search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Laila"

    • அறிவழகன் நகுல் நடிப்பில் வெளிவந்த வல்லினம் மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த பார்டர், குற்றம் 23 திரைப்படத்தை இயக்கினார்.
    • ஹாரர் கதைக்களப் பின்னணியில் இத்திரைப்படம் அமைந்துள்ளது.

    2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த 'ஈரம்' படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை ஆதி வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார். இயக்குனர் அறிவழகனுக்கு ஈரம் திரைப்படம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. அதற்கடுத்து அறிவழகன் நகுல் நடிப்பில் வெளிவந்த வல்லினம் மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த பார்டர், குற்றம் 23 திரைப்படத்தை இயக்கினார்.

    ஆதி தற்பொழுது மீண்டும் ஈரம் படத்திற்கு பிறகு அறிவழகன் இயக்கும் 'சப்தம்' படத்தில் நடித்துள்ளார். ஹாரர் கதைக்களப் பின்னணியில் இத்திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் லக்ஷ்மி மேனன் , சிம்ரன், லைலா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்தில் ஆதி ஒரு மருத்துவ கல்லூரி ப்ரொஃபெசராக காணப்படுகிறார். அந்த கல்லூரியில் ஒரு அமானுஷ்ய சத்தம் கேட்டுக் கொண்டே இருப்பது போன்ற காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளன. வெரும் சத்தத்தை வைத்தே திகிலாக காட்சிப் படுத்தியுள்ளன. சப்தம் திரைப்படம் இந்த கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த ’ஈரம்’ படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை ஆதி வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார்.
    • தற்பொழுது ஈரம் படத்தின் இயக்குநர் அறிவழகன் இயக்கும் ’சப்தம்’ படத்தில் நடித்துள்ளார்.

    நடிகர் ஆதி 2007 ஆம் ஆண்டு வெளிவந்த 'மிருகம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகினார். பின் 2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த 'ஈரம்' படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை ஆதி வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார்.

    ஈரம் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து அய்யனார், அரவான், கோச்சடையான், வல்லினம், ரங்கஸ்தலம், மரகத நாணயம் ஆகிய படங்களில் நடித்தார். பிறகு, நடிகை நிக்கி கல்ரானியை 2022 ஆம் ஆண்டு மணமுடித்தார்.

    தற்பொழுது ஈரம் படத்தின் இயக்குநர் அறிவழகன் இயக்கும் 'சப்தம்' படத்தில் நடித்துள்ளார். ஹாரர் கதைக்களப் பின்னணியில் இத்திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் லக்ஷ்மி மேனன் , சிம்ரன், லைலா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. சப்தம் படத்தின் டீசரை நடிகர் அருண் விஜய், தக்குபாடி வெங்கடேஷ் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் அவர்களின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடவுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சுமார் 350 படங்களிலும் நடிகராகவும் மற்றும் 150 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்
    • ‘பிதாமகன்’ படத்தில் லைலாவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.

    தமிழ் சினிமாவின் பிரபலங்கள் அடுதடுத்து உயிரழந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். கடந்த வாரம் நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார். இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் டேனியல் பாலாஜி காலமானார். அச்சோகத்தில் இருந்து மீண்டுவரமால் இருந்த திரையுலகம் இப்போழுது அடுத்து மீண்டும் ஒரு உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளது.

    பல படங்களில் துணை நடிகராகவும், காமெடி நடிகராகவும் நடித்து பிரபலமானவர் நடிகர் விஸ்வேஷ்வர ராவ். திடீர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 62.

     

    விக்ரம் -சூர்யா நடிப்பில் வெளியான'பிதாமகன்' படத்தில் லைலாவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.உன்னை நினைத்து படத்திலும் நகைச்சுவை நடிகராக நடித்திருப்பார்.

