என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "comedian"

    • சதீஷ் ஷா 1970 களில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.
    • நகைச்சுவைத் தொடரில் 55 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து சதிஷ் ஷா பாராட்டைப் பெற்றார்.

    பல பாலிவுட் படங்கள் மட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து புகழ்பெற்ற நகைசுவை நடிகர் சதிஷ் ஷா (74) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

    இதனை அவரது நெருங்கிய நண்பரும் தயாரிப்பாளருமான அசோக் பண்டிட் உறுதிப்படுத்தியுள்ளார்.

    1951 ஆம் ஆண்டு குஜராத்தி குடும்பத்தில் பிறந்த சதீஷ் ஷா 1970 களில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.

    1984 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவைத் தொடரான யே ஜோ ஹை ஜிந்தகி மூலம் சதிஷ் ஷா புகழ் பெற்றார். அதில் அவர் 55 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டைப் பெற்றார்.

    தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, ஹம் ஆப்கே ஹைன் கோன்..!, ஹீரோ நம்பர் 1, மைன் ஹூன் நா மற்றும் ஃபனா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் சதிஷ் ஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    • ஜாவா சுந்தரேசன் கதாபாத்திரம் பிற்காலத்தில் சமூக வலைத்தளங்களில் மீம் டெம்ப்லேட்டாக மாறியது.
    • இயக்குநர் சிம்புதேவனைச் சந்தித்த நடிகர் சாம்ஸ் தன் பெயரை ஜாவா சுந்தரேசன் என மாற்றிக்கொள்ள ஒப்புதல் கேட்ட விடியோ வெளியாகியுள்ளது.

    சிம்புதேவன் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு திரைப்படம் அறை எண் 305-ல் கடவுள். நடிகர்கள் பிரகாஷ் ராஜ், எம். எஸ்.பாஸ்கர், சந்தானம், சாம்ஸ் உள்ளிட்டோர் நடித்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதில் நகைச்சுவை நடிகர் சாம்ஸ் ஏற்று நடித்த ஜாவா சுந்தரேசன் கதாபாத்திரம் பிற்காலத்தில் சமூக வலைத்தளங்களில் மீம் டெம்ப்லேட்டாக மாறியது.

    படத்தின் தொடக்கத்தில் சிறு போர்ஷனில் வந்திருந்தாலும் ஜாவா படித்து குறுகிய காலத்தில் மிகப்பெரிய மென்பொருள் வல்லுநராக மாறியிருப்பார். 'கலக்குப்பா கலக்கு' என்று சந்தானம் கூறும் டயலாக்கும் பேமஸானது. இதனால் நடிகர் சாம்ஸ் ரசிகர்கள் மனதில் ஜாவா சுந்தரேசன் என்றே பதிந்து விட்டார்.

    இந்த நிலையில், இயக்குநர் சிம்புதேவனைச் சந்தித்த நடிகர் சாம்ஸ் தன் பெயரை ஜாவா சுந்தரேசன் என மாற்றிக்கொள்ள ஒப்புதல் கேட்ட விடியோ வெளியாகியுள்ளது.

    அவரும் அதற்கு ஒப்புதல் கொடுத்து வாழ்த்தியுள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்து வரும் சாம்ஸ் அவர் திரைவாழ்வில் முக்கியமான கதாபாத்திரமாக அமைந்த ஜாவா சுந்தரேசன் என்ற பெயரையே தனக்கு சூட்டிக் கொண்டது கவனம் பெற்றுள்ளது. செல்லும் இடமெல்லாம் தன்னை ஜாவா சுந்தரேசன் என்றே அழைப்பதால் அவர் இந்த முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.   

    • நடிகர் கிங்காங்கின் மகள் கீர்த்தனாவின் திருமணம் சென்னையில் நடைபெற்றது.
    • சிவகார்த்திகேயன் நேரடியாக கிங்காங் வீட்டுக்கே சென்று சர்ப்ரைஸ் கொடுத்தார்.

    நடிகர் கிங்காங் பல்வேறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர். கிங்காங் என்ற கதாப்பத்திரத்தில் சினிமாவில் அறிமுகமானதால், அதே பெயரிலேயே அழைக்கப்டுகிறார்.

    கலா என்ற பெண்ணை திருமனம் செய்த கிங்காங்கிற்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், இவரின் மகள் கீர்த்தனாவின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    இதனையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் நேரடியாக கிங்காங் வீட்டுக்கே சென்று சர்ப்ரைஸ் கொடுத்து மணமக்களை வாழ்த்தினார்.

