search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cashier shot dead"

    • வீட்டில் மாடியில் துணியை உலர்த்தி கொண்டு இருந்தார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை, -

    கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (54). இவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று, அவர் தனது வீட்டில் மாடியில் துணியை உலர்த்தி கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரியநாயக்கன்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற கார்பரேஷன் வங்கி கொள்ளையில் தொடர்புடைய 2 கொள்ளையர்களை போலீசார் இன்று கைது செய்தனர். #CorporationBank
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் அமைந்துள்ளது கார்ப்பரேஷன் வங்கி. இதன் கிளை துவாரகா பகுதியில் உள்ள கைரா கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.

    நேற்று மதியம் கார்ப்பரேஷன் வங்கிக்குள் ஒரு கும்பல் திடீரென நுழைந்தது. அவர்கள் கேஷியர் கவுண்டருக்கு சென்று துப்பாக்கியால் அவரை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

    இதைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்களை தாக்கி 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணத்தை கொள்ளையடித்து விட்டு அவர்கள் தப்பிச் சென்றனர். இதில் படுகாயம் அடைந்த கேஷியர் சந்தோஷ்குமார் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.



    இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற கார்பரேஷன் வங்கி கொள்ளையில் தொடர்புடைய 19 வயது வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், கார்பரேஷன் வங்கி கொள்ளையில் தொடர்புடைய சோனிபேட் பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் உள்பட 2 பேரை இன்று கைது செய்துள்ளோம். இதில் சம்பந்தப்பட்ட மற்ற கொள்ளையர்களை தேடி வருகிறோம். விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என தெரிவித்துள்ளனர். #CorporationBank
    டெல்லியில் பட்டப்பகலில் மர்ம நபர்கள் வங்கிக்குள் நுழைந்து கேஷியரை சுட்டுக் கொன்று 2 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #CashLoot #CoprorationBank
    புதுடெல்லி;

    தலைநகர் டெல்லியில் அமைந்துள்ளது கார்ப்பரேஷன் வங்கி. இதன் கிளை துவாரகா பகுதியில் உள்ள கைரா கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.

    இன்று மதியம் கார்ப்பரேஷன் வங்கிக்குள் 4 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. அவர்கள் கேஷியர் கவுண்டருக்கு சென்று துப்பாக்கியால் அவரை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

    இதைத் தொடர்ந்து, அங்கிருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணத்தை கொள்ளையடித்து விட்டு அவர்கள் பைக்கில் தப்பிச் சென்றனர்.

    துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடைந்த கேஷியர் சந்தோஷ் குமாரை சக ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  வரும் வழியில் அவர் உயிரிழந்தார் என டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசாரர் விசாரணை நடத்தி வருகின்றனர். #CashLoot #CoprorationBank
    ×