என் மலர்
நீங்கள் தேடியது "Ranking"
- உலக பேட்மிண்டன் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- சமீபத்தில் நடந்த சீன ஓபன் இறுதிப்போட்டியில் சாத்விக் சிராக் ஜோடி நுழைந்தது.
புதுடெல்லி:
உலக பேட்மிண்டன் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி ஒரு இடம் முன்னேறி
6-வது இடத்தைப் பிடித்துள்ளது.
முன்னாள் நம்பர் ஒன் ஜோடியான சாத்விக்-சிராஜ் ஹாங்காங் ஓபன் மற்றும் சீனா ஓபன் போட்டியின் இறுதிக்குள் நுழைந்ததால் இந்த ஏற்றம் கண்டுள்ளது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் லக்ஷயா சென் 19-வது இடத்தையும், ஆயுஷ் ஷெட்டி 28-வது இடத்தையும், எச்.எஸ்.பிரனாய் 34-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 13-வது இடத்தில் தொடருகிறார். உன்னதி ஹூடா 31-வது இடத்தையும், மாளவிகா பன்சோத் 33-வது இடத்தையும் பிடித்துள்ளார்.
- பேட்ஸ்மேன்களுக்கான புதிய ஒருநாள் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது.
- இதில் ரோகித் சர்மா, விராட் கோலி பெயர்கள் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மும்பை:
பேட்ஸ்மேன்களுக்கான புதிய ஒருநாள் தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இதில் ரோகித் சர்மா, விராட் கோலி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெளியான பட்டியலில் முதல் 100 இடங்களில் கூட இருவரது பெயர்களும் இடம்பெறவில்லை.
கடந்த வாரம் வரை இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 2-வது இடத்திலும், விராட் கோலி 4-வது இடத்திலும் நீடித்து வந்தனர்.
ஐ.சி.சி. விதிமுறைப்படி, சுமார் 9 மாத காலம் ஒரு விளையாட்டு வீரர் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றால் அவரது பெயர் தரவரிசை பட்டியலில் இருந்து நீக்கப்படும் அல்லது ஓய்வு அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இந்த இரண்டும் இவர்கள் விஷயத்தில்
நடக்கவில்லை.
இந்தச் செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீயாகப் பரவி, பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
தரவரிசைப் பட்டியலில் இருந்து அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டது ஒருவேளை இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார்களோ என்ற வதந்தி பரவியது.
2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான அணியில் இருவருக்கும் என்பதை பிசிசிஐ மறைமுகமாக தெரிவிக்கிறதா எனவும் சாடி வருகின்றனர்.
பி.சி.சி.ஐ. இருவரையும் ஓய்வுபெறும்படி கட்டாயப்படுத்திவிட்டதா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ரசிகர்களின் பதற்றம் உச்சத்தை எட்டிய நிலையில் சில மணி நேரங்களுக்குப் பிறகு ஐசிசி தனது தவறைத் திருத்தியது. இது ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட குழப்பம் எனத் தெரியவந்தது. அதன்பின் ஐசிசி வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் ரோகித் சர்மா 2-வது இடத்திலும், விராட் கோலி 4-வது இடத்திலும் இடம்பெற்றனர்.
- கடந்த ஆண்டு இது 150வது இடத்தைப் பிடித்திருந்தது.
- ஐஐடி மெட்ராஸ் 180 வது இடத்தில் உள்ளது.
2026 QS உலக பல்கலைக்கழக தரவரிசையில் டெல்லி IIT பட்டியலில் டெல்லி IIT 123வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இது 150வது இடத்தைப் பிடித்திருந்த நிலையில் 27 ரேங்க் முன்னேறி இந்த வருடம் முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
இந்த ஆண்டு தரவரிசையில் எட்டு புதிய கல்வி நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், இந்தியாவிலிருந்து இந்த பட்டியலில் இடம்பெற்ற கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.
இதன் மூலம், அமெரிக்கா (192), இங்கிலாந்து (90) மற்றும் சீனா (72) ஆகிய நாடுகளுக்குப் பிறகு இந்தியா நான்காவது அதிக பிரதிநிதித்துவ நாடாக மாறியுள்ளது.
இதற்கிடையில், ஐஐடி பாம்பே 2025 ஆம் ஆண்டில் அதன் மிக உயர்ந்த தரவரிசையான 118 இலிருந்து 129 வது இடத்திற்குச் சரிந்துள்ளது. ஐஐடி மெட்ராஸ் 180 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலியா வீரர் லபுஸ்சேன் தரவரிசையில் தொடர்ந்து முதலிடம்.
- பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 2-வது இடத்தில் உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் பாபர் அசாம் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் 3-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகிறார்கள்.