    இந்நிலையில், நடிகர் கிங்காங் மற்றும் அவரது மகள், மருமகன் ஆகியோர் விஜய் சேதுபதியின் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அங்கு மணமக்களை நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது தொடர்பான வீடியோவை கிங்காங் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.


    • அவரது குடும்பத்தினர் அறுவை சிகிச்சைக்கான பணத்தை திரட்ட முயன்றனர்.
    • பல தெலுங்கு படங்களில் வில்லன் கேங்கில் காமெடி பாத்திரத்தை ஏற்று நடித்து பிரபலமடைந்தார்.

    பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் வெங்கட் ராஜ் என்ற "Fish வெங்கட்" சிறுநீரக செயலிழப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 53.

    சமீபத்தில் சிறுநீரகக் கோளாறு மோசமடைந்ததால் வெங்கட் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேணடி இருந்தது. அவரது குடும்பத்தினர் அறுவை சிகிச்சைக்கான பணத்தை திரட்டவும், பொருத்தமான சிறுநீரகம் கிடைக்கவும் முயற்சித்தனர். இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் ஐசியூவில் அவருக்கு டயாலிசிஸ் நடந்து வந்தது. 

    பவன் கல்யாண் உள்ளிட்டோர் நிதி உதவி அளித்த போதிலும், சரியான நேரத்தில் சிறுநீரகம் கிடைக்கவில்லை. இந்நிலையில்  நேற்று இரவு மருத்துவமனையிலேயே அவர் காலமானார்.

    பல தெலுங்கு படங்களில் வில்லன் கேங்கில் காமெடி பாத்திரத்தை ஏற்று நடித்து பிரபலமடைந்தார். தனித்துவமான தெலுங்கானா பகுதி தெலுங்கு உச்சரிப்பு மற்றும் டைமிங் காமெடியில் வெங்கட் தேர்ந்தவர் ஆவார்.

    இளம் வயதில் சந்தையில் மீன் விற்று தனது வாழ்க்கையை நடத்தினார். இதன்மூலம் அவருக்கு Fish வெங்கட் என்ற பெயர் வந்தது. அவரது மறைவு தெலுங்கு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • பெசன்ட் நகரில் உள்ள ஆறுபடை முருகன் கோவிலில் நடிகர் கிங்காங் மகளின் திருமணம் நடைபெற்றது.
    • இதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    நடிகர் கிங்காங் பல்வேறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர். கிங்காங் என்ற கதாப்பத்திரத்தில் சினிமாவில் அறிமுகமானதால், அதே பெயரிலேயே அழைக்கப்டுகிறார்.

    கலா என்ற பெண்ணை திருமனம் செய்த கிங்காங்கிற்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், இவரின் மகள் கீர்த்தனா திருமணத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகார்த்திகேயன் வரை பலவேறு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்களுக்கு மகளின் திருமண அழைப்பிதழ் கொடுத்தார் கிங்காங்.

    கிங் காங் கொடுத்த திருமண அழைப்பிதழ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் இன்று காலை கிங்காங் மகள் கீர்த்தனாவுக்கும் நவீன் என்பவருக்கும் பெசன்ட் நகரில் உள்ள ஆறுபடை முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினர். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்களும் கலந்து கொண்டார்.

    • கிங் காங் கொடுத்த திருமண அழைப்பிதழ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
    • பெசன்ட் நகரில் உள்ள ஆறுபடை முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

    நடிகர் கிங்காங் பல்வேறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர். கிங்காங் என்ற கதாப்பத்திரத்தில் சினிமாவில் அறிமுகமானதால், அதே பெயரிலேயே அழைக்கப்டுகிறார்.

    கலா என்ற பெண்ணை திருமனம் செய்த கிங்காங்கிற்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், இவரின் மகள் கீர்த்தனா திருமணத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகார்த்திகேயன் வரை பலவேறு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்களுக்கு மகளின் திருமண அழைப்பிதழ் கொடுத்தார் கிங்காங்.

    கிங் காங் கொடுத்த திருமண அழைப்பிதழ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் இன்று காலை கிங்காங் மகள் கீர்த்தனாவுக்கும் நவீன் என்பவருக்கும் பெசன்ட் நகரில் உள்ள ஆறுபடை முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

    • தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் சுமார் நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
    • 76 வயதான நடிகை பிந்து கோஷ், கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்தார்.

