search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister vijaya bhaskar"

    அரசு மருத்துவமனைகளில் இந்த ஆண்டு 2 ஆயிரத்து 345 செவிலியர்கள் புதிதாக பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். #MinisterVijayaBhaskar
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரி அருகே சீறிப்பாயும் காளையை வீரர் அடக்குவது போன்ற தோற்றத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தத்ரூபமாக உலோக சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார்.

    இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்து, மாலை அணிவித்து பேசினார். முன்னதாக புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில், அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 13 புதிய அதிநவீன அரசு பஸ்களை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், கர்ப்பிணிகளுக்கு அம்மா தாய் சேய் நல பெட்டகம் மற்றும் செவிலியர்களுக்கு கையடக்க கணினிகளை வழங்கி பேசினார்.

    தொடர்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் 35 அடி உயரம் கொண்ட நினைவு சின்னத்தை அமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில், இந்த ஆண்டு விரைவில் 2 ஆயிரத்து 345 செவிலியர்கள் புதிதாக பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதேபோல் சிசு பராமரிப்பு மையங்களில் 640 சிறப்பு செவிலியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும். தமிழகத்திலேயே முதல்முறையாக ஜல்லிக்கட்டு காளையை வீரர் அடக்குவது போன்ற சிலை புதுக்கோட்டையில் மட்டும்தான் அமைக் கப்பட்டு உள்ளது, என்றார். #MinisterVijayaBhaskar
    அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆயிரத்து 737 பேர் விருப்பமனு அளித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #ADMK #MinisterVijayaBhaskar
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அதிமுக கட்சி 40 தொகுதிகளுக்கும் போட்டியிட விரும்புவர்களிடம் விருப்பமனு வாங்கி வந்தது. இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைந்தது.

    மொத்தம் 1,737 பேர் விருப்பமனு அளித்துள்ளனர். அத்துடன் கரூர் தொகுதியில் போட்டியிட சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் தந்தை சின்னதம்பி விருப்ப மனு அளித்துள்ளார். ஏற்கனவே அமைச்சர் ஜெயக்குமார் மகன், துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஆகியோரும் விருப்ப மனு அளித்துள்ளனர். #ADMK #MinisterVijayaBhaskar
    தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த 20 லட்சம் மாத்திரைகள் தயார் நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். #MinisterVijayaBhaskar #SwineFlu
    சென்னை:

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள காய்ச்சல் வார்டுகளில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட்டு, உரிய சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினருக்கு ஆலோசனை வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், பொதுமக்கள் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனே தாமதிக்காமல் அரசு மருத்துவமனையை அணுகுமாறும், மருத்துவரின் பரிந்துரையின்றி எந்த மருந்தையும் அவர்களாகவே உட்கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.



    மேலும், டெங்கு காய்ச்சலை தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த  20 லட்சம் மாத்திரைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது பொது மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின்ஜோ, பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குனர் அரசர் சீராளர் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். #MinisterVijayaBhaskar #SwineFlu #TamifluTablets
    வெளிமாநில மாணவர்கள் தமிழக மருத்துவ ஒதுக்கீட்டில் சேர முடியாத அளவுக்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலினுக்கு, டாக்டர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார். #MKStalin #VijayaBhaskar #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ சேர்க்கை தொடர்பாக கவன ஈர்ப்பை கொண்டு வந்து பேசியதாவது:-

    ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களைச் சார்ந்திருக்கக்கூடிய மாணவர்கள் தமிழ்நாட்டில் இருப்பதாக இருப்பிட சான்றிதழ் பெற்றுக்கொண்டு இப்பொழுது மருத்துவக் கல்லூரியில் சேரக்கூடிய ஒரு சூழ்நிலை வந்திருக்கிறது என மிகப்பெரிய குற்றச்சாட்டு தொடர்ந்து உலவிக்கொண்டு இருக்கிறது.

