என் மலர்
இந்தியா

வருமானம் முற்றிலும் போச்சு..! மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசை என்கிறார் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி
- திருச்சூர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
- மத்திய அமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து சினிமாவில் நடிக்காமல் உள்ளார்.
மலையான நட்சத்திர நடிகரில் ஒருவர் சுரேஷ் கோபி. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பாஜக-வில் இணைந்தார். கடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றார். கேரளாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பாஜக எம்.பி. இவர்தான். இதனால் இவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் பதவியால், சினிமாவில் நடிக்க முடியவில்லை. இதனால் தன்னுடைய தனிப்பட்ட வருமானம் முற்றிலும் இல்லாமல் போகியுள்ளது. உண்மையிலேயே மீண்டும் சினிமாவில் நடிக்க விரும்புகிறேன். இன்னும் பணம் சம்பாதிப்பது அவசியமானதாக உள்ளது. எனது சினிமா வாழ்க்கையை துறந்துவிட்டு, அமைச்சர் பதவியை ஒருபோதும் விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதியால் மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்ட சதானந்தன் மாஸ்டருக்கு மத்திய அமைச்சரவை பதவி வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து சினிமாவில் நடிக்காமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