ரிஷப் பண்ட் 6-வது இடத்திலும், ரோகித் சர்மா 9-வது இடத்திலும் நீடிக்கிறார்கள். வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்டில் 87 மற்றும் 29 ரன் வீதம் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 10 இடங்கள் எகிறி 16-வது இடத்தை பிடித்துள்ளார். புஜரா 19-வது இடத்தையும், விராட் கோலி 14-வது இடத்தையும் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர்.
பந்து வீச்சாளர் தரவரிசையில் வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் 6 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஒரு இடம் முன்னேறி சக வீரர் ஜஸ்பிரித் பும்ராவுடன் 4-வது இடத்தை பகிர்ந்துள்ளார்.
- பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் முதலிடத்தில் நீடிக்கிறார்.
- ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா 7-வது இடம் பிடித்துள்ளார்.
துபாய்:
டி20 கிரிக்கெட் போட்டியின் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.
இந்நிலையில், பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 861 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறார்.
இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 2-வது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் (781 புள்ளி) 3-வது இடத்திலும் உள்ளனர்.
மற்றொரு இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 714 புள்ளிகள் பெற்று 6-வது இடம் பிடித்துள்ளார்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 726 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இலங்கை வீரர் ஹசரங்கா 2-வது இடமும், வெஸ்ட்இண்டீஸ் வீரர் அகில் ஹூசைன் 3-வது இடமும் பிடித்துள்ளனர். இந்திய வீரர்கள் அக்ஷர் பட்டேல் 4-வது இடமும், ரவி பிஷ்னோய் 5-வது இடமும் பிடித்துள்ளனர்.
ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இலங்கை வீரர் ஹசரங்கா மற்றும் வங்காளதேச வீரர் ஷகிப் உல்-ஹசன் ஆகியோர் 228 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி 3-வது இடத்தில் உள்ளார். இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா 7-வது இடம் பிடித்துள்ளார்.
- முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 844 புள்ளிகளுடன் உள்ளார்.
- இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ் 821 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார்.
துபாய்:
டி20 கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலை இன்று ஐ.சி.சி. வெளியிட்டது. அதன்படி இந்திய வீரரான ருதுராஜ் டாப் 10-ல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 77 குவித்ததன் மூலம் 13 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
மற்றொரு இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ் 821 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 844 புள்ளிகளுடன் உள்ளார்.
இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 3-வது இடத்திலும், 4-வது மற்றும் 5-வது இடங்கள் முறையே பாகிஸ்தான் வீரர்களான பாபர் அசாம் (755 புள்ளி) முகமது ரிஸ்வான் (746 புள்ளி) உள்ளனர்.
மற்றொரு இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 3 இடங்கள் பின்தங்கி 646 புள்ளிகள் பெற்று 11-வது இடம் பிடித்துள்ளார்.
- முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் உள்ளார்.
- இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ் 2-வது இடத்தில் நீடிக்கிறார்.
துபாய்:
டி20 கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. அதன்படி இந்திய வீரரான ஜெய்ஸ்வால் டாப் 10-ல் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் 142 ரன்கள் குவித்ததன் மூலம் 5 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மற்றொரு இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ் 2-வது இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் முதல் இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 3-வது இடத்திலும், 4-வது மற்றும் 5-வது இடங்கள் முறையே பாகிஸ்தான் வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான் உள்ளனர்.
மற்றொரு இந்திய வீரர் கெய்க்வாட் 2 இடங்கள் பின்தங்கி 8-வது இடம்பிடித்துள்ளார். சுப்மன் கில் 37-வது இடத்தில் உள்ளார்.
- பேட்டிங் தரவரிசையில் டாப் 10-ல் 2 இந்திய வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
- பந்து வீச்சாளர் தரவரிசையிலும் டாப் 10-ல் 2 இந்திய வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
துபாய்:
டி20 கிரிக்கெட் போட்டிக்கான வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ சி சி) நேற்று வெளியிட்டது. இதில் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய அணியின் முன்னணி வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா 5-வது இடத்தில் தொடருகிறார்.
இந்திய கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 3 இடம் முன்னேறி 12-வது இடத்தையும், தொடக்க ஆட்டக்காரர் ஷபாலி வர்மா 2 இடம் உயர்ந்து 15-வது இடத்தையும் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 'நம்பர் ஒன்' இடத்தில் இருக்கிறார்.
பந்து வீச்சாளர் தரவரிசையில் டாப்-3 இடங்களில் முறையே இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டன், சாரா கிளென், இந்தியாவின் தீப்தி ஷர்மா மாற்றமின்றி நீடிக்கிறார்கள். இந்திய வீராங்கனைகள் ரேணுகா சிங் 10-வது இடமும், ராதா யாதவ் 15-வது இடமும் , பூஜா வஸ்ட்ராகர் 23-வது இடமும் , ஸ்ரேயங்கா பட்டீல் 60-வது இடமும் வகிக்கிறார்கள்.
