search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aishwarya"

    • ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து பேசி முடிவு செய்தோம்.
    • திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பது அவர்களது விருப்பம்.

    நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா-தம்பி ராமையா மகன் உமாபதி ஆகியோரின் காதல் திருமணம் கடந்த 10-ந்தேதி சென்னையில் நடந்தது. தொடர்ந்து சாலிகிராமத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜுன் பேசியதாவது:-

    நடிகராக பலமுறை இந்த மேடையில் ஏறிய நான் இன்று ஒரு பெண்ணை கட்டிக் கொடுத்த தந்தையாகவும் மாமனாராகவும் நிற்கிறேன். என்னுடைய சினிமா வாழ்க்கை மேலே வந்து கீழே விழுந்து திரும்பவும் மேலே வந்து இப்போது சம நிலையில் போய்க்கொண்டிருக்கிறது.

    தம்பி ராமையா உடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இருவரும் சம்பந்தி ஆவோம் என எங்கள் இரண்டு பேருக்கும் தெரியாது. நல்ல பண்பாடு உள்ள குடும்பம் அவர் குடும்பம். வெளிநாட்டில் நான் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் உமாபதி ஒரு போட்டியாளராக பங்கேற்றார். அப்போதே எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அவர் விரைவில் ஒரு ஆக்சன் ஹீரோவாக உருவெடுப்பார். அதற்குரிய அனைத்து தகுதியும் அவரிடம் உள்ளது. கூடிய விரைவில் அதை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.

    என் முதல் குழந்தையாக ஐஸ்வர்யா பிறந்தார். அவள் பிறந்ததில் இருந்து எனக்கு நேர் மறையான விஷயங்கள் பல நடந்தன.

    ஒரு நாள் என் இளைய மகள் என்னிடம் வந்து அப்பா ஐசு உங்களிடம் ஏதோ தனியாக பேச வேண்டும் என சொல்கிறார் என்று கூறினார்.

    நான் என்ன விஷயம் என கேட்க எனக்கு தெரியாது உங்களிடம் தான் பேச வேண்டுமாம் என சொன்னார். கதை, திரைக்கதை எழுதி உள்ளதால் காதல் விஷயம் என யூகித்துக் கொண்டேன்.

    ஆனால் மாப்பிள்ளை யார் என்று என்னால் கணிக்க முடியவில்லை. ஐஸ்வர்யா என்னிடம் வந்து விஷயத்தை சொன்னார். மாப்பிள்ளை யார் என கேட்டேன் உமாபதி என்றாள்.

    நான் ஷாக் ஆகி உமாபதியா எனக்கேட்டேன். என் மனைவி என்னிடம் நீங்கள் என்ன சொல்றீங்க என கேட்டார். அவரிடம் நான் என்ன சொல்வதற்கு. நல்ல வாழ்க்கையை அவர் தேர்ந்தெடுத்து விட்டார். 16 வயது 14 வயது என்றால் நாம் யோசிக்கலாம்.

    அவர்களது வாழ்க்கை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

    நிறைய மிராக்கிள் நடந்துள்ளது என்றேன். ஐஸ்வர்யா இப்போதும் எனக்கு குழந்தையாக தான் தெரிகிறார். ஒவ்வொரு தந்தைக்கும் தனது மகள் திருமணம் ஆனாலும் அவள் என்றும் குழந்தைதான். தொடர்ந்து தம்பி ராமையா குடும்பம் எங்கள் குடும்பம் சேர்ந்து ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து பேசி முடிவு செய்தோம். திருமணம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பது அவர்களது விருப்பம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் திருமணம் நடந்துள்ளது.
    • இன்று இவர்களுடைய ரிசப்ஷன் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.

    'ஆக்ஷன் கிங்' என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன், நடிகர் உமாபதிக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நடிகர் அர்ஜுனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோவிலில் நண்பர்கள், உறவினர்கள் சூழ எளிமையாக இந்த நிகழ்வு நடந்தது.

    இந்நிலையில், நேற்று, ஐஸ்வர்யா மற்றும் உமாபதியின் திருமணம் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    இதனையடுத்து திருமணத்தின் பொழுது எடுத்த புகைப்படங்களை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    இன்று இவர்களுடைய ரிசப்ஷன் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. அதில் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன், நடிகர் உமாபதிக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
    • ஐஸ்வர்யாவும் விஷாலுடன் 'பட்டத்து யானை' உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.

    'ஆக்ஷன் கிங்' என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன், நடிகர் உமாபதிக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நடிகர் அர்ஜுனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோவிலில் நண்பர்கள், உறவினர்கள் சூழ எளிமையாக இந்த நிகழ்வு நடந்தது.