    பிரபல நகைச்சுவை நடிகை பிந்து கோஷ் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.

    1980-களில் ரஜினி, கமல்ஹாசன், சத்யராஜ், பிரபு என முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவையில் கலக்கியவர் நடிகை பிந்து கோஷ்.

    இவர் நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா. தொடர்ந்து, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் சுமார் நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

    76 வயதான நடிகை பிந்து கோஷ், கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்தார்.

    இந்நிலையில், நடிகை பிந்து கோஷ் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

    • ஏ 1 படத்தில் இவர் நடித்த அனைத்து நகைச்சுவை காட்சிகளும் ஹிட் ஆனது.
    • நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்தார்.

    தமிழ் சின்னத்திரையில் "லொள்ளு சபா" என்கிற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் காமெடி நடிகர் சேஷூ. இவர் தனது தனித்துவமான நகைச்சுவை பாணியைக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

    சந்தானம் நடிக்கும் பெரும்பாலான படங்களில் நடிகர் சேஷு நடித்துள்ளார்.

    ஏ 1 படத்தில் இவர் நடித்த அனைத்து நகைச்சுவை காட்சிகளும் ஹிட் ஆனது. முக்கியமாக "அச்சச்சோ அவரா பயங்கரமான ஆள் ஆச்சே" என்று அவர் நடித்த காட்சிகள் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.

    இதற்கு அடுத்து  வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் அவர் நடித்த காட்சிகள் அனைவராலும் கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில், நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்தார். அவரின் சிகிச்சைக்காக பலர் நிதி திரட்டி கொடுத்தனர்.

    ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இச்செய்தி திரைப்பட கலைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சுமார் 350 படங்களிலும் நடிகராகவும் மற்றும் 150 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்
    • ‘பிதாமகன்’ படத்தில் லைலாவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.

    தமிழ் சினிமாவின் பிரபலங்கள் அடுதடுத்து உயிரழந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். கடந்த வாரம் நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார். இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் டேனியல் பாலாஜி காலமானார். அச்சோகத்தில் இருந்து மீண்டுவரமால் இருந்த திரையுலகம் இப்போழுது அடுத்து மீண்டும் ஒரு உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளது.

    பல படங்களில் துணை நடிகராகவும், காமெடி நடிகராகவும் நடித்து பிரபலமானவர் நடிகர் விஸ்வேஷ்வர ராவ். திடீர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 62.

     

    விக்ரம் -சூர்யா நடிப்பில் வெளியான'பிதாமகன்' படத்தில் லைலாவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.உன்னை நினைத்து படத்திலும் நகைச்சுவை நடிகராக நடித்திருப்பார்.

     

    தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்ர நடிகராகவும் நடித்துள்ளார். சுமார் 350 படங்களிலும் நடிகராகவும் மற்றும் 150 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவரது உடல் நாளை தகனம் செய்யப்படவுள்ள நிலையில், சிறுசேரியில் உள்ள இவரது வீட்டில் பொதுமக்கள் மற்றும் திரையுலக நண்பர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    • காமெடியன் மேடையில் பலதரப்பட்ட விஷயங்களைப் பேசியபடி பார்வையாளர்களை சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார்
    • தான் சிரிப்பூட்டவே விரும்பியதாகவும், அது உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் என்றும் அல்பெர்டோவிடம் வேண்டியுள்ளார்

    ஸ்பெயினில் உள்ள அளிகாண்டே நகரில் நேற்று இரவு நடந்த ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியின்போது மேடையில் ஏறி காமெடியனின் முகத்தில் நபர் ஒருவர் குத்து விட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜேமி கரவாகா என்ற ஸ்டான்ட் அப் காமெடியன் மேடையில் பலதரப்பட்ட விஷயங்களைப் பேசியபடி பார்வையாளர்களை சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார்.

    அந்த நிகழ்ச்சியில் ஆல்பர்டோ புகிலட்டோ என்ற இசைக்கலைஞரும் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு இடையில், காமெடி செய்வதாக நினைத்துக்கொண்டு ஆல்பர்டோவின் 3 மாத குழந்தை குறித்து கோபமூட்டும் வகையில், பாலியல் ரீதியாக குறிப்பிட்டு காமெடியன் ஜேமி பேசத் தொடங்கியுள்ளார்.