- உலக மகிழ்ச்சி அறிக்கை 2024 இல் இந்தியா 126 வது இடத்தில் உள்ளது.
- உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டில் இந்தியா 40வது இடத்தில் உள்ளது.
உலகளாவிய குறியீடுகள் ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் செயல்திறன் குறித்த அளவீடுகளாக உள்ளது. அந்த வகையில் 2023-2024 ஆம் ஆண்டின் உலகளாவிய குறீயீடுகளில் இந்தியா பெற்றுள்ள இடம் வருங்காலங்களுக்கான படிப்பினையை வழங்குவதாக அமைந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி, கண்டுபிடிப்பு, மனித மேம்பாடு, பருவநிலை மாற்றத்தை கையாள்வது உள்ளிட்டவற்றில் வளர்ச்சி இருந்தபோதிலும் அமைதி, ஊழல், பாலின சமத்துவமின்மை மற்றும் காற்றின் தரம் ஆகியவற்றில் இந்த வருடம் இந்தியா பெற்றுள்ள இடம் கவலை அளிப்பதாக உள்ளது.

ஐநா மனித வளர்ச்சிக் குறியீடு
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின்படி, 2023-2024க்கான மனித வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா 13வது இடத்தில் உள்ளது. மனித வளர்ச்சிக் குறியீடு, ஆரோக்கியம், அறிவு மற்றும் வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையில் நாடுகளை அளவிடுகிறது. சில பகுதிகளில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் கல்வி மற்றும் சுகாதாரத்தில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது.
காலநிலை மாற்றம் செயல்திறன் குறியீடு
இந்த வருடம் வெளியான ஜெர்மன்வாட்ச் அமைப்பின் காலநிலை மாற்ற செயல்திறன் குறியீடு 2023 இன் படி இந்தியா 7வது இடத்தில் உள்ளது. பசுமை இல்ல வாயு (GHG) உமிழ்வு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆற்றல் பயன்பாடு மற்றும் காலநிலை கொள்கை உள்ளிட்ட நான்கு அளவுகோல்கள்படி இந்த தரவரிசை உருவாக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அதிக கவனம் அளிக்கப்படுவதால் இந்தியாவில் இந்த முன்னேற்றமானது நிகழ்ந்துள்ளது.
உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு
2024ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாதக் குறியீட்டில் இந்தியா 14வது இடத்தில் உள்ளது. 163 நாடுகளில் நடந்த சம்பவங்கள், இறப்புகள், காயங்கள் மற்றும் பணயக்கைதிகள் ஆகிய அளவுகோள்களின் அடிப்படையில் பயங்கரவாதத்தின் தாக்கத்தை இந்த அறிக்கை மதிப்பிடுகிறது. இதில் இந்தியா பெற்றுள்ள இடம் நாட்டில் பயங்கரவாதம் ஏற்படுத்தி வரும் சவால்களை சுட்டிக்காட்டுகிறது.
சர்வதேச ஐபி குறியீடு
நாடுகளில் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பை அளவிடும். அமெரிக்கன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் இந்த வருடம் வெளியிட்டுள்ள சர்வதேச ஐபி குறியீடு 2024 இல் இந்தியா பின்னடைவோ முன்னேற்றமோ இல்லாமல் அதே 42வது இடத்தில் உள்ளது.
குளோபல் Soft power குறியீடு
இராஜதந்திர, கலாச்சார மற்றும் அரசியல் உறவுகளில் நாடுகளின் நிலை குறித்து அளவிடும் குளோபல் Soft power 2024 குறியீட்டில் 29 இடத்தை இந்தியா பெற்றுள்ளது. முன்னதாக 28 வது இடத்தில் இருந்த நிலையில் இந்த வருடம் 1 இடம் பின்தங்கியுள்ளது.
ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு
பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் எண்ணிக்கையை வைத்து அளவிடப்படும் ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2024 இல் இந்தியா 84 வது இடத்தில் உள்ளது.

பாலின சமத்துவமின்மை குறியீடு
இந்த வருடம் வெளியான UNDP இன் பாலின சமத்துவமின்மை குறியீடு 2022 இல் இந்தியா 129வது இடத்தில் உள்ளது. இந்தக் குறியீடு பெண்களின், இனப்பெருக்க ஆரோக்கியம், அதிகாரமளித்தல் மற்றும் தொழிலாளர் சந்தைகளில் பாலின சமத்துவமின்மையை வைத்து அளவிடுகிறது. பெண்களின் உரிமைகளில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், இந்தியா இன்னும் குறிப்பிடத்தக்கப் பாலின வேறுபாடுகளை எதிர்கொள்கிறது.