    அர்ஜுன் தொகுத்து வழங்கிய 'சர்வைவர்' நிகழ்ச்சி மூலம் ஐஸ்வர்யாவுக்கு அறிமுகமானவர் உமாபதி. நிகழ்ச்சியில் உமாபதியின் நற்குணம் அர்ஜுனுக்குப் பிடித்துப் போக தனது வீட்டு மாப்பிளையாக பச்சைக் கொடி காட்டினார்.

    உமாபதி அதாகப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம், தண்ணி வண்டி, சேரன் இயக்கிய திருமணம் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    ஐஸ்வர்யாவும் விஷாலுடன் 'பட்டத்து யானை' உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்கக் கூடாது என தம்பி ராமையா குடும்பம் கேட்டுக் கொண்டதாக தகவல் பரவியது. ஆனால், இது குறித்து ஐஸ்வர்யா இன்னும் தெளிவுப்படுத்தவில்லை. இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்து ஆறு மாதங்களான நிலையில் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

    வரும் ஜூன் 10-ம் தேதி கிருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனின் தோட்டத்தில் தான் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் உமாபதி திருமணம் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலருக்கும் அழைப்பிதழ் வைக்கும் பணியை அர்ஜுன் ஆரம்பித்துள்ளார்.

    தனது மகள் திருமணத்துக்காக அழைப்பிதழ் வைக்கும் பணியை ஆரம்பித்துள்ள நடிகர் அர்ஜுன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு குடும்பத்துடன் சென்று அழைப்பு விடுத்துள்ள புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. தம்பி ராமைய்யாவும் தனது குடும்பத்துடன் உடன் சென்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேற்று ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் காலை இனிதே நடைபெற்றது.
    • பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

    கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது. நேற்று ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் காலை இனிதே நடைபெற்றது.

    மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரின் மனைவியான துர்கா ஸ்டாலின் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினர். பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

    நேற்று இரவு நடந்த கல்யாண ரிசப்ஷனில் மொத்த திரையுலக பிரபலங்களும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஷங்கர் படத்தில் பிரமாண்டத்தை காண்பித்து நாம் பார்த்து இருக்கிறோம்,. ஆனால் நிஜத்தில் ஒரு பிரமாண்டமான கல்யாணத்தை தன் மகளுக்காக நடத்தி இருக்கிறார்.

     

    லோகேஷ் கனகராஜ், சிவகார்த்திகேயன், ரன்வீர் சிங், அட்லீ, வெற்றிமாறன், ஏ.ஆர் ரகுமான், மோஹன்லால், நெல்சன் திலிப்குமார், அனிருத், விஜய் சேதுபதி, சிரஞ்சீவி, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து  ரன்வீர் சிங் பாட்டு டீ.ஜே கவுதமிடம் வாத்தி கம்மிங் பாடலை ஒலிக்க செய்து , மகிழ்ச்சியாக மணமக்களான ஐஷ்வர்யா ஷங்கர் மற்றும் தருண் கார்த்திகேயனுடன் குத்தாட்டம் ஆடினார். இவர்களுடன் அதிதி ஷங்கர் மற்றும் அட்லீ இணைந்து ஆடினர்.

    • 2004ம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தை ரத்து செய்யக் கோரி இருவரும் மனு தாக்கல்.
    • விவாகரத்து கோரிய வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு.

    நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் அக்டோபர் 7ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    2004ம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தை ரத்து செய்யக் கோரி இருவரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    திருமண வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • சென்னையில் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
    • ரஜினிகாந்த், கமல்ஹாசன்,சூர்யா,கார்த்தி,விக்ரம், பாரதிராஜா,மணிரத்னம் ,விக்னேஷ் - நயன்தாரா, உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.

    பிரபல இயக்குநர் ஷங்கருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா. இளைய மகள் அதிதி ஷங்கர் மருத்துவம் படித்து விட்டு, சினிமா ஆசையால் 'விருமன்' படத்தின் மூலம் நடிகையானார்.

    இந்நிலையில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022 -ம் ஆண்டு திருமணம் நடந்தது.சில பிரச்சினைகள் காரணமாக ஐஸ்வர்யா திருமணமான 6 மாதத்தில் கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.




    இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு 2- வது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.ஏப்ரல் 15 - ந்தேதி அன்று திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதையொட்டி திருமண பணிகளில் ஷங்கர் தீவிரமாக ஈடுபட்டார்.பல முக்கிய பிரமுகர்களுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கினார். மேலும் திருமண விழாவை தடபுடலாக நடத்த ஏற்பாடு செய்தார்




    இந்நிலையில் இன்று (15- ந்தேதி) சென்னையில் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.



