என் மலர்
நீங்கள் தேடியது "மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ்"
- மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி நேற்று நடந்தது.
- இதில் இந்திய ஜோடி 6-4, 7-5 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தை வென்று இறுதிக்குள் நுழைந்தது.
புனே:
5-வது மகாராஷ்டிர ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி நேற்று நடந்தது.
இந்தியாவின் பாலாஜி, நெடுஞ்செழியன் ஜோடி, இங்கிலாந்தின் காஷ், பாட்டேன் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் இந்திய ஜோடி 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
- நெதர்லாந்து வீரர் டாலோன் கிரிக்ஸ்பூர் 4-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
- அவருக்கு ரூ.88 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.
புனே:
5-வது மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் இறுதிப்போட்டியில் தரவரிசையில் 95-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து வீரர் டாலோன் கிரிக்ஸ்பூர் 4-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் சரிவில் இருந்து மீண்டு வந்து பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் போன்ஜியை வீழ்த்தி முதல்முறையாக ஏ.டி.பி.சர்வதேச போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
அவருக்கு ரூ.88 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் பெல்ஜியத்தின் சாண்டெர் கில்லி-ஜோரான் லீஜென் ஜோடி 6-4, 6-4 என்ற நேர்செட்டில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்-ஸ்ரீராம் பாலாஜி (இருவரும் தமிழ்நாடு) இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது.






