என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பில் சால்ட்"

    • பிலிப் சால்ட் 60 பந்தில் 8 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 141 ரன்கள் குவித்தார்.
    • இங்கிலாந்து அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது.

    இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டி20 போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது. பிலிப் சால்ட் 60 பந்தில் 8 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 141 ரன்கள் குவித்தார்.

    அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 158 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 146 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் அதிரடி சதம் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதம் விளாசியவர்களின் பட்டியலில் பில் சால்ட் 2வது இடத்திற்கு முன்னேறினார்.

    சூர்யகுமார் யாதவ் மற்றும் பில் சால்ட் ஆகியோர் தலா 4 சதங்கள் அடித்துள்ளனர். ரோகித் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 5 சதங்களுடன் முதல் இடத்தில உள்ளனர்.

    • முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 304 ரன்களைக் குவித்தது.
    • அந்த அணியின் பிலிப் சால்ட் 39 பந்தில் சதமடித்து அசத்தினார்.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டி20 போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது. பிலிப் சால்ட் 60 பந்தில் 8 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 141 ரன்கள் குவித்தார்.

    முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்த நிலையில் ஜோஸ் பட்லர் 83 ரன்னில் வெளியேறினார். அவர் 30 பந்தில் 7 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 83 ரன்கள் குவித்தார்.

    அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 158 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 146 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிவேக சதம் அடித்தவர் என்ற சாதனையை பிலிப் சால்ட் படைத்தார். இவர் 39 பந்தில் சதமடித்தார்.

    ஏற்கனவே, லியாம் லிவிங்ஸ்டன் 42 பந்துகளில் சதமடித்திருந்தார். அந்த சாதனையை பிலிப் சால்ட் முறியடித்துள்ளார்.

    • முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 304 ரன்களைக் குவித்தது.
    • அந்த அணியின் பிலிப் சால்ட் அதிரடியாக ஆடி சதமடித்தார்.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டி20 போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது. பிலிப் சால்ட் 60 பந்தில் 8 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 141 ரன்கள் குவித்தார்.

    முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்த நிலையில் ஜோஸ் பட்லர் 83 ரன்னில் வெளியேறினார். அவர் 30 பந்தில் 7 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 83 ரன்கள் குவித்தார். ஹாரி புரூக் 41 ரன்கள் எடுத்தார். பெத்தேல் 26 ரன்னில் அவுட்டானார்.

    இதையடுத்து, 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. கேப்டன் மார்கிரம் மட்டும் அதிரடியாக ஆடி 41 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 16.1 ஓவரில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலையில் உள்ளன.

    இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டும், சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், லியாம் டாசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 304 ரன்களைக் குவித்தது.

    மான்செஸ்டர்:

    தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என கைப்பற்றியது. முதல் டி20 போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகள் மோதும் 2வது டி20 போட்டி மான்செஸ்டரில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர், பிலிப் சால்ட் இறங்கினர். ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர். இதனால் பவர் பிளே முடிவில் இங்கிலாந்து 100 ரன்களைத் தொட்டது.

    முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்த நிலையில் ஜோஸ் பட்லர் 83 ரன்னில் வெளியேறினார். அவர் 30 பந்தில் 7 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 83 ரன்கள் குவித்தார்.

    தொடர்ந்து சிறப்பாக ஆடிய பிலிப் சால்ட் சதமடித்து அசத்தினார். 2வது விக்கெட்டுக்கு பிலிப் சால்ட்-ஜேக்கப் பெத்தேல் ஜோடி 95 ரன்கள் சேர்த்த நிலையில் பெத்தேல் 26 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்துள்ளது. பிலிப் சால்ட் 60 பந்தில் 8 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 141 ரன்கள் குவித்தார். ஹாரி புரூக் 41 ரன்கள் எடுத்தார்.

    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
    • இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

    இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

    இந்நிலையில், இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியின் தொடக்க வீரரான பில் சால்ட் விளையாடுவது சந்தேகம் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    பில் சால்ட்டின் மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார். விரைவில் அவருக்கு குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இறுதிப்போட்டிக்கான பயிற்சியில் பில் சால்ட் ஈடுபடவில்லை. ஆதலால் அவர் இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது.

    குவாலியையார் 1 போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக அரைசதம் அடித்து பெங்களூரு அணியை வெற்றி பெற வைத்த பில் சால்ட் இறுதிப்போட்டியில் விளையாடவில்லை என்றால் அது ஆர்.சி.பி. அணிக்கு பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக ஆர்.சி.பி. அணி தரப்பில் இருந்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

    • ஆர்சிபி அணியில் ஹேசில்வுட், பில் சால்ட், டிம் டேவிட், ஜேக்கப் பெத்தேல் உள்ளிட்ட முன்னணி வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
    • பாகிஸ்தான் தாக்குதல் காரணமாக இவர்கள் உடனடியாக சொந்த நாடு திரும்பினர்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.

    இதனால் பாகிஸ்தான் Loc பகுதிகளில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. மேலும், இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய பகுதிகளை குறிவைத்து ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதை இந்தியா முறியடித்து பதிலடியும் கொடுத்தது.

    இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவியது. கடந்த 8ஆம் தேதி தரம்சாலாவில் பஞ்சாப்- டெல்லி அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதால், பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் உடனடியாக நிறுத்தப்பட்டது. வெளிநாட்டு வீரர்கள் பத்திரமாக சொந்த நாடு திரும்பினர்.

