றனர்.

    இதேபோல் சந்திரசேகர ராவ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்.பி. சீட் கேட்டு வருகின்றனர்.

    இதனால் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தேர்வு செய்யப்படும் வேட்பாளர்கள் பட்டியலை கட்சி மேல் இடத்திற்கு அனுப்பி வைத்து அதில் வெற்றி வாய்ப்பு உள்ள ஒருவரை தேர்ந்தெடுத்து சீட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    தெலுங்கானா மக்களவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் கடும் போட்டி நிலவி வருவதால் பரபரப்பாக உள்ளது.

    Next Story
    ×