    மேலும் திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன்,சூர்யா,கார்த்தி,விக்ரம், விஷால், அர்ஜுன் இயக்குனர்கள் பாரதிராஜா,மணிரத்னம் -சுஹாசினி, கே. பாக்யராஜ்,பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், ஹரி - ப்ரிதா ஹரி, விஷ்ணு வர்தன் - அனுவர்தன், விக்னேஷ் சிவன் - நயன்தாரா, ரவி குமார்,




    நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர்கள் நாசர் - கமிலா நாசர், ஜீவா,சித்தார்த், நடிகை அதிதி ராவ், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, ஜெயந்திலால் காடா, ஏ.எம்.ரத்னம்,தில் ராஜு, ஐசரி கணேஷ்,ராஜசேகர்,திருப்பதி பிரசாத், இசையமைப்பாளர் ஹாரில் ஜெயராஜ்,உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்தினர்.




    மணமக்களை வாழ்த்த வந்தவர்களை இயக்குனர்கள் லிங்குசாமி,அட்லி, வசந்த பாலன், நடிகர் பரத், ஆகியோர் வரவேற்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது.
    • பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

    பிரபல இயக்குநர் ஷங்கருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா. இளைய மகள் அதிதி ஷங்கர் மருத்துவம் படித்து விட்டு, சினிமா ஆசையால் 'விருமன்' படத்தின் மூலம் நடிகையானார். தற்பொழுது முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

    கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது. இன்று ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் காலை இனிதே நடைபெற்றது.

    மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரின் மனைவியான துர்கா ஸ்டாலின் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினர். பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

     

    நடிகர் ரஜினிகாந்த, கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விக்ரம், நயன்தாரா, விக்னேஷ் சிவன், கீர்த்தி சுரேஷ் அர்ஜூன் மற்றும் பலர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.

     

     

     

    இயக்குனர் பாரதிராஜா, மணிரத்னம், பாக்யராஜ், வாசு, கே.எஸ் ரவிக்குமார், ஹரி ஆகியோர் குடும்பத்துடன் நேரில் சென்று வாழ்த்தினர்.

    மணமக்களை வாழ்த்த வந்தவர்களை இயக்குனர் லிங்குசாமி, இயக்குனர் அட்லி, இயக்குனர் வசந்த பாலன், நடிகர் பரத், மேலாளர் தங்கதுரை ஆகியோர் வரவேற்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தற்பொழுது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது.
    • வெங்கட் பிரபு நகைச்சுவையாக ஒரு பதிவொன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    லியோ வெற்றியை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. கேரள ரசிகர்களின் வரவேற்பு மிக பிரம்மிப்பாக இருந்தது. பின் நான்கு நாட்கள் படப்பிடிப்பு முடித்தவுடன் சென்னை திரும்பினார் விஜய்.

    இந்நிலையில் தற்பொழுது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது. இதையொட்டி வெங்கட் பிரபு நகைச்சுவையாக ஒரு பதிவொன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    அப்பதிவில் கோட் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி மற்றும் ஐஷ்வர்யா கல்பாத்தி இருவரும் வெங்கட் பிரபுவை கேள்வி கேட்குமாறு கை சைகையில் இருக்கிறார்கள். வெங்கட் பிரபு தலையில் பேஸ்பால் பேட் ஒன்றை அர்ச்சனா கல்பாத்தி வைத்துள்ளார். வெங்கட் பிரபு இருவரையும் கையெடுத்து கும்பிடுகிறார். இவ்வாறு அந்த காட்சி அமைந்துள்ளது.

    இப்படித்தான் என்னுடைய நாள் 'என் அன்பு தயாரிப்பாளர்களுடன் தொடங்கும்' என நகைச்சுவையான தலைப்பில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வருகிற 15- ந்தேதி ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடை பெற உள்ளது.
    • இதற்கான வேலைகளில் ஷங்கர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.

    பிரபல இயக்குநர் ஷங்கருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா. இளைய மகள் அதிதி ஷங்கர் மருத்துவம் படித்து விட்டு, சினிமா ஆசையால் 'விருமன்' படத்தின் மூலம் நடிகையானார்.

    இந்நிலையில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022 -ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    சில பிரச்சினைகள் காரணமாக ஐஸ்வர்யா திருமணமான 6 மாதத்தில் கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.

    இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு 2- வது திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது.

