என் மலர்
நீங்கள் தேடியது "Tallon Griekspoor"
- ஸ்பெயினில் மல்லோர்கா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது.
- இறுதிப் போட்டியில் நெதர்லாந்து வீரர் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.
மல்லோர்கா:
ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்தது.
இதில் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நெதர்லாந்தின் டேலன் கிரீக்ஸ்பூர், பிரான்ஸ் வீரர் காரண்டின் மவுடெட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கிரீக்ஸ்பூர் 7-5, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
- ஸ்பெயினில் மல்லோர்கா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- அரையிறுதியில் நெதர்லாந்து வீரர் வெற்றி பெற்றார்.
மல்லோர்கா:
ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடக்கிறது.
இதில் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் நெதர்லாந்தின் டேலன் கிரீக்ஸ்பூர், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கிரீக்ஸ்பூர் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று மாலை நடைபெறும் இறுதிப்போட்டியில் கிரீக்ஸ்பூர், பிரான்ஸ் வீரர் காரண்டின் மவுடெட் உடன் மோதுகிறார்.
- நெதர்லாந்து வீரர் டாலோன் கிரிக்ஸ்பூர் 4-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
- அவருக்கு ரூ.88 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.
புனே:
5-வது மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் இறுதிப்போட்டியில் தரவரிசையில் 95-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து வீரர் டாலோன் கிரிக்ஸ்பூர் 4-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் சரிவில் இருந்து மீண்டு வந்து பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் போன்ஜியை வீழ்த்தி முதல்முறையாக ஏ.டி.பி.சர்வதேச போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
அவருக்கு ரூ.88 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் பெல்ஜியத்தின் சாண்டெர் கில்லி-ஜோரான் லீஜென் ஜோடி 6-4, 6-4 என்ற நேர்செட்டில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்-ஸ்ரீராம் பாலாஜி (இருவரும் தமிழ்நாடு) இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது.
- ஆண்களுக்கான முதல் சுற்று ஆட்டத்தில் சுமித் நாகல்- டாலன் கிரீக்ஸ்பூர் ஆகியோர் மோதினர்.
- முதல் 2 செட்டை டாலன் கிரீக்ஸ்பூர் எளிதாக கைப்பற்றினார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த சுமித் நாகல் நெதர்லாந்தை சேர்ந்த டாலன் கிரீக்ஸ்பூர் ஆகியோர் மோதினர்.
இதில் முதல் 2 செட்டை டாலன் கிரீக்ஸ்பூர் எளிதாக கைப்பற்றி 6-1, 6-3 என்ற செட் கணக்கில் முன்னிலை பெற்றார். 3-வது செட்டில் கடுமையாக போராடிய சுமித் நாகல் 6-7 என்ற கணக்கில் வீழ்ந்தார்.
இறுதியில் டாலன் கிரீக்ஸ்பூர் 6-1, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் சுமித் நாகலை வீழ்த்தி அடுத்து சுற்றுக்கு முன்னேறினார். சுமித் நாகல் முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.






