என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சீமான் மனு தாக்கல்
    X

    புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சீமான் மனு தாக்கல்

      பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

      இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

      விசாரணையின்போது சீமான் தரப்பில், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை சுட்டிக்காட்டி தனது மனு நிராகரிக்கப்படுகிறது. அரசியல் காரணத்திற்காக வழக்குப்பதிவு செய்துள்ளதால் விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து பாஸ்போர்ட் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

      வழக்கை விசாரித்த நீதிபதிகள், புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி சீமான் தாக்கல் செய்த மனு குறித்து மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, நீலாங்கரை காவல் ஆய்வாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 22-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

      Next Story
      ×