     

    தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்ர நடிகராகவும் நடித்துள்ளார். சுமார் 350 படங்களிலும் நடிகராகவும் மற்றும் 150 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவரது உடல் நாளை தகனம் செய்யப்படவுள்ள நிலையில், சிறுசேரியில் உள்ள இவரது வீட்டில் பொதுமக்கள் மற்றும் திரையுலக நண்பர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    • இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் உருவாகி வரும் படம் சப்தம்.
    • சமீபத்தில் இப்படத்தில் லைலா இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான 'ஈரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தமிழ் சினிமாவில் வெளியான ஹாரர் படங்களின் வரிசையில் முக்கிய இடத்தைப் பிடித்தது. இதில் நடிகர் ஆதி, சிந்து மேனன், நந்தா துரைராஜ், சரன்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமனின் இசையில் 'மழையே மழையே' பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தை இயக்குனர் ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்திருந்தது.

     

    லைலா - சப்தம்

    லைலா - சப்தம்

    சமீபத்தில் ஈரம் படத்தின் கூட்டணியான இயக்குனர் அறிவழகன், நடிகர் ஆதி மற்றும் இசையமைப்பாளர் தமன் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சப்தம் என்று பெயரிடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. சில தினங்களுக்கு முன்பு நடிகை லைலா இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.


    சிம்ரன் - சப்தம்
    சிம்ரன் - சப்தம்

    இந்நிலையில் சப்தம் திரைப்படத்தில் நடிகை சிம்ரன் இணைந்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு நடிகர் ஆதி அறிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தில் தொடர்சியாக நடிகைகள் இணைந்து வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    • கார்த்தியின் 'சர்தார்' திரைப்படம் அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
    • இப்படத்தில் ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும் ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 21-ம் தேதி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

     

    மாலைமலர் பேட்டி

    மாலைமலர் பேட்டி

    இந்நிலையில் சர்தார் படம் குறித்து ரெஜிஷா விஜயன், லைலா மற்றும் மாஸ்டர் ரித்விக் ஆகியோர் மாலைமலர் நேயர்களுக்காக பிரத்யேக பேட்டி அளித்தனர். இதில் ரெஜிஷா விஜயன் பேசுகையில், "கர்ணன் படத்தின் ரிலீசுக்கு முன் வெளியான தட்டான் தட்டான் பாடலை கேட்ட பிறகு பி.எஸ்.மித்ரன் சார் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு சர்தார் படத்தின் கதையை சொன்னார். அதை கேட்ட பிறகு அந்த கதையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். இந்த கதை இப்போது வரைக்கும் நாம் விவாதிக்காத ஒரு கதை. அதே நேரம் ரொம்ப ஜாலியா, கமர்சியலா தியேட்டர்ல பார்க்குற மாதிரி படத்தை எடுத்து வைத்திருக்கிறோம். எனக்கு இதில் ரொம்ப முக்கியமான ஒரு கதாப்பாத்திரம். படத்தை அனைவரும் பாருங்கள்" என்றார்.

    கார்த்தி மற்றும் சூர்யாவுடன் நடித்தது குறித்தும் அந்த அனுபவம் குறித்தும் ரெஜிஷா விஜயன்-லைலாவிடம் கேட்டபோது, இருவரும் பொதுவான கருத்தையே கூறினார்கள். கார்த்தியும் சூர்யாவும் மிகவும் அன்பானவர்கள், மென்மையான மனிதர்கள், கண்ணியமானவர்கள் என்றனர்.



    என்கிட்ட எஸ்கேப் ஆன ஒரே ஹீரோ அவர்தான் என்று நடிகை லைலா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். #Laila #lailaMehdin
    90-களின் பிரபல கதாநாயகிகள் சமீபத்தில் வித்தியாசமான வேடங்களில் ரீஎன்ட்ரி ஆகின்றனர். அந்த வரிசையில் லைலாவும், ஆலிஸ் என்ற படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார்.

    தனது இணைய தள பக்கத்தில் விஜய்யுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட லைலா, ‘எங்கிட்ட எஸ்கேப் ஆன ஒரே ஹீரோ’ என்று அந்த படத்துக்கு கருத்து கொடுத்ததுடன், இது என்ன திரைப்படம் என்று கண்டுபிடியுங்கள் என சவாலும் விட்டிருந்தார்.



