என் மலர்
டென்னிஸ்

துபாய் ஓபன் டென்னிஸ்: ரூப்லெவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
- காலிறுதி சுற்றில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லெவ் வெற்றி பெற்றார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லெவ், பிரான்சின் ஆர்தர் ரின்டர்நெக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரூப்லெவ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் அரையிறுதியில் ரூப்லெவ், நெதர்லாந்தின் கிரீக்ஸ்பூர் உடன் மோதுகிறார்.
Next Story






