search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகை, பணத்தை மூட்டையாக கட்டி எடுத்து செல்ல ஒருவாரம் ஒத்திகை பார்த்த கொள்ளையர்கள்
    X

    நகை, பணத்தை மூட்டையாக கட்டி எடுத்து செல்ல ஒருவாரம் ஒத்திகை பார்த்த கொள்ளையர்கள்

    • தினமும் ஜிம்முக்கு போகும் பழக்கம் முருகனுக்கு இருந்துள்ளது.
    • ஜிம்மில் முருகனுக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்த இரண்டு பேரை தனது திட்டத்துக்காக தேர்ந்தெடுத்து உள்ளார்.

    சென்னை:

    கொள்ளையர்கள் ஏற்கனவே ஒத்திகை நடத்தி பார்த்து கொள்ளை சம்பவத்தை கச்சிதமாக செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    கொள்ளை நடந்த அரும்பாக்கம் பெடரல் வங்கியின் வில்லிவாக்கம் கிளையில் முருகன் வேலை பார்ப்பதால் சக ஊழியர்களுடன் நன்றாக அறிமுகமாகி இருக்கிறார். இதனால் அவ்வப்போது அரும்பாக்கம் கிளைக்கு வந்து ஊழியர்களுடன் பேசி செல்வாராம்.

    அப்போதுதான் இந்த கிளையில் அடகு நகைகள் ஏராளம் உள்ளன என்பதை அறிந்துள்ளார்.

    கிலோ கணக்கில் நகைகள் வங்கி லாக்கரில் இருந்ததால் அதை கொள்ளையடித்தால் கோடீஸ்வரன் ஆகி விடலாம் என்று நினைத்துள்ளார். இதுபற்றி பல நாட்களாக சிந்தித்த முருகன் தனது திட்டத்துக்கு தகுதியானவர்கள் யார் என்பதை தேட தொடங்கி இருக்கிறார்.

    தினமும் ஜிம்முக்கு போகும் பழக்கம் முருகனுக்கு இருந்துள்ளது. ஜிம்மில் இவரது நெருங்கிய நண்பர்களாக இருந்த இரண்டு பேரை தனது திட்டத்துக்காக தேர்ந்தெடுத்து உள்ளார்.

    அவர்களிடம் தனது திட்டத்தை சொல்லி இருக்கிறார். கோடிக்கணக்கில் நகை கிடைக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியில் அவர்களும் கொள்ளையடிக்க சம்மதித்துள்ளார்கள்.

    இதையடுத்து ஒரு வாரம் அந்த வங்கிக்கு 3 பேரும் சென்று ஒத்திகை பார்த்துள்ளார்கள். வங்கிக்குள் செல்ல ஏதுவாக காவலாளியை மயக்க மருந்து கொடுத்து வீழ்த்தி விட்டு உள்ளே சென்று ஊழியர்களை மிரட்டி கட்டிப்போட்டு விட்டு நகைகளை அள்ள வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்கள்.

    ஒத்திகையின் போது ஏற்பட்ட ஒவ்வொரு சந்தேகத்தையும் முருகனிடம் சொல்லி அதற்கு மாற்று வழிகளையும் கேட்டு உள்ளார்கள்.

    எல்லா சந்தேகங்களும் தீர்ந்த பிறகு திட்டம் வகுத்து ஆபரேசனை தொடங்கி இருக்கிறார்கள்.

    காவலாளிக்கு மயக்க குளிர்பானம் கொடுத்து உள்ளே சென்றதும் ஊழியர்களை கத்திமுனையில் மிரட்டி லாக்கர் சாவிகளை வாங்கி இருக்கிறார்கள். அப்போது முகம் அடையாளம் தெரியாமல் இருக்க கை குட்டையால் முகத்தை மூடிக் கொண்டிருக்கிறார்கள்.

    லாக்கரை திறந்து நகைகளை அள்ளி மூட்டை கட்டி இருக்கிறார்கள். மொத்தம் 32 கிலோ என்பதால் 3 மூட்டைகளில் கட்டி இருக்கிறார்கள். அதை சந்தேகம் வராதபடி சாதாரண பைகளில் போட்டு எடுத்து சென்றுள்ளார்கள்.

    கண்காணிப்பு கேமிராக்களை சாதுர்யமாக கையாண்டு இருக்கிறார்கள். காட்சிகள் பதிவாகும் 'ஹார்டு டிஸ்கையும்' உருவி சென்று விட்டார்கள். இதனால் போலீசாருக்கு காட்சி பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை.

    நகைகளுடன் வெளியே வந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று உள்ளார்கள். மோட்டார் சைக்கிளை போலீசார் மடக்கலாம் என்பதை உணர்ந்து வேறு ஏதாவது வாகனங்களில் ஏறியோ அல்லது சாதரண பாதசாரிகள் போல் நடந்தோ சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    பின்னர் காய்கறி லாரிகள் போன்ற சரக்கு வாகனங்களில் ஏறி தப்பி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    Next Story
    ×