search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bank robbery"

    • கொள்ளையனை சரமாரியாாக தாக்கி பொதுமக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர்.
    • வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியால், துணிவு திரைப்படம் பார்த்து கொள்ளையடிக்க வந்ததாக கொள்ளையன் வாக்குமூலம்.

    திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் வாணிவிலாஸ் சிக்னல் அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இன்று காலை ஒரு பெண் உள்பட 4 ஊழியர்கள் பணிக்கு வந்தனர். மற்ற ஊழியர்கள் வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென உள்ளே புகுந்த ஒரு வாலிபர் வங்கி ஊழியர்கள் மீது மயக்க ஸ்பிரே மற்றும் மிளகாய்பொடியை தூவினார்.

    இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்தனர். உடனே அந்த வாலிபர் மற்ற 2 ஊழியர்களை கையை கட்டிபோட முயன்றார். உடனே அவர்கள் கூச்சலிட்டனர். அப்போது வங்கிக்குள் வந்த மேலாளர் மற்றும் ஒரு சில ஊழியர்கள் அந்த வாலிபரை சுற்றிவளைத்து பிடித்தனர்.

    அவரை ஒரு அறையில் வைத்து தர்மஅடி கொடுத்தனர். அவர் ஹிந்தியில் பேசியதால் வங்கிக்குள் கொள்ளையடிக்க முயன்ற வடமாநில வாலிபராக இருக்கலாம் என்று சந்தேகமடைந்தனர்.

    இதனையடுத்து நகர்மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அதிவிரைவுபடையினரும் அங்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் பிடிபட்டவாலிபரை விசாரித்தபோது திண்டுக்கல் பூச்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த கலில்ரகுமான்(25) என தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் "தான் பல்வேறு இடங்களில் வேலை பார்த்தும் எனக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் குறுகிய காலத்தில் மிகப்பெரிய தொகையை கொள்ளையடித்து வாழ்க்கையில் செட்டிலாக முடிவு செய்தேன். சமீபத்தில் வெளிவந்த துணிவு படத்தை பார்த்து அதேபோல வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி செய்தேன்" என்றார்.

    இதனைதொடர்ந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வங்கிக்குள் இவர் மட்டும்தான் உள்ளே வந்தாரா? வேறு யாரேனும் கூட்டாளிகளாக உள்ளனரா என்றும் விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து வாலிபர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வங்கியில் வாடிக்கையாளர்கள் 29 பேர் அடகு வைத்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
    • வங்கியில் வேலை செய்யும் யாரோ ஒருவரின் உதவியால் கொள்ளை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    கான்பூர்:

    உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஸ்டேட் வங்கியில் புகுந்த கொள்ளையர்கள் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஸ்டேட் வங்கியின் அருகில் காலியாக கிடந்த இடத்தில் இருந்து சுமார் 10 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டிய கொள்ளையர்கள், அந்த சுரங்கம் வழியாக வங்கியில் நகை, பணம் வைத்திருக்கும் பாதுகாப்பு அறைக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த 1.8 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். அவற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் ஆகும். நகை பெட்டகத்தின் அருகில் உள்ள பணப்பெட்டியை உடைக்க முடியாததால் அதில் இருந்த 32 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் தப்பியது. வங்கியில் வாடிக்கையாளர்கள் 29 பேர் அடகு வைத்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக வங்கி மேலாளர் தெரிவித்தார்.

    இந்த கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தடயவியல் நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    வங்கியில் வேலை செய்யும் யாரோ ஒருவரின் உதவியால் இந்த கொள்ளை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும், அந்த பகுதியை நன்றாக நோட்டமிட்டு, வங்கியின் கட்டுமானம் குறிப்பாக பாதுகாப்பு பெட்டக அறை இருக்கும் பகுதி குறித்து நன்கு தெரிந்தே கொள்ளையடித்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 15 கோடி ரூபாய் மதிப்பிலான 32 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • முக்கிய குற்றவாளி முருகன் மற்றும் கூட்டாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை.

    சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் பெடரல் வங்கிக்கு சொந்தமான நகைகடன் பிரிவு செயல்பட்டு வருகிறது. நேற்று பட்டப் பகலில் இந்த வங்கியில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 32 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் வங்கியின் முன்னாள் ஊழியரான முருகன் என்ற நபரே இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என தெரிய வந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள 4 குற்றவாளிகள் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர் இதில், பாலாஜி என்ற நபரை போலீசார் இன்று காலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக சக்திவேல் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அடிப்படையில் கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்கத்தில், சுமார் 15 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    தனிப்படை போலீசார் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி முருகன் மற்றும் கூட்டாளிகளை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தில் மீதமுள்ள சுமார் 17 கிலோ தங்கத்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • போலீசாருக்கு மட்டும் நேற்று ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று கொள்ளையர்கள் பற்றி துப்பு கொடுக்கும் பொதுமக்களுக்கும் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவித்தார்.
    • தகவல் கொடுக்கும் பொதுமக்கள் பற்றிய விபரம் ரகசியமாக வைக்கப்படும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    ரூ.20 கோடி நகைகளுடன் தப்பிய கொள்ளையர்களை பிடிக்க மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

    அதேநேரம் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வங்கி ஊழியர் முருகனை பிடிக்க வசதியாக அவனது போட்டோ தமிழகம் முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மாநிலம் முழுவதும் போலீஸ் டி.ஜி.பி. அவசர தகவல் அனுப்பி இருக்கிறார். போலீஸ் கண்காணிப்பு பணிகளை பலப்படுத்தும் படியும், வாகன சோதனை, சோதனைச்சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிடபட்டுள்ளது.

    குறிப்பாக வடமாவட்டங்கள் தீவிர கண்காணிப்பில் இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் சந்தேகப்படும்படியாக நடமாட்டம் இருந்தால் பிடித்து விசாரிக்க வேண்டும்.

    கொள்ளையர்களை பிடித்துக்கொடுக்கும் போலீசாருக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்றும் டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.

    சைபர் கிரைம் போலீசார் வங்கி ஊழியர் முருகன் அவரது நண்பர்கள், உறவினர்கள் செல்போன் எண்ணை ரகசியமாக கண்காணிக்கிறார்கள்.

    நேற்று போலீசாருக்கு மட்டும் ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று கொள்ளையர்கள் பற்றி துப்பு கொடுக்கும் பொதுமக்களுக்கும் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவித்தார்.

    தகவல் கொடுக்கும் பொதுமக்கள் பற்றிய விபரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    • தினமும் ஜிம்முக்கு போகும் பழக்கம் முருகனுக்கு இருந்துள்ளது.
    • ஜிம்மில் முருகனுக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்த இரண்டு பேரை தனது திட்டத்துக்காக தேர்ந்தெடுத்து உள்ளார்.

    சென்னை:

    கொள்ளையர்கள் ஏற்கனவே ஒத்திகை நடத்தி பார்த்து கொள்ளை சம்பவத்தை கச்சிதமாக செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    கொள்ளை நடந்த அரும்பாக்கம் பெடரல் வங்கியின் வில்லிவாக்கம் கிளையில் முருகன் வேலை பார்ப்பதால் சக ஊழியர்களுடன் நன்றாக அறிமுகமாகி இருக்கிறார். இதனால் அவ்வப்போது அரும்பாக்கம் கிளைக்கு வந்து ஊழியர்களுடன் பேசி செல்வாராம்.

    அப்போதுதான் இந்த கிளையில் அடகு நகைகள் ஏராளம் உள்ளன என்பதை அறிந்துள்ளார்.

    கிலோ கணக்கில் நகைகள் வங்கி லாக்கரில் இருந்ததால் அதை கொள்ளையடித்தால் கோடீஸ்வரன் ஆகி விடலாம் என்று நினைத்துள்ளார். இதுபற்றி பல நாட்களாக சிந்தித்த முருகன் தனது திட்டத்துக்கு தகுதியானவர்கள் யார் என்பதை தேட தொடங்கி இருக்கிறார்.

    தினமும் ஜிம்முக்கு போகும் பழக்கம் முருகனுக்கு இருந்துள்ளது. ஜிம்மில் இவரது நெருங்கிய நண்பர்களாக இருந்த இரண்டு பேரை தனது திட்டத்துக்காக தேர்ந்தெடுத்து உள்ளார்.

    அவர்களிடம் தனது திட்டத்தை சொல்லி இருக்கிறார். கோடிக்கணக்கில் நகை கிடைக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியில் அவர்களும் கொள்ளையடிக்க சம்மதித்துள்ளார்கள்.

    இதையடுத்து ஒரு வாரம் அந்த வங்கிக்கு 3 பேரும் சென்று ஒத்திகை பார்த்துள்ளார்கள். வங்கிக்குள் செல்ல ஏதுவாக காவலாளியை மயக்க மருந்து கொடுத்து வீழ்த்தி விட்டு உள்ளே சென்று ஊழியர்களை மிரட்டி கட்டிப்போட்டு விட்டு நகைகளை அள்ள வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்கள்.

    ஒத்திகையின் போது ஏற்பட்ட ஒவ்வொரு சந்தேகத்தையும் முருகனிடம் சொல்லி அதற்கு மாற்று வழிகளையும் கேட்டு உள்ளார்கள்.

