என் மலர்
நீங்கள் தேடியது "பவுலா படோசா"
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது.
- இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாட உள்ளனர்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது.
இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாட உள்ளனர்.
இந்நிலையில், இந்தப் போட்டியில் இருந்து உலக தரவரிசையில் 12-வது இடம் வகிக்கும் 27 வயது ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா காயம் காரணமாக விலகி இருக்கிறார்.
கடந்த ஜூன் மாதம் நடந்த விம்பிள்டன் போட்டியின் முதல் சுற்றில் தோல்வி அடைந்த படோசா, முதுகுவலி காரணமாக அதன் பிறகு எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- முதல் சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை படோசா தோல்வி அடைந்தார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, பிரிட்டனின் கேடி பவுல்டர் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-2 என பிரிட்டன் வீராங்கனை வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பவுலா படோசா 2வது செட்டை 6-3 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பவுல்டர் 6-4 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள பவுலா படோசா தொடரில் இருந்து வெளியேறினார்.
- 2-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பானிஷ் வீராங்கனை பவுலா படோசா மற்றும் அமெரிக்கா வீராங்கனை எம்மா நவரோ ஆகியோர் மோதினர்.
- இந்த ஆட்டத்தின் முதல் செட் பரபரப்பாக சென்றது.
பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பானிஷ் வீராங்கனை பவுலா படோசா கிபர்ட் மற்றும் அமெரிக்கா வீராங்கனை எம்மா நவரோ ஆகியோர் மோதினர்.
இந்த பரபரப்பான ஆட்டத்தில் முதல் செட்டை பவுலா 7-2 என்ற கணக்கிலும் 2-வது செட்டை 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். இதன்மூலம் பவுலா அடுத்த சுற்று முன்னேறினார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
- பெண்கள் ஒற்றையரில் ஸ்பெயின் வீராங்கனை தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் ஸ்பெயினின் பவுலா படோசா, ஆஸ்திரியாவின் டரியா கசட்கினா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கசட்கினா 6-1, 7-5 என்ற செட்களில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீராங்கனையான பவுலா படோசா தொடரில் இருந்து வெளியேறினார்.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- இதில் காயம் காரணமாக ஸ்பெயினின் பவுலா படோசா விலகினார்.
ரோம்:
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இந்நிலையில், நேற்று நடந்த 2வது சுற்றில் ஸ்பெயினின் பவுலா படோசா, ஜப்பானின் நவோமி ஒசாகா உடன் மோத இருந்தார்.
அப்போது காயம் காரணமாக போட்டியில் இருந்து திடீரென விலகினார்.
பவுலா படோசா தரவரிசையில் 10-வது இடத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவின் மியாமி நகரில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
- மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் தோல்வி அடைந்தார்.
மியாமி:
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதல் சுற்றில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், ஸ்பெயினின் பவுலா படோசாவுடன் மோதினார்.
முதல் செட்டை சிமோனா ஹாலெப் 6-1 என எளிதில் கைப்பற்றினார். அடுத்த இரு செட்களை படோசா 6-4, 6-3 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.
ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 2 ஆண்டுக்கு பின் சிமோனா ஹாலெப் களம் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 2 வீராங்கனையான பெகுலா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பீஜிங்:
பல முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 2 வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசாவுடன் மோதினார்.
இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய படோசா 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
இவர் நாளை மறுதினம் நடைபெறும் காலிறுதியில் சீனாவின் ஷாங் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
- சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 4 வீராங்கனையான கோகோ காப் அரையிறுதிக்கு முன்னேறினார்.
பீஜிங்:
பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் நம்பர் 4 வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப், உக்ரைன் யூலியா ஸ்டாரோடப்சேவா உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 2-6 என இழந்த கோகோ காப் அடுத்த இரு செட்களை 6-2, 6-2 என கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் ஸ்பெயினின் பவுலா படோசா, சீனாவின் ஷாங் உடன் மோதினார். இதில் 6-1, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
நாளை மறுதினம் நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் கோகோ காப், படோசாவை எதிர்கொள்கிறார்.
- நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
- இதில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா வெற்றி பெற்றார்.
பீஜிங்:
நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் செக் நாட்டின் கரோலினா முச்சோவா, ரோமானியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியன் உடன் மோதினார்.
இதில் முச்சோவா 6-2, 6-1 என எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, சீன வீராங்கனை வாங் ஜி யு உடன் மோதினார். இதில் படோசா முதல் செட்டை 6-7 (4-7)இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட படோசா அடுத்த இரு செட்களை 6-1, 6-2 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
- நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
- இதில் செக் வீராங்கனை முச்சோவா வெற்றி பெற்றார்.
பீஜிங்:
நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் செக் நாட்டின் கரோலினா முச்சோவா, ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 2-6 என இழந்த முச்சோவா, அடுத்த இரு செட்களை 6-2, 6-3 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, பிரேசில் வீராங்கனை ஹதாத் மையா உடன் மோதினார்.
இதில் படோசா 6-3, 6-2 என எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 4 வீராங்கனையான படோசா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
சிட்னி:
பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நம்பர் 4 வீராங்கனையும், ஸ்பெயினைச் சேர்ந்த பவுலா படோசா, ரஷிய-அமெரிக்க வீராங்கனையான எலினா அவனேசியான் உடன் மோதினார்.
இதில் படோசா 3-6, 6-1, 2-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை படோசா வெற்றி பெற்றார்.
சிட்னி:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 3 வீராங்கனையும், அமெரிக்காவைச் சேர்ந்தவருமான கோகோ காப், பிரிட்டனின் ஜோடி அன்னா உடன் மோதினார். இதில் கோகோ காப் 6-3, 7-5 என்ற நேர் செட்களில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் பவுலா படோசா, ஆஸ்திரேலியாவின் டாலியா கிப்சனுடன் மோதினார். இதில் படோசா 6-1, 6-0 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.






