என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரஜினிகாந்த்"
- படத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட வரவரேற்பு கிடைக்கவில்லை.
- ரீ-ரிலீஸ் பற்றிய பேச்சுக்கள் அவ்வப்போது வெளியாகின.
கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் ஆளவந்தான். ரிலீசான போதே அதநவீன தொழில்நுட்பங்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஆளவந்தான் படத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட வரவரேற்பு கிடைக்கவில்லை. எனினும், இந்த படத்தின் ரீ-ரிலீஸ் பற்றிய பேச்சுக்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன.
அந்த வரிசையில், ஆளவந்தான் படத்தின் டிஜிட்டல் பதிப்பு உருவாக்கப்பட்டு, ரீ-ரிலீசுக்கு தயாராகி வருவதை தயாரிப்பாளரான எஸ். தானு தெரிவித்து இருந்தார். மேலும் இதற்காக படத்தின் இரண்டு பாடல்களும் வெளியிடப்பட்டு விட்டன.

இந்த நிலையில், ஆளவந்தான் படம் ரிலீசாகும் அதே தினத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படமும் ரீ-ரிலீஸ் ஆகிறது. இது தொடர்பான அறிவிப்பு வெளியானது முதல், ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் தங்களது நட்சத்திரங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் மோதவிருப்பதை ஒட்டி சமூக வலைதளங்களில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 8-ம் தேதி ஆளவந்தான் படம் ரிலீசாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ரஜினி நடிப்பில் வெளியான முத்து திரைப்படமும், இதே தினத்தில் ரீ-ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி டிசம்பர் 8-ம் தேதி ஆளவந்தான் மற்றும் முத்து படங்கள் ரீ-ரிலீஸ் ஆவது ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்.
- இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.மேலும், நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 'லால் சலாம்' படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் இந்த படத்தின் டப்பிங் பணியை முடித்துள்ளார். இதனை படக்குழு புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்துள்ளது.
The Legendary Indian Cricketer ? @therealkapildev wraps up his dubbing ?️ for #LalSalaam ? It was truly an honour having THE LEGEND for our film!
— Lyca Productions (@LycaProductions) November 23, 2023
Post production in full throttle! ?
Releasing in Tamil, Telugu, Hindi, Malayalam & Kannada! In Cinemas ?️ PONGAL 2024 Worldwide… pic.twitter.com/x3UlwOEHGp
- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’.
- இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

லால் சலாம் போஸ்டர்
இந்நிலையில், 'லால் சலாம்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், 'லால் சலாம்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக மீண்டும் உறுதி செய்துள்ளது.
As we put the final touches in post-production, we would like to affirm #LalSalaam ? is coming to screens this PONGAL 2024 ☀️
— Lyca Productions (@LycaProductions) November 22, 2023
Releasing in Tamil, Telugu, Hindi, Malayalam & Kannada! In Cinemas ?️ PONGAL 2024 Worldwide ☀️?@rajinikanth @ash_rajinikanth @arrahman… pic.twitter.com/1PPBmW0AUk
- இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி தொடங்கியதும், முதலில் பரபரப்பாக இருந்தது.
- இந்திய அணி வெற்றிக்கு முகமது ஷமி தான் காரணம்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில் இந்தியா வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது. மும்பையில் நடந்த அரையிறுதி போட்டியை நேரில் பார்த்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் விமானம் முலம் சென்னை திரும்பினார்.
அப்போது சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி தொடங்கியதும், முதலில் பரபரப்பாக இருந்தது. இந்திய அணி வெற்றிக்கு முகமது ஷமி தான் காரணம். 100 சதவீதம் உலகக்கோப்பை நமதே.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல்வேறு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- பொதுமக்களுக்கு விஜயகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடினார்.
தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விஜயகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
- தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததால் ரசிகர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினர்.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
போயஸ் கார்டனில் தனது வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களை பார்த்து ரஜினிகாந்த் கையசைத்து தீபாவளி வாழ்த்து கூறினார்.
ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததால் ரசிகர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினர்.
மோகனா லஷ்மி என்ற சிறுமி நடிகர் ரஜினிகாந்த்தை பார்க்க பல தடவை வந்ததாகவும் ஆனால் இன்று தான் தன்னால் பார்க்க முடிந்தது என்று கண்கலங்கினார்.
- பல்வேறு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததால் ரசிகர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினர்.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் போயஸ் கார்டனில் தனது வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களை பார்த்து ரஜினிகாந்த் கையசைத்து தீபாவளி வாழ்த்து கூறினார்.
ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததால் ரசிகர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினர்.
- அறை முழுவதும் ரஜினி நடித்த அபூர்வ ராகங்கள் முதல் ஜெயிலர் படம் வரையிலான புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
- சிலைக்கு யாகம் வளர்த்து கும்பாபிஷேகம் நடத்துவது போன்று பூஜைகள் செய்தார்.
மதுரை:
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக். திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார். தீவிர ரஜினிகாந்த் ரசிகர். இவர் தனது அலுவலகத்தில் ஒரு அறையில் ரஜினி புகைப்படங்களை வைத்து வணங்கி வந்தார். இவரது பூஜை அறையில் கதவுகளில் ஸ்ரீ ரஜினி கோவில் என்று எழுதி தரிசன நேரம் காலை 6 முதல் மாலை 6 மணி வரை என்று குறிப்பிட்டுள்ளார்.
அறை முழுவதும் ரஜினி நடித்த அபூர்வ ராகங்கள் முதல் ஜெயிலர் படம் வரையிலான புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ரஜினியின் படத்திற்கு அபிஷேகம், சிறப்பு பூஜை செய்தார்.
இந்தநிலையில் 3 அடி உயரத்தில் ரஜினியின் கற்சிலையை வடிவமைத்து வாங்கி உள்ளார். இந்த சிலைக்கு யாகம் வளர்த்து கும்பாபிஷேகம் நடத்துவது போன்று பூஜைகள் செய்தார். பின்னர் சிலையை கோவிலாக வழிபடும் அந்த அறையில் வைத்து ரசிகரான கார்த்திக் பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 6 வகை பொருட்களால் அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து தீபாராதனை நடத்தினார். தனக்கு உறுதுணையாக பெற்றோரும், மனைவியும் இருப்பதாக அவர் கூறினார்.
- ரஜினிகாந்த் நடித்த தலைவர் 170 படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பணகுடியில் நடந்தது
- பா.ஜ.க. நிர்வாகிகள் சிலரும் ரஜினிகாந்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
நாகர்கோவில் :
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தலைவர் 170 படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பணகுடியில் நடந்தது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாலை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. இதற்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு இருந்தது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் வருவதை அறிந்த ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர்.
ரசிகர்களை பார்த்து அவர் கை அசைத்தார். ரஜினிகாந்துடன் சில ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். படப்பிடிப்பு முடித்த பிறகு ரஜினிகாந்த் மீண்டும் கன்னியாகுமரியில் உள்ள விடுதிக்கு சென்றார். கன்னியாகுமரியில் உள்ள விடுதியில் ரஜினிகாந்தை முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசி னார். அவருக்கு பொன்னாடை அணிவித்து பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்த பொன் ராதாகிருஷ்ணன் சில நிமிடங்கள் பேசினார். இதைத்தொடர்ந்து பா.ஜ.க. நிர்வாகிகள் சிலரும் ரஜினிகாந்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
- நடிகர் ரஜினிகாந்த் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பணகுடியில் கடந்த 10-ந்தேதி தொடங்கியது.
இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வந்த நடிகர் ரஜினிகாந்த், அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்கி உள்ளார். கடந்த 3 நாட்களாக படப்படிப்புக்காக காரில் பணகுடிக்கு வரும் நடிகர் ரஜினியை காண அவரது ரசிகர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்களிடையே கை அசைத்தபடியும், கை குலுக்கியபடியும் நடிகர் ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று 4-வது நாள் படப்படிப்பு நடக்கிறது. 3 நாட்கள் மட்டுமே அங்குள்ள தள ஓடு தொழிற்சாலையில் சண்டை காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், கூடுதல் காட்சிகளுக்காக இன்று மேலும் ஒருநாள் படப்பிடிப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே படப்பிடிப்பில் பங்கேற்க வந்த நடிகர் ரஜினிக்கு அவரது ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் ரசிகர்கள் மத்தியில் பேசிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ரஜினிகாந்த், "46 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லைக்கு வருகை தந்துள்ளேன். கடைசியாக 1977-ம் ஆண்டு புவனா ஒரு கேள்விக்குறி என்ற படத்துக்கு வந்தது" என அவர் தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
இந்த படத்தில் நடிகர் அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா, மஞ்சு வாரியர் ஆகியோர் நடிக்கின்றனர். ஞானவேல் இயக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.