    எல்லா சந்தேகங்களும் தீர்ந்த பிறகு திட்டம் வகுத்து ஆபரேசனை தொடங்கி இருக்கிறார்கள்.

    காவலாளிக்கு மயக்க குளிர்பானம் கொடுத்து உள்ளே சென்றதும் ஊழியர்களை கத்திமுனையில் மிரட்டி லாக்கர் சாவிகளை வாங்கி இருக்கிறார்கள். அப்போது முகம் அடையாளம் தெரியாமல் இருக்க கை குட்டையால் முகத்தை மூடிக் கொண்டிருக்கிறார்கள்.

    லாக்கரை திறந்து நகைகளை அள்ளி மூட்டை கட்டி இருக்கிறார்கள். மொத்தம் 32 கிலோ என்பதால் 3 மூட்டைகளில் கட்டி இருக்கிறார்கள். அதை சந்தேகம் வராதபடி சாதாரண பைகளில் போட்டு எடுத்து சென்றுள்ளார்கள்.

    கண்காணிப்பு கேமிராக்களை சாதுர்யமாக கையாண்டு இருக்கிறார்கள். காட்சிகள் பதிவாகும் 'ஹார்டு டிஸ்கையும்' உருவி சென்று விட்டார்கள். இதனால் போலீசாருக்கு காட்சி பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை.

    நகைகளுடன் வெளியே வந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று உள்ளார்கள். மோட்டார் சைக்கிளை போலீசார் மடக்கலாம் என்பதை உணர்ந்து வேறு ஏதாவது வாகனங்களில் ஏறியோ அல்லது சாதரண பாதசாரிகள் போல் நடந்தோ சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    பின்னர் காய்கறி லாரிகள் போன்ற சரக்கு வாகனங்களில் ஏறி தப்பி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    • காவலாளி சரவணனுக்கு முருகன் திடீரென்று குளிர்பானம் வாங்கி கொடுத்தது எப்படி?
    • கொள்ளையடிக்க வந்தபோது வங்கியில் வாடிக்கையாளர் யாரும் இல்லை என்ற தகவல் முருகனுக்கு எப்படி தெரிய வந்தது.

    சென்னை:

    சென்னையில் பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து ஊழியர்களை கட்டிப்போட்டு 32 கிலோ நகைகளை கொள்ளையர்கள் அள்ளிச்சென்ற சம்பவம் பொதுமக்கள் மட்டுமல்லாது காவல்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

    அரும்பாக்கம் ரசாக் கார்டன் ரோட்டில் உள்ள பெடரல் வங்கி என்ற தனியார் வங்கியில் நேற்று பட்டப்பகலில் கொள்ளையர்கள் அரங்கேற்றிய இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களையும் அவர்களிடம் சிக்கிய ரூ.20 கோடி மதிப்புள்ள நகைகளை மீட்கவும் போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு உள்ளார்கள்.

    கொள்ளையர்கள் முகம் தெரியாதவர்கள் அல்ல. இதே வங்கியில் வில்லிவாக்கம் கிளையில் வேலை பார்க்கும் முருகன் என்ற ஊழியர் தலைமையில்தான் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

    கொள்ளைக் கும்பலின் தலைவன் அடையாளம் தெரிந்து விட்டதால் அவனை பிடிக்க மாநிலம் முழுவதும் போலீசார் வலை விரித்துள்ளார்கள்.

    முருகன் பாடியைச் சேர்ந்தவர். எனவே தனிப்படை போலீசார் முருகனின் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார்கள். அங்கு முருகன் இல்லை.

    நேற்று முருகன் வீட்டில் இருந்து எப்போது வெளியே சென்றார்? மாலையில் வீட்டுக்கு வந்தாரா? யாரேனும் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்களா? என்று விசாரித்தனர்.

    குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் கிடைத்த தகவல்களின் படி போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கி இருக்கிறார்கள்.

    அப்போது உறவினர் பாலாஜி என்பவருக்கும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து பாலாஜியை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

    அவர் கொடுத்த தகவல் படி போலீஸ் தனிப்படை ஒன்று திருவண்ணாமலைக்கும் விரைந்துள்ளது.

    இதுவரை 6 பேரை போலீசார் தங்கள் வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளார்கள். அவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் போலீசாருக்கு சில ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே கொள்ளைக் கும்பல் விரைவில் பிடிபட வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    கொள்ளை நடந்து சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகே போலீசுக்கு தெரியவந்தது. கொள்ளையர்கள் வங்கிக்குள் புகுந்தது எப்படி என்று விசாரித்த போது, பணியில் இருந்த காவலாளி சரவணன் என்பவருக்கு முருகன் குளிர்பானம் வாங்கி கொடுத்ததாகவும் அதை குடித்ததும் அவர் மயங்கி விட்டதாகவும் அதன் பிறகே கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியதாகவும் கூறப்பட்டது.