     

    இதனால் ஆத்திரமடைந்த ஆல்பர்டோ நேராக விறுவிறு என மேடைக்கு சென்று காமெடியன் ஜேமியின் முகத்தில் ஒரு குத்து வைத்து அவரை நிலைகுலையச் செய்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    இதனைத்தொடர்ந்து ஜேமி தனது சமூக வலைதள பக்கத்தில், தான் சிரிப்பூட்டவே விரும்பியதாகவும், அது உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் என்றும் அல்பெர்டோவிடம் வேண்டியுள்ளார். இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆல்பெர்ட்டோ ஜேமியின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எனவே தான் கடைசி போட்டியில் அவர் விலகிக்கொண்டார் என்று கருத இடமிருக்கிறது
    • ஏனெனில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவது என்பது எளிமையாக இருக்காது.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் நிறைவடைந்துள்ளது. இதில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. மோசமான பார்ம் காரணமாக இதன் கடைசி போட்டியில் ரோகித் தானாக விலகிய நிலையில், பும்ரா கேப்டன் ஆனார்.

    முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால் ரோகித் தலைமையில் விளையாடிய அதற்கடுத்த 3 போட்டிகளில் 2-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் ஆனது. ரோகித் சர்மா சுமாராக விளையாடியதுதான் அதற்கு முக்கிய காரணமாக என்று கூறப்படுகிறது. எனவே தான் கடைசி போட்டியில் அவர் விலகிக்கொண்டார் என்று கருத இடமிருக்கிறது

    மேலும் முடிந்தவுடன் அவர் ஓய்வு அறிவிப்பார் என்ற யூகங்களும் எழுந்தன. ஆனால், கடைசி போட்டியில் இருந்து மட்டுமே விலகியுள்ளேன் என்றும் இப்போதைக்கு ஓய்வை பெறப்போவதில்லை என்றும் ரோகித் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான சைமன் கேட்டிச் கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

    அதாவது, ரோகித் சர்மா இன்னும் ரன்கள் எடுக்கும் பசியுடன்தான் விளையாடப் போகிறாரா? என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். ஏனெனில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவது என்பது எளிமையாக இருக்காது.

     

    இங்கிலாந்து அணியிலும் சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்கள் வந்துள்ளனர். கஸ் அட்கின்சன் மற்றும் பிரைடன் கார்ஸ்ஆகியோர் சிறப்பாக பந்து வீசுபவர்கள்.

    எனவே என்னை பொறுத்தவரை ரோகித் சர்மா தொடர்ந்து விளையாட முடிவு செய்தால் அது நிச்சயம் அவரது கெரியரிலேயே கடினமான தொடராக அது அமையலாம்.

    என்னைக் கேட்டால், ரோகித் சர்மா பேசுவதை வைத்து பார்க்கும்போது அவர் ஓய்வுபெற்ற பிறகு ஸ்டாண்ட் அப் காமெடியனாக மாறலாம் என்று அட்வைஸ் செய்துள்ளார்

    • பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    • மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்தி திரைத்துறையில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் அறியப்படுபவர் நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா(வயது 59). பிரபல ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியான, தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்ச் முதல் சீசனில் பங்கேற்று அதன்மூலம் அங்கீகாரம் பெற்றவர்.

    அதன்பின்னர் மெயினி பியார் கியா, பாஸிகர், பிக் பிரதர், பாம்பே டூ கோவா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவர் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி காலை டெல்லியில் உள்ள ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தார். அதன்பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

     

    40 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் ராஜூ ஸ்ரீவஸ்தவா இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், " ராஜு ஸ்ரீவஸ்தவா நம் வாழ்வை சிரிப்பு, நகைச்சுவை மற்றும் நேர்மறை உணர்ச்சிகளால் பிரகாசமாக்கினார். அவர் விரைவாக நம்மை விட்டு பிரிந்துவிட்டார். ஆனால் அவர் பல ஆண்டுகளாக அவரது செழுமையான பணியால் எண்ணற்ற மக்களின் இதயங்களில் தொடர்ந்து வாழ்வார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், "ராஜு ஸ்ரீவஸ்தவா இப்போது நம்முடன் இல்லை. அவரது ஆன்மா சாந்தியடைய உ.பி. மக்கள் சார்பாக பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

    தொடர்ந்து, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ×