என் மலர்
கிரிக்கெட் (Cricket)

2வது டி20 போட்டியில் அபார வெற்றி: தென் ஆப்பிரிக்காவை தெறிக்கவிட்ட இங்கிலாந்து
- முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 304 ரன்களைக் குவித்தது.
- அந்த அணியின் பிலிப் சால்ட் அதிரடியாக ஆடி சதமடித்தார்.
மான்செஸ்டர்:
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டி20 போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது. பிலிப் சால்ட் 60 பந்தில் 8 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 141 ரன்கள் குவித்தார்.
முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்த நிலையில் ஜோஸ் பட்லர் 83 ரன்னில் வெளியேறினார். அவர் 30 பந்தில் 7 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 83 ரன்கள் குவித்தார். ஹாரி புரூக் 41 ரன்கள் எடுத்தார். பெத்தேல் 26 ரன்னில் அவுட்டானார்.
இதையடுத்து, 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. கேப்டன் மார்கிரம் மட்டும் அதிரடியாக ஆடி 41 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 16.1 ஓவரில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலையில் உள்ளன.
இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டும், சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், லியாம் டாசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.






