என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » karnataka deputy cm
நீங்கள் தேடியது "Karnataka deputy CM"
நடிகைகள் திருமணத்துக்கு செல்லும் மோடிக்கு சாமியார் இறுதிச்சடங்கில் பங்கேற்க நேரமில்லையா? என்று கர்நாடக துணை முதல் மந்திரி பரமேஸ்வரா கேள்வி எழுப்பியுள்ளார். #PMModi #Parameshwara
பெங்களூரு:
111 வயதில் மறைந்த கர்நாடக மடாதிபதி சிவகுமார சுவாமி உடலுக்கு பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், சதானந்தகவுடா ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
அவரது உடலுக்கு பிரதமர் மோடி நேரில் வந்து அஞ்சலி செலுத்தாதது குறித்து காங்கிரஸ் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.
இதுகுறித்து காங்கிரசை சேர்ந்த கர்நாடக துணை முதல் மந்திரி பரமேஸ்வரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தனது வாழ்க்கையை முழுமையாக ஏழைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டோருக்காகவும் ஒதுக்கி பாடுபட்டு மறைந்துள்ளார் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி. அவருக்கு அஞ்சலி செலுத்த பிரதமருக்கு நேரம் இல்லையா?
சாமியாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை வீணாகி போய்விட்டது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #PMModi #Parameshwara
111 வயதில் மறைந்த கர்நாடக மடாதிபதி சிவகுமார சுவாமி உடலுக்கு பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், சதானந்தகவுடா ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
அவரது உடலுக்கு பிரதமர் மோடி நேரில் வந்து அஞ்சலி செலுத்தாதது குறித்து காங்கிரஸ் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.
இதுகுறித்து காங்கிரசை சேர்ந்த கர்நாடக துணை முதல் மந்திரி பரமேஸ்வரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி நடிகர்- நடிகைகளின் திருமணங்களுக்கு போகிறார். பிரபலங்களை சந்திக்கிறார். ஆனால் நமது கடவுளாக வாழ்ந்து மறைந்தவரின் இறுதிச்சடங்குக்கு வர முடியவில்லை.
தனது வாழ்க்கையை முழுமையாக ஏழைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டோருக்காகவும் ஒதுக்கி பாடுபட்டு மறைந்துள்ளார் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி. அவருக்கு அஞ்சலி செலுத்த பிரதமருக்கு நேரம் இல்லையா?
சாமியாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை வீணாகி போய்விட்டது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #PMModi #Parameshwara
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்புடைய அமைப்புகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக கர்நாடக அரசு ஆலோசித்து வருவதாக துணை முதல் மந்திரி பரமேஷ்வரா தெரிவித்துள்ளார். #GParameshwara #Lankeshkilling
பெங்களூரு:
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ்(55). பிரபல பத்திரிகையாளரான இவரை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் கடந்த 5-9-2017 அன்று அவருடைய வீட்டின் அருகே கவுரி லங்கேஷை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
இந்த படுகொலை தொடர்பாக விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவினர் கொலை திட்டம் தீட்டிய அமோல் காலே, பிரவீன் (எ) சுஜித் குமார், அமித் டேல்வேக்கர் மற்றும் துப்பாக்கியால் சுட்ட பரசுராம் வாக்மாரே உள்பட 18 பேர்மீது குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக பெங்களூரு பெருநகர முதன்மை நீதிமன்றத்தில் 9,235 பக்கங்களை கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் நேற்று தாக்கல் செய்தனர்.
கவுரி லங்கேஷுடன் எவ்வித அறிமுகமோ, பகையோ இல்லாத ஒரு அமைப்பு அவரை கொல்வதற்கு கடந்த 5 ஆண்டுகளாக திட்டமிட்டிருந்ததாக இந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெங்களூரு நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக மாநில துணை முதல் மந்திரி பரமேஷ்வரா பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்புடைய அமைப்புகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக கர்நாடக அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
கொலையில் தொடர்புடைய அமைப்புகளுக்கு தடை விதிக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், விரைவில் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். #GParameshwara #Lankeshkilling
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ்(55). பிரபல பத்திரிகையாளரான இவரை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் கடந்த 5-9-2017 அன்று அவருடைய வீட்டின் அருகே கவுரி லங்கேஷை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
இந்த படுகொலை தொடர்பாக விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவினர் கொலை திட்டம் தீட்டிய அமோல் காலே, பிரவீன் (எ) சுஜித் குமார், அமித் டேல்வேக்கர் மற்றும் துப்பாக்கியால் சுட்ட பரசுராம் வாக்மாரே உள்பட 18 பேர்மீது குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக பெங்களூரு பெருநகர முதன்மை நீதிமன்றத்தில் 9,235 பக்கங்களை கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் நேற்று தாக்கல் செய்தனர்.
கவுரி லங்கேஷுடன் எவ்வித அறிமுகமோ, பகையோ இல்லாத ஒரு அமைப்பு அவரை கொல்வதற்கு கடந்த 5 ஆண்டுகளாக திட்டமிட்டிருந்ததாக இந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சனாதன் சன்ஸ்த்தா என்னும் இந்துத்துவ அமைப்பின் துணை அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களது சித்தாந்தத்துக்கு எதிரானவர் என்று கருதியதால் கவுரி லங்கேஷை கொல்ல முயன்றதாக அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.பாலன் தெரிவித்தார்.
பெங்களூரு நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக மாநில துணை முதல் மந்திரி பரமேஷ்வரா பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்புடைய அமைப்புகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக கர்நாடக அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
கொலையில் தொடர்புடைய அமைப்புகளுக்கு தடை விதிக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், விரைவில் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். #GParameshwara #Lankeshkilling
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X