முதியவர் கொடுத்த மனுவை ஏற்க மறுத்த சுரேஷ் கோபி.. சர்ச்சையான சம்பவம் - வந்து விழுந்த விளக்கம்

சுரேஷ் கோபி அதை பகிரங்கமாக ஏற்க மறுத்துவிட்டார்.இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான பிறகு, அவரது நடத்தை நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
முதியவர் கொடுத்த மனுவை ஏற்க மறுத்த சுரேஷ் கோபி.. சர்ச்சையான சம்பவம் - வந்து விழுந்த விளக்கம்
Published on

செப்டம்பர் 12 அன்று, கேரளாவின் திருச்சூரில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில், வேலாயுதன் என்ற முதியவர் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபியிடம் அரசின் வீட்டு வசதி மூலம் வீடு கேட்டு மனு கொடுக்க முயன்றார்.

இருப்பினும், சுரேஷ் கோபி அதை பகிரங்கமாக ஏற்க மறுத்துவிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான பிறகு, அவரது நடத்தை நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த சுரேஷ் கோபி, "ஒரு மக்கள் பிரதிநிதியாக, நான் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பது குறித்து எனக்கு தெளிவான புரிதல் உள்ளது.

வீட்டுவசதி என்பது மாநில அரசின் எல்லைக்குள்பட்ட விஷயம். மாநில அரசு அந்த விஷயத்தை கருத்தில் கொள்ள வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை வழங்குவது எனது பாணி அல்ல" என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

சிலர் இந்த சம்பவத்தை தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார். இதற்கிடையே கேரளாவில் ஆளும் சிபிஎம் கட்சி முதியவருக்கு வீடு வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com