    விஜய்யோடு லைலா நடிக்கவில்லையே அப்புறம் எப்படி இந்த படம் என்று பலரும் குழப்பிக்கொள்ள ஒரு சிலர் சரியாக கணித்தனர். விக்ரமன் இயக்கிய, ‘உன்னை நினைத்து’ படத்தில் முதலில் விஜய்தான் நடித்தார். பின்னர் அப்படத்திலிருந்து விலகினார். பிறகு அந்த வேடத்தில் சூர்யா நடித்தார். விஜய்யுடன் அப்படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தைத்தான் லைலா பகிர்ந்திருக்கிறார் என சிலர் பொருத்தமாக விடை கூறி லைலாவின் பாராட்டை பெற்றுள்ளனர்.
    தீனா, தில் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த லைலா, விரைவில் புதிய அவதாரம் எடுக்க இருப்பதாக பேட்டியளித்திருக்கிறார். #Laila
    கள்ளழகர் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை லைலா. பார்த்தேன் ரசித்தேன், தீனா, தில் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து தன் குழந்தைத்தனமான முகத்தினால் வசீகரித்தார். திருமணம் ஆகி சினிமாவில் இருந்து ஒதுங்கியவர் அளித்திருக்கும் பேட்டி வருமாறு:-

    திருமணத்திற்குப் பிறகு ஏன் நடிக்க வில்லை?

    எனக்கு நடிப்பதற்கு ஆர்வம் இருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளிலும் நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் சுவாரசியமான வேடமாக இல்லை. நான் இப்போது மிக கவனமாக தேர்ந்தெடுத்து நல்ல கதாபாத்திரங்களை மட்டுமே நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். இப்படித்தான் நடிப்பேன் என குறிப்பிட்டு சொல்ல முடியாது. வில்லி வேடமோ, நகைச்சுவை பாத்திரமோ, குணச்சித்திர வேடமோ எதுவாக இருந்தாலும் ரசிக்கும்படியாக இருக்க வேண்டும். அவ்வளவு தான். அதுபோன்ற கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறேன்.

    நடிப்பு தவிர வேறு ஆர்வம் இல்லையா?

    இருக்கிறது. இயக்குனராக ஆசை இருக்கிறது. ஏதாவது ஒரு வி‌ஷயம் என்னை ஈர்த்தால் அதனை கதையாக்கி படம் எடுக்க தொடங்குவேன். ஆனால் தயாரிப்பில் ஈடுபடும் எண்ணம் மட்டும் இல்லை.

    தமிழ் சினிமா எப்படி இருக்கிறது?

    நான் நடித்தபோது இருந்ததைவிட நல்ல ஆரோக்கியமானதாக இருக்கிறது. அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இருக்கிறது. பெண்களை மையப்படுத்தும் படங்கள் அதிகமாக வரத் தொடங்கியுள்ளன. இந்த மாற்றங்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

    பெண்களை அச்சுறுத்தும் பாலியல் தொல்லைகள்?

    இப்போது வரக்கூடிய செய்திகள் கேட்கவே பயங்கரமாக உள்ளன. இதுபோன்ற வி‌ஷயங்களுக்கு முடிவுகட்ட பெண்கள் களத்தில் இறங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. எல்லா துறைகளிலும் பெண்கள் பாதிக்கப்படுவது வருத்தமளிக்கும் வி‌ஷயம். சினிமாத்துறை மட்டுமல்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல் என எல்லா இடங்களிலுமே இது நடக்கிறது. இது ஆண்களின் சுயலாபத்திற்காக பெண்களை பயன்படுத்திக் கொண்டதற்கு எதிராக பெண்கள் நிற்கும் காலம். ஒரு ஆண் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்தல் என்பது இழிவானது, மலிவானது.

    எழுத்தாளராகி விட்டீர்களாமே?

    ஆமாம், நண்பர் ஒருவருடன் இணைந்து புத்தகம் எழுதி வருகிறேன். அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளேன். பெண்களின் போராட்டம் தான் என் புத்தகத்தின் மையக்கரு. பல பெண்களின் போராட்டங்களை ஆராய்ச்சி செய்து இந்த புத்தகத்தை எழுதியுள்ளேன்.

    வீட்டில் லைலா எப்படி?

    இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருப்பதில் மகிழ்ச்சியான பெண்ணாக உணர்கிறேன். வீட்டு வேலைக்கு ஆள் வைக்காமல் நானே குழந்தைகளை பார்த்துக்கொள்கிறேன். இது ஒவ்வொரு அம்மாவின் கடமை. அதை சரியாக நிறைவேற்றி வருகிறேன்.
    ×