    பின்னர் இந்தியா- பாகிஸ்தான் இடையில் கடந்த 10ஆம் தேதி சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வருகிற 17ஆம் தேதி மீண்டும் ஐபிஎல் தொடர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆர்சிபி அணியில் இடம் பிடித்திருந்த பில் சால்ட், டிம் டேவிட், பெத்தேல் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியேர்ர் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர்.

    புள்ளிகள் பட்டியலில் ஆர்சிபி 11 போட்டிகளில் விளைாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. வருகிற 17ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் போட்டியில் கொல்த்தா நைட் ரைடர்ஸ் அணியையும், 28ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியையும், 27ஆம் தேதி லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியையும் எதிர்கொள்கிறது.

    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த ஜேசன் ராய் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகியுள்ளார்.
    • கடந்த சீசனில் அந்த அணிக்காக ரூ. 2.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இவர், 9 போட்டிகளில் விளையாடி 218 ரன்களை எடுத்திருந்தார்.

    ஐபிஎல் 2024 தொடர் மார்ச் 22-ம் தேதி ஆரம்பமாகிறது. அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த இங்கிலாந்து அதிரடி வீரர் ஜேசன் ராய் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகியுள்ளார். கடந்த சீசனில் அந்த அணிக்காக ரூ. 2.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இவர், 9 போட்டிகளில் விளையாடி 218 ரன்களை எடுத்திருந்தார்.

    ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஜேசன் ராய் விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தொடரிலிருந்து விலகிய ஜேசன் ராய்க்கு பதிலாக இங்கிலாந்து அதிரடி வீரர் பில் சால்ட் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய மதிப்பில் ரூ.1.50 கோடிக்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிய பில் சால்ட், சரியாக விளையாடாத காரணத்தால் அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார். அதன்பின் நடந்து முடிந்த வீரர்கள் மினி ஏலத்திலும் அவரை எந்த அணியும் ஏலம் கேட்க முன்வரவில்லை. அதிலும் குறிப்பாக, அவர் ஏலத்தில் எடுக்கப்படாத சில தினங்களுக்கு முன்புதான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அடுத்தடுத்து சதங்களை விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் பில் சால்ட்டை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் பில் சால்ட் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 21 போட்டிகளில் விளையாடி 2 சதம், 2 அரைசதங்களுடன், 639 ரன்களை எடுத்துள்ளார். மேலும். ஐ.சி.சி. டி20 தரவரிசையில் நம்பர் 2 டி20 பேட்ஸ்மேனாக அவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சால்ட் 87 ரன்கள் குவித்தார்.
    • இதன்மூலம் இன்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருதை சால்ட் தட்டிச் சென்றார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை குவித்தது.

    இதனையடுத்து இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் பில் சால்ட்டின் அதிரடியால் இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சால்ட் 47 பந்துகளில் 87 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    இதன் மூலம் பில் சால்ட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பல சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் பில் சால்ட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    அந்த பட்டியல்:-

    இங்கிலாந்து எதிராக வெஸ்ட் இண்டீஸ் டி20 போட்டிகளில் அதிக ரன்கள்:-

    478 - பில் சால்ட் (9 இன்னிங்ஸ்)

    423 - அலெக்ஸ் ஹேல்ஸ் (13 இன்னிங்ஸ்)

    422 - கிறிஸ் கெய்ல் (14 இன்னிங்ஸ்)

    420 - நிக்கோலஸ் பூரன் (15 இன்னிங்ஸ்)

    390 - ஜோஸ் பட்லர் (16 இன்னிங்ஸ்)

    இதை தவிர ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர் விளாசிய இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். இந்த பட்டியலில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மார்கன் இருந்தார். அவரை பின்னுக்கு தள்ளி சால்ட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    எதிரணிக்கு எதிராக இங்கிலாந்து அடித்த அதிக சிக்ஸர்கள் (டி20)

    32 - பில் சால்ட் எதிராக வெஸ்ட் இண்டீஸ்

    26 - இயன் மார்கன் எதிராக நியூசிலாந்து

    25 - ஜோஸ் பட்லர் எதிராக ஆஸ்திரேலியா

    24 - ஜோஸ் பட்லர் எதிராக தென் ஆப்பிரிக்கா

    இதேபோல் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலிலும் சால்ட் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் அவர் 4-வது இடத்தில் உள்ளார்.

    டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்காக அதிக தனிநபர் ஸ்கோர்கள்:-

    116* - அலெக்ஸ் ஹேல்ஸ் எதிராக இலங்கை, சட்டோகிராம், 2014

    101* - ஜோஸ் பட்லர் எதிராக இலங்கை, ஷார்ஜா, 2021

    99* - லூக் ரைட் எதிராக ஆப்கானிஸ்தான், கொழும்பு 2012

    87* - பிலிப் சால்ட் எதிராக வெஸ்ட் இண்டீஸ், க்ரோஸ் ஐலெட், 2024

    86* - அலெக்ஸ் ஹேல்ஸ் எதிராக இந்தியா, அடிலெய்டு, 2022

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 182 ரன்கள் சேர்த்தது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து 185 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது

    பார்படாஸ்:

    வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 182 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 185 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து அணியின் பில் சால்ட் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார்.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் பில் சால்ட் சதமடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய வீரர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பில் சால்ட் 3 சதம் விளாசியுள்ளார். அந்த மூன்று சதங்களும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×