    காவலாளி சரவணனுக்கு முருகன் திடீரென்று குளிர்பானம் வாங்கி கொடுத்தது எப்படி? கொள்ளையடிக்க வந்தபோது வங்கியில் வாடிக்கையாளர் யாரும் இல்லை என்ற தகவல் முருகனுக்கு எப்படி தெரிய வந்தது.

    இது தொடர்பாக ஏற்கனவே காவலாளியிடம் பேசி தெரிந்து கொண்டார்களா? அல்லது காவலாளியும் உடந்தையா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பிரேசில் நாட்டில் வங்கிக் கொள்ளையர்களுக்கும் போலீசாருக்குமிடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பிணைக்கைதிகள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர். #BrazilBankRobbery
    ரியோ டி ஜெனீரோ:

    பிரேசில் நாட்டின் சியரா மாநிலம் மிலாக்ரஸ் நகரின் பிரதான சாலையில் பல்வேறு வங்கிக் கிளைகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் உள்ளன. நேற்று அப்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளைக் கும்பல், வங்கிகளுக்குள் சென்று  கொள்ளையடிக்க முயன்றது. ஏடிஎம் மையங்களையும் உடைக்க முயற்சித்துள்ளனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கொள்ளையர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். கொள்ளையர்களும் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அத்துடன் அங்கிருந்து தப்பிச் செல்லும் முயற்சியாக, பொதுமக்கள் சிலரை பிணைக் கைதிகளாக பிடித்தனர்.



    பின்னர் போலீசாரின் தாக்குதல் தீவிரமடைந்ததால் பிணைக் கைதிகளை கொள்ளையர்கள் சுட்டுக்கொன்று விட்டு தப்பி ஓடினர். அவர்களை சுற்றி வளைத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.

    சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்த இந்த சண்டையில் 6 பிணைக் கைதிகள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர். 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையர்கள் விட்டுச் சென்ற ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சில கொள்ளையர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். #BrazilBankRobbery
    தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற கார்பரேஷன் வங்கி கொள்ளையில் தொடர்புடைய 2 கொள்ளையர்களை போலீசார் இன்று கைது செய்தனர். #CorporationBank
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் அமைந்துள்ளது கார்ப்பரேஷன் வங்கி. இதன் கிளை துவாரகா பகுதியில் உள்ள கைரா கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.

    நேற்று மதியம் கார்ப்பரேஷன் வங்கிக்குள் ஒரு கும்பல் திடீரென நுழைந்தது. அவர்கள் கேஷியர் கவுண்டருக்கு சென்று துப்பாக்கியால் அவரை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

    இதைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்களை தாக்கி 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணத்தை கொள்ளையடித்து விட்டு அவர்கள் தப்பிச் சென்றனர். இதில் படுகாயம் அடைந்த கேஷியர் சந்தோஷ்குமார் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.



    இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற கார்பரேஷன் வங்கி கொள்ளையில் தொடர்புடைய 19 வயது வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், கார்பரேஷன் வங்கி கொள்ளையில் தொடர்புடைய சோனிபேட் பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் உள்பட 2 பேரை இன்று கைது செய்துள்ளோம். இதில் சம்பந்தப்பட்ட மற்ற கொள்ளையர்களை தேடி வருகிறோம். விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என தெரிவித்துள்ளனர். #CorporationBank
    டெல்லியில் பட்டப்பகலில் மர்ம நபர்கள் வங்கிக்குள் நுழைந்து கேஷியரை சுட்டுக் கொன்று 2 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #CashLoot #CoprorationBank
    புதுடெல்லி;

    தலைநகர் டெல்லியில் அமைந்துள்ளது கார்ப்பரேஷன் வங்கி. இதன் கிளை துவாரகா பகுதியில் உள்ள கைரா கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.

    இன்று மதியம் கார்ப்பரேஷன் வங்கிக்குள் 4 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. அவர்கள் கேஷியர் கவுண்டருக்கு சென்று துப்பாக்கியால் அவரை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

    இதைத் தொடர்ந்து, அங்கிருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணத்தை கொள்ளையடித்து விட்டு அவர்கள் பைக்கில் தப்பிச் சென்றனர்.

    துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடைந்த கேஷியர் சந்தோஷ் குமாரை சக ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  வரும் வழியில் அவர் உயிரிழந்தார் என டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசாரர் விசாரணை நடத்தி வருகின்றனர். #CashLoot #CoprorationBank
    ×