    இந்நிலையில் வருகிற 15- ந்தேதி ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடை பெற உள்ளது. இதற்கான வேலைகளில் ஷங்கர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.பல முக்கிய பிரமுகர்களுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கி திருமண விழாவை தடபுடலாக நடத்த ஷங்கர் திட்டமிட்டு உள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரஜினிகாந்த் தனது மகள்கள் ஐஸ்வர்யா,சௌந்தர்யா,பேரக்குழந்தைகளுடன் வண்ணப்பொடிகளை தூவி 'ஹோலி' கொண்டாடிய புகைப்படங்களை சவுந்தர்யா பகிர்ந்துள்ளார்.
    • சௌந்தர்யா, அவரது கணவர் விசாகன் மகன்கள் வேத் மற்றும் வீர் ஆகியோருடன் லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா உற்சாக 'போஸ்' கொடுத்த புகைப்படம் மற்றும் "ஹேப்பி ஹோலி " என்று பதிவிட்டு உள்ளார்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஹோலி- 2024 கொண்டாடினார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    ரஜினிகாந்த் தனது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா மற்றும் பேரக்குழந்தைகளுடன் உற்சாகமாக வண்ணப்பொடிகளை தூவி 'ஹோலி' கொண்டாடிய புகைப்படங்களை அவரது மகள் சவுந்தர்யா இணைய தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    1975- ம் ஆண்டு 'அபூர்வ ராகங்கள்' படம் மூலம் சினிமா நடிகராக அறிமுகமான 'சிவாஜி ராவ் சினிமாவுக்காக 'ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டப்பட்டது இதே நாள் என்பதால் ரஜினிகாந்த் குடும்பத்திற்கு 'ஹோலி' பண்டிகை தினம் சிறப்பு வாய்ந்ததாகும்.




    'ஹோலி' கொண்டாட்ட புகைப்படங்களை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இணைய தளத்தில் பகிர்ந்து உள்ளார். அதில் 'பழம்பெரும் இயக்குனர்பாலசந்தர் 'தாத்தா' அவர்களை இந்த நேரத்தில் நாம் தவறவிட்டு உள்ளோம்"என குறிப்பிட்டு உள்ளார்.

    மேலும் சௌந்தர்யா, அவரது கணவர் விசாகன் மற்றும் அவர்களது மகன்கள் வேத் மற்றும் வீர் ஆகியோருடன் லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உற்சாக 'போஸ்' கொடுத்த புகைப்படம் மற்றும் "ஹேப்பி ஹோலி " என்று இதயம் மற்றும் எமோஜிகளை இணைய தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரில் பிறந்தார்.அவருக்கு 'சிவாஜி ராவ் கெய்க்வாட்' என்று பெற்றோர் பெயர் சூட்டினர். பெங்களூருவில் முதலில் 'கண்டக்டர்' பணி செய்தார்.அதன்பின் நடிப்பு ஆர்வத்தில் அவர் சென்னைக்கு வந்தார். 

    1975- ம் ஆண்டு பிரபல இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தார். 




    ரஜினி பல ஆண்டுகளாக சினிமாவில் ஒரு வலிமையான அசைக்க முடியாத சக்தியாக உள்ளார். ரஜினிகாந்த் கடைசியாக இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் 'ஜெயிலர்' படத்தில் நடித்தார்.

    இப்படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. ரஜினி தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வேட்டையன்' படத்துக்கு பிறகு ரஜினி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' படத்தில் நடிக்க உள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இன்று 3- வது நாள் விருந்து நிகழ்ச்சி நடந்து வருகிறது
    • மனைவி லதா மகள் ஐஸ்வர்யா ஆகியோருடன் ரஜினிகாந்த் குஜராத் ஜாம்நகருக்கு சென்றார்

    'ரிலையன்ஸ்' நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி- நீட்டா தம்பதிகளின் இளையமகன் ஆனந்த்அம்பானி -ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வருகிற ஜூலை 12- ந்தேதி நடக்கிறது.

    இந்த திருமணத்தை முன்னிட்டு குஜராத் ஜாம்நகரில் ரிலையன்ஸ் கிரீன்ஸ் வளாகத்தில் 3 நாட்கள் முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து நிகழ்ச்சி நடந்து வருகிறது.இந்தவிழாவில் பாலிவுட் பிரபலங்களின் கலைநிகழ்ச்சியில் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் பங்கேற்றனர்.

    இதில் இந்திபட சூப்பர் ஸ்டார்கள்ஷாருக்கான்,சல்மான்கான் மற்றும் அமீர்கான் கலந்து கொண்டு ஒரே மேடையில் நடனம் ஆடினார்கள்.

    இன்று 3- வது நாளாக நடைபெறும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த்,மகள் ஐஸ்வர்யா ஆகியோர் குஜராத் ஜாம் நகருக்கு விமானத்தில் சென்றனர்.

    • லியோ படத்தில் அர்ஜூன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
    • புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் அர்ஜூன். இவர் கடந்த ஆண்டு வெளியான லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுதவிர இவர் மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில், நடிகர் அர்ஜூன் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்துள்ளார். சந்திப்பின் போது, பிரதமர் மோடிக்கு புகைப்படம் ஒன்றை பரிசாக வழங்கினார்.

    நடிகர் அர்ஜூன் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் பிரதமரை சந்தித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகின்றன. 

    ×