search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chinna Thambi"

    • பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் சின்னதம்பி.
    • இப்படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆனதை குஷ்பு நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் கடந்த 1991ம் ஆண்டு வெளியான படம் சின்னதம்பி. இப்படத்தின் கதாநாயகனாக பிரபு, கதாநாயகியாக குஷ்பு நடித்திருந்தனர். மேலும் ராதாரவி, மனோரமா, ராஜேஷ் குமார், உதய் பிரகாஷ், கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது. இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது.


    சின்னதம்பி

    சின்னதம்பி

    இந்நிலையில் சின்னதம்பி திரைப்படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆனதை நடிகை குஷ்பு சமூக வலைத்தளத்தின் வாயிலாக நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ் சினிமா வரலாற்றில் சின்னதம்பி படம் மிகப்பெரிய புயலை ஏற்படுத்தி 32 ஆண்டுகள் ஆகிவிட்டதென நம்பவே முடியவில்லை!


    குஷ்பு - பி.வாசு - பிரபு 

    குஷ்பு - பி.வாசு - பிரபு 


    என் மீது பொழிந்த அன்புக்கு என்றும் கடமைப்பட்டிருப்பேன். என் இதயம் எப்போதும் பி.வாசு சார் மற்றும் பிரபு சாருக்காக துடிக்கும். இளையராஜா சாரின் ஆன்மாவைக் கிளப்பிய இசைக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நந்தினி, எப்போதுமே அனைவரின் இதயங்களிலும் மனங்களிலும் என்றென்றும் நிறைந்திருப்பார்! மீண்டும் ஒருமுறை நன்றி என்று குஷ்பு பதிவிட்டுள்ளார்.

    நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு, சமீபத்தில் அளித்த பேட்டியில், அந்த படத்தை ரீமேக் செய்ய வேண்டாம் என்று கூறியிருக்கிறார். #Khushbu
    பிரபு, குஷ்பு நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘சின்னதம்பி’. இந்த படத்தை ரீமேக் செய்யலாம் என்று ஒரு பேச்சு எழுந்தது. இதுபற்றி குஷ்புவிடம் ஒரு பேட்டியில் கேட்டதற்கு, ‘ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட படத்தை ரீமேக் என்ற பெயரில் கைவைக்கக் கூடாது. வட இந்தியாவில் இருந்து நடிக்க வந்த ஒரு நடிகை தமிழ் பேசி ஆடிப்பாடி சிரித்து, அழுதுபுரண்டு நடித்ததை வியந்து பார்த்தனர். 



    அந்த அளவுக்கு டைரக்டர் வாசு சார் சின்னத்தம்பி நந்தினி கதாபாத்திரத்தை செதுக்கி உருவாக்கி இருந்தார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி முழுக்க முழுக்க நந்தினி தோளில் சுமத்தப்பட்டது. இன்னொரு முக்கியமான வி‌ஷயம் வேறு எந்த ஹீரோக்கள் நடித்து இருந்தாலும் என்னை அந்த அளவுக்கு விட்டுக்கொடுத்திருக்க மாட்டார்கள். பிரபு சார் அவரது ஹீரோயிசத்தை பெருந்தன்மையாகக் குறைத்துக்கொண்டார். 

    நான் நடித்த நந்தினி கேரக்டரை எந்த நடிகையும் நடிக்கலாம். ஆனால், பிரபு சார், மனோரமா ஆச்சி நடித்த கேரக்டர்களில் யாரை நடிக்க வைப்பீர்கள்...?’. இவ்வாறு குஷ்பு கேட்டுள்ளார்.
    அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆயிரத்து 737 பேர் விருப்பமனு அளித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #ADMK #MinisterVijayaBhaskar
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அதிமுக கட்சி 40 தொகுதிகளுக்கும் போட்டியிட விரும்புவர்களிடம் விருப்பமனு வாங்கி வந்தது. இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைந்தது.

    மொத்தம் 1,737 பேர் விருப்பமனு அளித்துள்ளனர். அத்துடன் கரூர் தொகுதியில் போட்டியிட சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் தந்தை சின்னதம்பி விருப்ப மனு அளித்துள்ளார். ஏற்கனவே அமைச்சர் ஜெயக்குமார் மகன், துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஆகியோரும் விருப்ப மனு அளித்துள்ளனர். #ADMK #MinisterVijayaBhaskar
    சின்னத்தம்பி யானைக்கு சினிமா நட்சத்திரங்களான ஆர்யா, சிபிராஜ், உள்ளிட்ட பலர் ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். #ChinnaThambi #Arya #Sibi
    சின்னத்தம்பி யானை கடந்த மாதம் கோவை பகுதியில் இருந்து டாப்சிலிப் வரகளியாறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

    சில நாட்களிலேயே தனது வாழ்விடத்தைத் தேடி வெளியில் வந்துவிட்டது. தொடர்ந்து 100 கிலோ மீட்டருக்கு மேல் பயணித்தும் எந்த சேதங்களையும் ஏற்படுத்தாமல், வனவிலங்குகளின் வாழ்விடத்தில் உள்ள பிரச்னைகளை பற்றி எல்லோரையும் பேச வைத்துள்ளது.

    ‘சின்னத்தம்பி யானையை காட்டுக்குள் விரட்டுவதில் சிக்கல் உள்ளது. எனவே, அதை முகாமுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர வேறு வழி இல்லை’ என்று கோர்ட்டில் வனத்துறை கூறியிருந்தது.

    இதையடுத்து, ‘எதற்காக சின்னத்தம்பியை முகாமுக்கு அழைத்துச் செல்லவேண்டும்? அதற்கு மீண்டும் இயற்கை உணவுகளைக் கொடுத்து ஏன் காட்டுக்குள் விடக்கூடாது? சின்னத்தம்பியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.



    இந்நிலையில் சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றக் கூடாது என்று வலியுறுத்தி, ஒரு ஹேஷ்டேக் டுவிட்டரில் தமிழ்நாடு அளவில் டிரெண்டாகி வருகிறது.

    சின்னத்தம்பியை கும்கியாக மாற்றக் கூடாது என்று வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசன்னா, மதுக்கரை மகராஜா யானை கூண்டில் உயிரிழந்த படத்துடன் பதிவிட அதை நடிகர்கள் ஆர்யா, சிபிராஜ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் மீண்டும் பகிர்ந்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ், விஜய்சேதுபதி உள்ளிட்டோரும் சின்னத்தம்பி யானைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
    ×