search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Memes"

    வைகோவின் தேர்தல் ராசியை மீம்ஸ் மூலம் விமர்சித்தவர்களுக்கு ம.தி.மு.க.வினர் சுவரொட்டி மூலம் பதிலடி கொடுத்துள்ளனர்.
    மதுரை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 38 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இந்த கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட கணேசமூர்த்தியும் வெற்றி பெற்றார்.

    தி.மு.க. கூட்டணி வெற்றிக்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    இந்த நிலையில் வைகோ இருக்கும் கூட்டணி வெற்றி பெறாது என்றும், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஆகியவற்றில் வைகோ இடம் பெற்றிருந்த கூட்டணி தோல்வியடைந்ததால் அவரது அரசியல் ராசியை விமர்சித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்கள் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வசனங்களுடன் பல்வேறு மீம்ஸ்களை வெளியிட்டனர்.

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போதும், தேர்தல் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்பும் வைகோவை விமர்சித்து ஏராளமான மீம்ஸ்கள் வெளியிடப்பட்டன. இது ம.தி.மு.க.வினருக்கு மனவேதனை அளித்தது.

    இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை முடிவில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றதால் மகிழ்ச்சி அடைந்த ம.தி.மு.க.வினர் ‘வைகோவின் ராசி எப்புடி?’ என்ற தலைப்பிட்டு மதுரையில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அந்த சுவரொட்டியில் வைகோவின் படத்துடன் கருணாநிதி, ஸ்டாலின் படங்களும் இடம் பெற்றுள்ளன.

    தமிழகம் திராவிட இயக்கத்தின் கோட்டை. கலைஞரின் தம்பிக்கு ராசி முக்கியமில்லை. கொள்கையும், வெற்றியும் தான் முக்கியம் என்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.

    இந்த சுவரொட்டி மூலம் வைகோவை தேர்தல் ராசியில்லாதவர் என்று சமூக வலைதளங்களில் விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளதாக ம.தி.மு.க.வினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இது ஒருபுறம் இருந்தாலும், வைகோவும், ராகுல் காந்தியும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த முறை வைகோவின் ராசி ராகுலை காவு வாங்கி விட்டது என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் மீண்டும் மீம்ஸ்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
    சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டது தொடர்பாக ருசிகர பதிவுகள் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் பரபரப்பாக காணப்படுகிறது. #AssemblyElection #BJP #MemesJokes
    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. இந்த தேர்தல் முடிவுகளை வைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘மீம்ஸ்’கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து உள்ளன.

    இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டவர் யோகி ஆதித்யநாத். உத்தரபிரதேச முதல்-மந்திரியான இவர், பல்வேறு இடங்களின் பெயரை மாற்றி வருகிறார். இதை தேர்தல் முடிவுகளுடன் தொடர்புபடுத்தி பல மீம்ஸ்கள் வலம் வருகின்றன. அதாவது, ‘தோல்வியை, வெற்றி என பெயர் மாற்றுமாறு மோடியிடம் ஆதித்யநாத் கேட்டுக்கொள்வார்’, ‘காங்கிரஸ் கட்சியின் பெயரை பா.ஜனதா என மாற்றுவார்’ என்று வலைத்தளவாசிகள் கிண்டல் செய்திருந்தனர்.

    இந்த மாநிலங்களில் கடந்த 2003-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று இருந்தது. அப்போது குஜராத் முதல்-மந்திரியாக இருந்த பிரதமர் மோடி, ‘காங்கிரஸ் இல்லா இந்தியாவின் தொடக்கம் இது’ என டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை திவ்யா ஸ்பந்தனா, இதில் ‘காங்கிரஸ்’ என்ற பெயரை ‘பா.ஜனதா’ என மாற்றி மறுடுவீட் பண்ணி இருந்தார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ‘பப்பு’ என பா.ஜனதாவினர் கிண்டலாக அழைத்து வருகின்றனர். இதை குறிப்பிட்டு பிரபல எழுத்தாளர் சோபா டே, ‘பப்பு தேர்வில் வெற்றி பெற்றது மட்டுமின்றி, உடனடி பி.எச்.டி. பட்டம் ஒன்றையும் பெற்றிருக்கிறார். இதே நிலையில் அவர் தொடர்வார் என நம்புவோம். நாடாளுமன்ற தேர்தல் முழுவதும் இந்தியாவுக்கு அவர் தேவை’ என்று கூறியிருந்தார்.

    காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், ‘பா.ஜனதாவினர் இன்று அதிகம் வருத்தப்படுவதில் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் வாக்காளர்கள் அவர்களுக்கு முத்தலாக் கொடுத்து விட்டனர்’ என்று கேலி செய்திருந்தார்.

    இது போன்ற ருசிகர பதிவுகளால் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் பரபரப்பாக காணப்படுகிறது. #AssemblyElection #BJP #MemesJokes
    ×