search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mallikarjuna Karke"

    • பா.ஜ.க. தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெற போவதாக பேசி வருகிறார்கள்.
    • பிரதமர் மோடி காங்கிரஸ் திட்டங்களை நிறுத்திவிட்டார்.

    அமேதி:

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேச்சு விவரம் வருமாறு:-

    பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவர்களும் வரும் தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெற போவதாக பேசி வருகிறார்கள். நிச்சயம் அது நடக்காது. நாட்டு மக்களை ஏமாற்றி அவர்கள் திசை திருப்புகிறார்கள்.

    அமேதியும், ரேபரேலியும் காங்கிரசின் கோட்டையாக உள்ளன. ஆனால் இங்கு பாரதிய ஜனதா விஷ விதைகளை தூவி வருகிறது. இதன் மூலம் காங்கிரஸ் தொண்டர்களை திசை திருப்ப முயற்சி நடக்கிறது.

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். 100 இடங்களில் கூட அந்த கட்சிக்கு வெற்றி கிடைக்காது. மக்கள் அவர்களை தூக்கி வெளியே வீசப் போகிறார்கள்.

    ஆனால் அதை திசை திருப்ப பா.ஜ.க. சதி செய்கிறது. நாட்டு மக்கள் காங்கிரசுடன் மிகுந்த பிணைப்புடன் உள்ளனர். அதை மாற்ற இயலாது.

    பிரதமர் மோடி காங்கிரஸ் திட்டங்களை நிறுத்திவிட்டார். அதற்கு வாக்காளர்கள் நிச்சயம் பதிலடி கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இந்தியா கூட்டணி கட்சி தேர்தல் வெற்றிக்கான கால்கோள் விழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெறுகிறது.
    • தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி எஸ். எஸ். சிவசங்கர் மற்றும் எம்பிக்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    திருச்சி:

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப்பில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நாளை ( வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு பிரம்மாண்ட மாநாடு நடை பெறுகிறது. அக்கட்சியின் அரசியல் வெள்ளிவிழா, கட்சித் தலைவரின் மணி விழா, இந்தியா கூட்டணி கட்சி தேர்தல் வெற்றிக்கான கால்கோள் விழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெறுகிறது.

    மாநாட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார். பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி. மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

    இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி ராஜா, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சா ரியார், திராவிடர் கழக தலைவர் கீ. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ., தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்மு ருகன் எம்எல்ஏ., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ. ஆர் ஈஸ்வரன் எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநில செயலாளர் ஆசை தம்பி, ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், மாநாட்டு பொறு ப்பாளருமான பெரம்பலூர் இரா. கிட்டு உள்பட இந்தியா கூட்டணியில் உள்ள 28 கட்சிகளின் தலைவர்கள் கொள்கிறார்கள்.

    மேலும் தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி எஸ். எஸ். சிவசங்கர் மற்றும் எம்பிக்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இதையொட்டி சிறுகனூரில் பிரம்மாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்தன. தற்போது அந்தப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மாநாடு நுழைவு வாயில் பகுதி முந்தைய நாடாளுமன்ற கட்டிடத்தின் வடிவில் பிரம்மாண்டமாக அமைத்துள்ளனர். முகப்பில் கட்சித் தலைவர் திருமாவளவனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

    இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமான மூலமாக திருச்சி வருகை தருகிறார். முன்னதாக சென்னையில் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை 5 மணிக்கு மேல் புறப்பட்டு திருச்சி வருகை தருகிறார். பின்னர் கார் மூலமாக சாலை மார்க்கத்தில் மாநாடு நடைபெறும் சிறுகனூருக்கு செல்கிறார்.

    முன்னதாக செல்லும் வழியில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் திறக்கப்பட்ட கலைஞர் சிலையை பார்வையிடுகிறார்.

    பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், தமிழக முதலமைச்சரின் சிறப்பு பாதுகாப்பு டிஐஜி திருநாவுக்கரசு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் நேற்று கலெக்டர் பிரதீப் குமார் மாநாடு பந்தல் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்பி, பெரம்பலூர் இரா. கிட்டு, தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில நிர்வாகி மாநகராட்சி கவுன்சிலர் பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2-ம் தேதி அரசு முறை பயணமாக லட்சத்தீவு சென்றிருந்தார்.
    • மாலத்தீவு அமைச்சர்கள் பேசியதை பிரதமர் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வதாக மல்லிகார்ஜுன கார்கே கருத்து தெரிவித்துள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2-ம் தேதி அரசு முறை பயணமாக லட்சத்தீவு சென்றிருந்தார். அப்போது அங்குள்ள கடற்கையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அத்துடன் "சுற்றுலா செல்ல விரும்புவோருக்கு லட்சத்தீவு மிகச் சிறந்த இடம்" என்று பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பிரதமரின் பயணம் காரணமாக இரண்டு நாட்களாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக லட்சத்தீவு தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது

    இதனை தொடர்ந்து, மாலத்தீவு துணை அமைச்சர்கள் மரியம்ஷியுனா, அப்துல்லா மஹ்சூம் மஜித், மால்ஷா ஷெரீப் ஆகியோர், பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதனை தொடர்ந்து மூன்று அதிகாரிகளும் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

    இது தொடர்பாக, காங்கிரஸ்  தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "பிரதமர் நரேந்திர மோடி பதவிக்கு வந்த பின்னர், அனைத்து விஷயங்களையும் தனிப்பட்ட முறையிலேயே எடுத்துக்கொள்கிறார் என தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச அளவில் நாம், நமது அண்டை நாடுகளுடன் நல்ல உறவைப் பேண வேண்டும். காலத்துக்கு ஏற்ப நாம் செயல்பட வேண்டும். அண்டை நாட்டினரை நம்மால் மாற்ற முடியாது" என்று தெரிவித்தார்.

    • ஒவ்வொரு இந்தியருக்கும் வீடு மற்றும் 24 மணி நேரமும் மின்சாரம், பொருளாதாரம் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக மாறும் என்று சொன்னீர்கள்.
    • மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் ஏற்பட்ட அதிகப்படியான தாமதம் பல கேள்விகளை எழுப்புகிறது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று காலை தனது எக்ஸ் பதிவில் கூறி இருப்பதாவது:-

    நரேந்திர மோடி அவர் களே இன்று 2023-ம் ஆண்டின் கடைசி நாளாகும். 2022 வரை ஒவ்வொரு விவசாயிகளின் வருமானமும் இரட்டிப்பாகும் என்று நீங்கள் சொன்னீர்கள். ஒவ்வொரு இந்தியருக்கும் வீடு மற்றும் 24 மணி நேரமும் மின்சாரம், பொருளாதாரம் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக மாறும் என்று சொன்னீர்கள்.

    இதெல்லாம் நடக்கவில்லை. ஆனால் இது ஒவ்வொரு இந்தியருக்கும் தெரியும். பா.ஜனதாவின் பொய்கள் மிகவும் வலிமையானது.

    இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.

    இதேபோல காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாது குறித்த மத்திய அரசை கடுமையாக சாடி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    2021-ம் ஆண்டுக்கான 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் ஏற்பட்ட அதிகப்படியான தாமதம் பல கேள்விகளை எழுப்புகிறது. இது கொரோனா தொற்று நோயுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. சந்தேகத்திற்கு இடமின்றி ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

    • சத்தீஷ்கர் தலைநகர் ராய்பூரில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் பேரணியில் அவர் பங்கேற்கிறார்.
    • மாநில காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்து சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

    புதுடெல்லி:

    சத்தீஷ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்கள் விரைவில் நடக்கின்றன. தேர்தலை சந்திக்க பா.ஜ.க., காங்கிரஸ் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தயாராகி வருகின்றன.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் முன்னோட்டமாக அமையும் என கருதப்படுவதால் இதில் பலத்தை நிரூபிப்பதோடு மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கவும் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    காங்கிரஸ் கட்சி சார்பாக 5 மாநில தேர்தலில் பா.ஜ.க. வை வீழ்த்த வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இது தொடர்பாக முத்த தலைவர்கள், நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே 5 மாநில தேர்தல் பிரசாரத்தை சத்தீஷ்கரில் இருந்து தொடங்குகிறார். சத்தீஷ்கர் தலைநகர் ராய்பூரில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் பேரணியில் அவர் பங்கேற்கிறார்.

    அதை தொடர்ந்து 18-ந்தேதி தெலுங்கானாவிலும், 22-ந்தேதி மத்திய பிரதேசத்தின் போபாலிலும், 23-ந்தேதி ராஜஸ்தானின் ஜெய்பூரிலும் நடைபெறும் பேரணிகளில் அவர் கலந்துகொள்கிறார். சுற்றுப் பயணத்தின்போது மல்லிகார்ஜூன கார்கே அந்தந்த மாநில காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்து சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

    கர்நாடகா, இமாசல பிரதேசத்தில் தேர்தல் வெற்றிக்காக காங்கிரஸ் கட்சி கையாண்ட யுக்தியை 5 மாநில தேர்தலிலும் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது. அதற்காக தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் இணைந்து பிரசாரம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    • சமூகங்களுக்கு இடையேயான பிளவு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தி உள்ளது.
    • ரெயில் திறப்பு விழாக்கள் மற்றும் பா.ஜனதா கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான நேரம் பிரதமருக்கு இருக்கிறது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    எங்களது இந்தியா கூட்டணி எம்.பி.க்கள், மணிப்பூர் மாநிலத்துக்கு சென்ற போது அங்குள்ள மக்களிடம் இருந்து வலியின் இதயத்தை பிளக்கும் வேதனையான கதைகளை கேட்டனர்.

    10 ஆயிரம் அப்பாவி குழந்தைகள் உள்பட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம் களில் உள்ளனர். பெண்கள் போதிய வசதி இல்லாமல் மருந்துகள், உணவு பற்றாக் குறையை எதிர்கொண்டு உள்ளனர். பொருளாதார நடவடிகைகள் முடங்கியுள்ளன. குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. விவசாயத்தை விவசாயிகள் நிறுத்திவிட்டனர். மக்களுக்கு அதிகமான நிதி இழப்புகள் ஏற்பட்டுள்ளன. உளவியல் ரீதியான கஷ்டங்களில் அவர்கள் போராடுகின்றனர். சமூகங்களுக்கு இடையேயான பிளவு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    தேர்தல் கூட்டங்கள், ரெயில் திறப்பு விழாக்கள் மற்றும் பா.ஜனதா கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான நேரம் பிரதமருக்கு இருக்கிறது. ஆனால் மணிப்பூர் மக்களின் வேதனைகள், துன்பங்களை பற்றி பேசவோ அல்லது சமூகங்களுக்கு இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்ப்பதில் பணியாற்றவோ பிரதமர் மோடிக்கு நேரமில்லை.

    மணிப்பூர் மக்களின் வலி, வேதனைகள் குறித்து மோடி அரசு அலட்சியமாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் தனது பதிவில் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

    • இன்று வேட்புமனுக்கள் குறித்து ஆய்வு நடைபெற்றது.
    • மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் இடையே நேரடிப் போட்டி.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், ஜார்கண்ட் மாநில முன்னாள் அமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான கேஎன் திரிபாதி ஆகியோர் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். 


    இந்த நிலையில், வேட்புமனுக்கள் குறித்து ஆய்வு இன்று நடைபெற்றதாக கட்சியின் தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி தெரிவித்துள்ளார். இதில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

    வேட்புமனுவை விதிமுறைகளின் படி பூர்த்தி செய்யாததால் கே.என் திரிபாதியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக மதுசூதன் மிஸ்த்ரி கூறினார். அவரது வேட்புமனுத் தாக்கலின் போது மொத்தம் 20 படிவங்கள் பெறப்பட்டன. அவற்றில் நான்கு கையொப்பங்கள் மீண்டும் மீண்டும் போடப்பட்டிருந்ததால் நிராகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

    வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான அக்டோபர் 8ந் தேதி கடைசி நாள். அன்று மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் இடையே நேரடிப் போட்டி உறுதியாகி உள்ள நிலையில், 8ந் தேதிக்குள் யாரும் வாபஸ் பெறா விட்டால், 17ந் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என்றும் மதுசூதன் மிஸ்த்ரி கூறியுள்ளார். 

    ×