    எனவே, இருப்பிடச் சான்றிதழ் விவகாரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மோசடிகளைப் போல, இந்த ஆண்டும் நடைபெறாமல் இருப்பதை தவிர்க்க இந்த ஆண்டு ஒரு புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டிருந்தாலும், மற்ற மாநிலத்தவர் எப்படியோ யாருடைய துணையோடோ ஏதோ சதி செய்து இங்கு வந்து சேர்ந்து விடுகிறார்கள்.

    இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களின் நிலை என்னவாயிற்று?. அதன் தற்போதைய நிலை என்ன? என்பதை முதல்-அமைச்சர் விளக்க வேண்டும். ஒருவேளை மத்திய அரசு அந்த மசோதாவை வேண்டுமென்றே விதிமுறைகளின் படி எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பிலே போட்டு வைக்கப்பட்டிருக்கும் என்று சொன்னால், அந்த மசோதாக்களுக்கு ஜனாதிபதி அனுமதிபெறவும், உடனடியாக மத்திய அரசுக்கு உத்தரவிடவும் தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக ஒரு வழக்கு தொடர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த கவன ஈர்ப்புக்கு பதில் அளித்து அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

    இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக மருத்துவ இடங்களாக 3,393 இடங்கள் உள்ளது. நமது மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் மட்டும் சேரும் வகையில் விதிமுறைகளை கடுமையாக்கியிருக்கிறோம். மாநில ஒதுக்கீட்டில் ஒரு இடத்தை கூட பிற மாநில மாணவர்கள் பெற முடியாது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க முடியும். இதில் தமிழக அரசு தெளிவாக இருக்கிறது. தேசிய ஒதுக்கீட்டில் 15 சதவீதம் போக 85 சதவீதம் நமக்கு தான்.



    இருப்பிட சான்று தொடர்பான வழக்கு கோர்ட்டில் இருக்கிறது. வெளிமாநிலத்து மாணவர்கள் தமிழகத்தில் இருப்பிட சான்று பெற்று சேருவதை தடுக்க மிக தெளிவாக 12 ஷரத்துக்களை சேர்த்து இருக்கிறோம். எனவே அவர்கள் விண்ணப்பிக்கும்போதே நிராகரிக்கப்பட்டு விடுவார்கள். நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாவை ஜனாதிபதி நிறுத்தி வைத்து இருக்கிறார். இதற்கான காரணத்தையும் நாங்கள் கேட்டு இருக்கிறோம். கடந்த முறை உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக நீட் தேர்வு நடைபெற்றது. இருப்பினும் இந்த அரசு மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பதில் அளித்தார். #MKStalin #VijayaBhaskar #TNAssembly
    அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவில் 73 டாக்டர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு ஆஸ்பத்திரி வளாகத்தில், சர்வதேச யோகா தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநர் டாக்டர் கி.செந்தில்ராஜ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் பி.உமாமகேஸ்வரி, மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ ஆகியோர் முன்னிலையில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 300 பேர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

    தமிழகத்தில் 31 அரசு வட்ட மருத்துவமனையிலும் சென்னையில் 4 அரசு மருத்துவமனைகளிலும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம் தொடங்கப்பட்டு யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் 165 யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிலையங்கள் உள்ளன. இந்தியாவிலேயே அனைத்து இந்திய முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதிக்கு அரசு மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளது என்ற சிறப்பு பெருமை தமிழ்நாட்டை மட்டுமே சாரும்.

    சென்னை அண்ணாநகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் இயற்கை வழியில் உடற்பருமனை குறைக்க சிறப்பு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. இச்சிகிச்சை முறையில் எவ்வித பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சைகளான நீராவி குளியல், வாழை இலை குளியல், மண் குளியல், இயற்கை உணவு, உண்ணா நோன்பு, இயற்கை மூலிகை சிகிச்சை மற்றும் யோகா சிகிச்சையும் எவ்வித கட்டணமும் இல்லாமல் அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும், அரசு மருத்துவமனைகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவில் 73 டாக்டர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார். 
    ×