உலக மகிழ்ச்சி அறிக்கை
ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி தீர்வுகள் நெட்வொர்க் (SDSN) வெளியிட்ட உலக மகிழ்ச்சி அறிக்கை 2024 இல் இந்தியா 126 வது இடத்தில் உள்ளது. இது இந்திய குடிமக்கள் மத்தியில் மிதமான மகிழ்ச்சி நிலைகளைக் குறிக்கிறது. வாழ்க்கைத் தரம், சமூக ஆதரவு மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை கொண்டு இந்த குறியீடு அளவிடப்படுகிறது.'
உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு
உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) வெளியிட்ட உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு 2024 இல் இந்தியா 39 வது இடத்தில் உள்ளது. இந்தியா தொழில்நுட்ப விண்வெளி மற்றும் ஆராய்ச்சி பகுதிகளில் வளர்ந்துள்ளதை இது காட்டுகிறது. கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் சுற்றுச்சூழலில் வளர்ச்சியடையாமல் உள்ளது.
உலகளாவிய பட்டினி குறியீடு
2024 ஆம் ஆண்டின் உலகளாவிய பட்டினி குறியீட்டில் இந்தியா 105 வது இடத்தில் உள்ளது. குடிமக்கள் அனைவருக்கும் போதுமான ஊட்டச்சத்தை உறுதி செய்வதில் இந்தியா இன்னும் சவால்களைக் கொண்டுள்ளதையே இந்த இடம் குறிக்கிறது.
உலகளாவிய போட்டித்திறன் குறியீடு
உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டில் இந்தியா 40வது இடத்தில் உள்ளது.நீண்ட கால மதிப்பை உருவாக்குவதற்கு நாடுகள் தங்கள் திறன்களை எவ்வாறு நிர்வகிக்கின்றன என்பதை இந்த குறியீடு அளவிடுகிறது.
உலகளாவிய அமைதிக் குறியீடு
சமூகப் பாதுகாப்பு, மோதல்கள் மற்றும் இராணுவமயமாக்கல் மூலம் ஒரு நாட்டில் அமைதியின் அளவை மதிப்பிடும் உலகளாவிய அமைதிக் குறியீடு 2024 இல் இந்தியா 116வது இடத்தில் உள்ளது. உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் அமைதியை உறுதிப்படுத்த இந்தியா தவறியதை இந்த இடம் குறிக்கிறது.

எதிர்கால வாய்ப்புகள் குறியீட்டு
உலகளாவிய மாற்றங்களுக்கு நாடுகள் எவ்வாறு தங்களை மேம்படுத்தி மாற்றியமைக்கின்றன என்பதைக் கொண்டு அளவிடப்படும் எதிர்கால வாய்ப்புகள் குறியீட்டு 2024 இல் இந்தியா 35 வது இடத்தில் உள்ளது
ஊழல் தடுப்பு குறியீடு
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் 2023 இன் ஊழல் புலனாய்வு குறியீட்டில் இந்தியா 93 வது இடத்தில் உள்ளது. ஊழலுக்கு எதிரான அரசு நடவடிக்கையின் போதாமையை இவ்விடம் பிரதிபலிக்கிறது.
உலகப் பத்திரிக்கை சுதந்திரக் குறியீடு
2024ஆம் ஆண்டுக்கான உலகப் பத்திரிக்கை சுதந்திரக் குறியீட்டில், இந்தியா 159வது இடத்தில் உள்ளது, இது பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்தில் மிகுந்த கவலைக்குரிய இடத்தில் இந்தியா உள்ளதை குறிக்கிறது.
- பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகளிடம் இருந்த ஆன்லைன் வாயிலாக வரவேற்கப்பட்டன.
- அரசு பள்ளிகளில் படித்த மாணவ- மாணவி–களின் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் 3 பேர் சேலம் மாவட்டத்தில் இருந்து இடம் பிடித்துள்ளனர்.
சேலம்:
தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கைக்கான -2022 விண்ணப்பங்கள் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகளிடம் இருந்த ஆன்லைன் வாயிலாக வரவேற்கப்பட்டன.
இதையடுத்து கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்து.
இதில் அரசு பள்ளிகளில் படித்த மாணவ- மாணவி–களின் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் 3 பேர் சேலம் மாவட்டத்தில் இருந்து இடம் பிடித்துள்ளனர்.
அதன்படி சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் ரோகித் 198.50 கட் ஆப் மதிப்பெண் பெற்று மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார். எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் கரண்ராஜ் 6-ம் இடம், கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி வர்ஷா 8-ம் இடம் பிடித்தனர்.






